search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.
    • காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    துன்பங்கள் நீங்கி மன அமைதி தரும் திருநந்தீஸ்வரர்

    குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திரு நந்திக்கரையில் திருநந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்த கோவிலை விட ஏற்ற கோவில் எதுவும் இல்லை எனலாம்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    காளையை சிவபெருமான் அடக்கி இழுத்து வந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது.

    காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.

    27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்துக்கு ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதை குறிக்கும் வகையில் மண்டபத்தை சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    பொதுவாக பரிகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது.

    ஆனால் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது.

    குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

    இந்த கோவிலில் சிவனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி மன அமைதி கிடைப்பதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள குளத்து நீர் இந்நாள் வரை வற்றியதாக இல்லை.

    பகவான் இங்கு சுயம்பாக காட்சி தருவதால் முப்பத்தி முக்கோடி தேவர்களும் நேரடியாக தொண்டு செய்வதாக நம்பப்படுகிறது.

    இக்கோவிலில் அணையா விளக்கு ஒன்று காணப்படுகிறது.

    இவ்விளக்கில் எண்ணை தொடர்ந்து ஊற்றி வரும் பக்தர்களின் வேண்டுதல்களையும், இனி எண்ணை ஊற்ற வேண்டும் என எண்ணுபவர்களுடைய வேண்டுதல்களையும் இறைவன் ஏற்று அருள்புரிவார் என்பது ஐதீகம்.

    • மனிதனை நரன் என்பர். அத்துடன் சிங்கமாகிய சிம்மத்தின் முகமும் இணைந்ததால் நரசிம்மர்
    • குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.

    எதிரிகள் தொல்லையை தடுக்கும் மனித வடிவ நரசிம்மர்

    இரணியனை வதம் செய்வதற்காக சிம்ம முகம், மனித உடலுடன் மகாவிஷ்ணு ஒரு தூணில் இருந்து வெளிப்பட்டார்.

    மனிதனை நரன் என்பர். அத்துடன் சிங்கமாகிய சிம்மத்தின் முகமும் இணைந்ததால் நரசிம்மர் என பெயர் பெற்றார்.

    திண்டுக்கல் அருகில் உள்ள வேடசந்தூரில் சிம்ம முகம் இல்லாத அர்ச்சாவதார (மனிதர்களின் வழிபாட்டிற்குரிய வடிவம்) வடிவத்துடன் இவர் அருள்பாலிக்கிறார்.

    முற்காலத்தில் நரசிம்ம பக்தர்கள் சிலர் தங்கள் பகுதியில் நரசிம்மருக்கு கோயில் கட்ட விரும்பினர்.

    எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்கு தெரியவில்லை.

    இவ்வேளையில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார்.

    அதன்படியே பக்தர்கள் கோயில் எழுப்பினர்.

    பக்தரின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, சிங்க முகம் இல்லாமல், மனித முகத்துடன் காட்சி தந்ததால், பக்தர்கள் அதே அமைப்பிலேயே சிலை வடித்தனர்.

    ஆனால் சுவாமிக்கு 'நரசிம்மர்' என்று பெயர் சூட்டினர்.

    பத்ம விமானத்தின் கீழ் சுவாமி, சங்கு, சக்கரத்துடன் அபயவரத முத்திரைகள் காட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.

    இங்குள்ள ஒரு தூணில் படைப்புச் சிற்பமாக சிவலிங்கம் உள்ளது.

    குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.

    கார்த்திகை பவுர்ணமியன்று விசேஷ பூஜை நடக்கும். ஆயுள் அதிகரிக்க, திருமண தடை நீங்க சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒளியும். உடல்நலம் உண்டாகும்.

      இழந்த செல்வம் மீட்டு தரும் தென்குரங்காடுதுறை

      ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

      சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர்.

      வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான்.

      வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் "தென்குரங்காடுதுறை" என்றானது.


      • சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.
      • இங்குள்ள தல விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

      மந்த நிலையை நீக்கும் திருவலம் வில்வநாதீஸ்வரர்

      வேலூரில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்தில் வில்வநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது.

      சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.

      இதை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், மந்த புத்தி நீங்கும், தோல் சம்மந்தப்பட்ட நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

      சுவாமி, அம்மன் இருவருக்கும் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

      குடும்பத்தில் மந்த நிலையில் இருப்பவர்களை இங்கு அழைத்து வந்து சுவாமியை தரிசனம் செய்ய வைத்து வில்வம் பிரசாதமாக தருகின்றனர்.

      இதனை சாப்பிட்டவர்கள் மந்த நிலையில் இருந்து மீளப்படுவதாக கூறப்படுகிறது.

      இங்குள்ள தல விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

      அதற்கு தகுந்தார் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

      முருகனுக்கும், விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு.

      தேவாரப்பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் தொண்டை நாட்டுப்பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 10 வது தலமாக வைத்து போற்றப் பெறும் சிறப்புடையது திருவல்லம்.

      இந்த ஊருக்குள் நிலா நதி ஓடுகிறது. நதியின் கரையிலேயே கோவில் உள்ளது.

      திருமாலும், நான்முகனும், விண்ணுலகத்தார், மண்ணுலகத் தார் அனைவரும் இங்கு வந்து வணங்குவதாக கூறப்படுகிறது.

      எனவே இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படும் சிறப்பு வாய்ந்தது.

      சிவானந்த மௌனகுரு சுவாமி இங்குள்ள பலாமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார்.

      • இங்கு கணவன் மனைவியாக வந்து வழிபட்டால் இருவர் இடையே உறவு மேம்படும் என்பது ஐதீகம்.
      • உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது சான்றோர்கள் கடமை.

      கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் பாலாம்பிகா சமேத கார்கோடேஸ்வரர்

      இரு மனம் இணையும் திருமண நிகழ்வை யாராலும் மறக்க முடியாது.

      வாழ்கை துணையாக வாழ்வின் இறுதி வரை வரப்போகும் உறவை கைபிடிக்கும் உன்னதமான நாள் திருமண நாள்.

      கணவன் மனைவி என புது உறவுடன் வாழ்வை தொடங்கும் புது மணத் தம்பதியினரின் வாழ்வு வளம் பெற பல கோவில்களுக்கும் சென்று வழிபட வேண்டும் என பெரியவர்கள் கூறுகின்றனர்.

      தமிழகத்தில் அமைந்துள்ள பழமையான கோவில்கள் பல தனித்தன்மை வாய்ந்த சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன.

      வரலாற்று ஆதாரங்களுடன், புராண நிகழ்வுகளை செவி வழிச் செய்தியாக கொண்ட கோவில்கள் பல இன்றும் மக்கள் வாழ்வில் வளங்களை தந்து கொண்டிருக்கின்றன.

      அந்த வகையில் கணவன் மனைவி உறவு மேம்பட அருள் தரும் கோவிலாக விளங்குகிறது அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தில் உள்ள பாலாம்பிகா சமேத கார் கோடேஸ்வரர் திருக்கோவில்.

      இங்கு கணவன் மனைவியாக வந்து வழிபட்டால் இருவர் இடையே பாசம் அதிகரிக்கும், உறவு மேம்படும் என்பது ஐதீகம்.

      இதற்கு அடிப்படை ஆதராத்தை இந்த கோவிலின் தலவரலாறே நமக்கு கூறுகிறது.

      கிடைத்தற்கு அரிய பேரின்பத்தைப் பலரும் தேடி அலைந்த காலத்தில், சிற்றின்ப வேட்கையில் நாட்டம் கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடந்தவர்களும் இருந்தார்கள்.

      காமம் அவர்களைப் படாத பாடு படுத்தியது. இதன் காரணமாக நித்தமும் தாங்கள் அனுஷ்டிக்க வேண்டிய வழிபாடுகளையும், நியதிகளையும் பலர் மறந்து போயினர்.

      இத்தகைய காலத்தில் உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது சான்றோர்கள் கடமை அல்லவா?

      எனவே, தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று மக்களின் இந்த நிலையை மாற்றுமாறு வேண்டினார்.

      இதனால்தான் காமன் என்கிற மன்மதன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே.

      தன் கணவன் மன்மதனை மீண்டும் உயிர்பித்துத் தருமாறு ஈசனை நோக்கி தவம் இருந்தாள் அவனது துணைவியான ரதிதேவி.

      தன்னை வழிபட்ட ரதிக்கு மாங்கல்ய பிச்சை தருவதற்காகவும் அவள் பார்வைக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்பித்துத் தந்தார் ஈசன்.

      ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் ரதிவரபுரம் என்றும் காமனின் தேவியான ரதி தவம் இருந்த தலம் என்பதால், காமரதிவல்லி எனவும் அழைக்கப்படலானது.

      இதுவே பின்னாளில் காமரச வல்லி ஆகி விட்டது.

      ஊர்ப் பெயருக்கான இந்தக் கதை புராணத்தோடு நின்று போய்விடவில்லை.

      இதை மெய்ப்பிக்கும் வகையில் ரதிதேவியின் செப்புத் திருமேனி ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது.

      தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி, மாங்கல்ய பிச்சை கேட்கும் கோலத்தில் காணப்படுகிறது இந்தத் திரு மேனி.

      காமரசவல்லியில் ஒவ்வொரு மாசி மாதமும் பவுர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

      இந்த விழாவின்போது இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை ஆலயத்தில் நட்டு வைப்பார்கள்.

      இறை பக்திக்கு உட்பட்டும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும் இந்தக் கிளை எட்டே நாட்களுக்குள் மீண்டும் உயிர் பெற்று வளர்கிறது.

      ரதிதேவியின் வாழ்க்கை இங்கே துளிர்த்தது போல், இங்கே நடப்படுகிறவை மீண்டும் துளிர்க்கும் என்பதற்கு உதாரணம் இது.

      குடும்பத்தில் தம்பத்திக்குள் பிரிவினை இருப்பவர்கள், கருத்து வேற்றுமை கொண்டவர்கள், விவாகரத்தைத் தடுக்க நினைப்பவர்கள், தம்பதியரின் அன்பு பெருக வேண்டுவோர் காமரசவல்லியை வந்து வணங்கினால் சிறப்பு.

      முறையாக இங்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் சென்றால், தம்பதியர்களின் வாழ்வில் புத்தொளி பரவும் என்பது ஐதீகம்.

      ரதிதேவிக்கே மாங்கல்ய பிச்சை அளித்த திருத்தலம் என்பதால், நிலைத்த மாங்கல்ய பேறு வேண்டுவோர், இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

      ஆதி காலத்தில் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் பெருமளவில் காமரசவல்லியில் வசித்து வந்தார்களாம் எனவே, சதுர்வேதி மங்கலம் என்கிற சிறப்புப் பெயருடன் இந்த ஊர் விளங்கி வந்துள்ளது.

      ஒரு காலத்தில் இந்தத் திருக் கோவிலை அந்தணர்கள் நிர்வகித்து வந்ததாகவும், அவர்களுக்காச் சில கிராமங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன என்றும் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

      வேத பாராயணங்களும், சத்சங்கக் கூட்டங்களும் இங்கு அதிகம் நடந்துள்ளன.

      • இது சிவனும் முருகனும் ஒருவரே என்பதற்கு ஆதரமாக திகழ்கிறது.
      • பின்னர் மகன் முருகனை குருவாக ஏற்று அவரிடம் பிரணவ பொருளை உபதேசமாக பெற்றார்.

      தந்தை மகன் உறவை மேம்படுத்தும் சுவாமிமலை சுவாமி நாதசுவாமி

      ஆறுபடை முருகன் கோவில்களில் 4 வது படை வீடாக திகழ்வது சுவாமிமலை.

      இக்கோவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் அமைந்துள்ளது.

      திருப்பரங்குன்றில் முருகன் ஒளிவடிவினன்.

      திருச்செந்தூரில் அருள் வடிவினன்.

      குன்றுகளில் எல்லாம் அவன் எளிமைக் கோலம் பூண்ட இறைவன்.

      பழமுதிர் ச்சோலையில் பரந்து தோன்றும் வியாழ பகவானின் உருவினன்,

      சுவாமி மலையில் வழிபடும் அன்பருக்கெல்லாம் வேண்டியது அருளும் வரகுணன்.

      சுவாமி நாதசுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்கத்தின் ஆவுடையாராகவும், அதன் மேல் எழுந்தருளி உள்ள சுவாமிநாதமூர்த்தி பாணலிங்கமாகவும் காட்சி தருவதை காணலாம்.

      இது சிவனும் முருகனும் ஒருவரே என்பதற்கு ஆதரமாக திகழ்கிறது.

      சிவபெருமான் கோவில்களில் திருவிழா காலங்களில் பஞ்சமூர்த்திகளாக எழுந்தருளுவார்.

      அதேபோல் சுவாமி மலையில் உற்சவ காலங்களில் கணபதி வள்ளி தெய்வானையோடு சண்முகர், வள்ளி தெய்வானையோடு சுப்பிரமணியர், பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரருடன் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

      படைக்கும் தொழில் செய்யும் பிரம்மன் பிரணவப் பொருளை அறியாமல் இருப்பதை கண்ட முருகப் பெருமான் அவரது தலையில் குட்டி சிறைப்படுத்தினார்.

      இதனை அறிந்த சிவபெருமான் முருகனிடம் கோபம் கொள்வது போல் நடித்து கண்டித்தார்.

      பின்னர் மகன் முருகனை குருவாக ஏற்று அவரிடம் பிரணவ பொருளை உபதேசமாக பெற்றார்.

      பின்னர் பிரம்மனுக்கும் முருகன் பிரவண பொருளை உபதேசித்ததாக சுவாமி மலை தலபுராணம் கூறுகிறது.

      சுவாமிமலையில் தந்தையும் மகனும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஒருவரை ஒருவர் உணர்ந்து இணக்கமாக நடந்து கொண்டதால் சுவாமிமலை சுவாமி நாதசுவாமியை தரிசனம் செய்தால் மனவேறுபாடு கொண்ட தந்தை மகன் உறவில் ஒற்றுமை ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

      அதனை பின்பற்றி வழிபாடு செய்து சென்றவர்கள் வாழ்வில் நல்ல பலனை கண்டு இந்த உண்மையை ஒப்பு கொண்டு உள்ளனர்.

      எனவே தந்தை மகன் உறவில் விரிசல் கண்டவர்கள் சுவாமிமலை முருகனை சேர்ந்து வந்து தரிசித்தும் தனியாக வந்து தரிசித்தும் நல்ல மாற்றத்தை காணலாம்.

      • இந்த கோவிலை வழிபட்டால மனதில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
      • இதுபோல சுந்தரர், சேக்கிழார் ஆகியோரும் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளனர்.

      மனக்குறைகளை தீர்க்கும் இரும்பை மாகாளீஸ்வரர்

      புதுவையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது இரும்பை மாகாளீஸ்வரர் கோவில்.

      புதுவை திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

      தேவார மூவர்களால் பாடல் பெற்ற 276 சிவ திருத்தலங்களில் 32வது திருத்தலமாக இரும்பை மாகாளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

      இந்த கோவிலை வழிபட்டால மனதில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

      குடும்ப விருத்திக்கும், ஒற்றுமைக்கும் புகழ்பெற்ற தலமாகவும் இந்த கோவில் அமைந்துள்ளது.

      1300 ஆண்டுகளுக்கு முன்பு மாகாள மகரிஷியால் கோவில் ஸ்தாபிக்கப்பட்டு அவர் பூஜித்து அருள்பெற்ற ஸ்தலமாகவும் இது உள்ளது.

      இதனாலேயே இங்குள்ள இறைவன் மாகாளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

      மாகாள மகரிஷி இதுபோல உஜ்ஜயினி மாகாளம், அம்பர் மாகாளம் ஆகிய கோவில்களையும் ஸ்தாபித்துள்ளார்.

      திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க கோவிலாகவும் இது அமைந்துள்ளது.

      இதுபோல சுந்தரர், சேக்கிழார் ஆகியோரும் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளனர்.

      கோவிலை சுற்றி இலுப்பை மரங்கள் அதிகம் இருந்ததால் அந்த பகுதி இலுப்பை என அழைக்கப்பட்டு பின்னர் அது மருவி இரும்பை என மாறியிருப்பதாக கூறுகிறார்கள்.

      கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கம் இரண்டாக பிளந்து பின்னர் ஒன்றாக சேர்ந்ததாக கூறப்படுகிறது.

      எனவே அந்த சிலை பிளந்ததற்கான அடையாளங்களுடன் இப்போதும் கருவறை சிலை உள்ளது.

      • கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது.
      • அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.

      கடன் தொல்லை போக்கும் லட்சுமி நரசிம்மர்

      கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

      மிகப்பழமையான இந்த கோவில் கால மாற்றத்தால் அழிந்து விட்டது.

      5 வருடத்துக்கு முன்பு ராஜ அரசு என போற்றப்படுகின்ற அரச மரத்தடியில் புற்றுக்கண்ணில் சுயம்புவாக தோன்றினார் லட்சுமி நரசிம்மர்.

      கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது.

      இந்த வில்வ மரத்தின் நடுவில் உள்ள இடைவெளியில் நரசிம்மர் சுயம்பு வடிவமாக காட்சி தருகிறார்.

      இங்கு பக்தர்கள் முன்னிலையில் தெய்வ பிரசன்னம் பார்க்கப்பட்டது.

      அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.

      லட்சுமி நரசிம்மரின் மகிமையால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

      திருமணம் தடைபட்டவர்கள் நெய் தீபம் ஏற்றி அரச மரத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிற்றை கட்டி 12 நாள், 12 முறை (பிரதட்சனம்) வலம் வந்துபக்தியோடு பூஜை செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

      குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டி 12 நாள் 12 முறை வலம் வந்து நெய் தீபம் ஏற்றினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள்.

      பக்தர்கள் இங்கு தொழில் அபிவிருத்தி, கல்வியில் வெற்றி பெற நோய்களில் இருந்து விடுபட கடன் தொல்லை நீங்க தொடர்ந்து ஹோமங்களும், பூஜைகளும் நடந்து வருகிறது.

      • சூரியனும், சந்திரனும் இங்கு அருகருகே அருள் பாலிக்கின்றனர்.
      • இங்கு தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும்.

      சித்தர்கள் வாழ்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

      தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

      ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது.

      சூரியனும், சந்திரனும் இங்கு அருகருகே அருள் பாலிக்கின்றனர்.

      இதுபோன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது. எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர்.

      சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதால், இத்தலம் சோமாஸ்கந்த அமைப்பு கோவிலாகும்.

      எனவே இத்தலத்தை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்குமாம்.

      இத்தல விநாயகரின் திருநாமம் "கோடி விநாயகர்" என்பதாகும்.

      இவரை ஒரு தடவை கும்பிட்டால் கோடி விநாயகரை கும்பிட்ட பலன் கிடைக்கும்.

      பழநி திருவாவினன் குடியை போலவே இங்கும் முருகன் வடக்கு பார்த்த மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

      இந்த முருகனை தரிசித்தால் பழனி முருகனை தரிசித்தபலன் கிடைக்கும்.

      இந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும்.

      இதுபோன்ற அமைப்பை திருவதிகை வீரட்டேஸ்வரர் கோவிலிலும் காணலாம்.

      குழந்தை பாக்கியத்திற்காக வழிபாடு செய்வதற்கு நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும், குழந்தை பிறந்து பிறந்து இறக்கும் குடும்பத்தாரின் குறை தீர்ப்பதற்காக ஒருசில கோயில்களே உள்ளது.

      அதில் முதன்மையான கோயில் இது. குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி பிறந்த குழந்தைகள் இறக்காது.

      குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள சந்தான விநாயகரை வழிபடுவது சிறப்பு.

      குடும்பத்தில் ஒற்றும் ஏற்படும் பிரிந்த உறவுகள் கூடி வருவார்கள்.

      தீராத வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு தினமும் மாலை வேளைகளில் விளக்கு போட்டு வழிபடுவது நல்லது.

      உணவு சாப்பிடுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலும், உணவு செரிமானம் ஆகாமல் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களும், இங்குள்ள சிவனுக்கு சுத்தன்னம் நைவேத்தியம் படைத்து அந்த பிரசாதத்தை சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.

      ஆண்டிபட்டியை சுற்றி யுள்ள ஊர்களில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் இத்தலத்தில் வழிபாடு செய்த பின்னரே தொடங்கும்.

      மதுரை மீனாட்சி கோவில் போல், மிகவும் பழமையான இத்தலத்தில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

      மன அமைதி வேண்டுபவர்கள், தியானம் செய்பவர்கள், யோகாசனம் பயில்பவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

      பல காலகட்டத்தில் பல சித்தர்கள் ஆண்டிகள் வேடத்தில் இங்கு தங்கியிருந்தனர். இவர்களில் சிவனாண்டி என்ற சித்தரும் ஒருவர்.

      இவர் பல காலம் இங்கு தங்கி சித்து விளையாட்டுக்கள் செய்து வந்தார்.

      இவரது ஜீவ சமாதி இங்குள்ளது. இந்த சமாதிக்கு மேல் இத்தலத்தின் விருட்சமான வில்வமரம் அமைந்துள்ளது.

      தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இத்தல விருட்சத்தின் கீழ் தரப்படும் விபூதியை பூசினால் நாள்பட்ட நோய்கள் விரைவில் குணமாகிவிடும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

      பஞ்சம்,பட்டினியின்றி ஊர் செழிப்புடன் வாழ, வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள வெள்ளி வேலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

      இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

      இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் எந்தவித குறைபாடும் இன்றி திருப்தியாக வாழலாம் என்பதால் சுற்றியுள்ள ஊர்மக்களில் பெரும்பாலானோர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

      • இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் சோழர்களால் உருவாக்கி பராமரிக்கப்பட்டது.
      • இது வாலி ஈஸ்வரனை வணங்கிய தலம்.

      குடிபழக்கத்தை போக்கும் வாலீஸ்வரர்

      மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏழு ஈஸ்வர ஆலயங்களில் ஒன்று வாலீஸ்வரர் கோவில்.

      இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் சோழர்களால் உருவாக்கி பராமரிக்கப்பட்டது.

      இது வாலி ஈஸ்வரனை வணங்கிய தலம்.

      வாலி மாவீரனாக உருவெடுத்ததும், உயிருடன் இருக்கும் வரை செல்வபுரியான கிஷ்கிந்தாவை அரசாண்டவன் என்ற அருள் பெற்றதும் இங்கு தான்.

      இங்கு கருவறை வாசல் கிழக்கு பார்த்து இருந்தாலும், வடக்கு பக்கமே சுற்றுச்சுவர் வாசல் உள்ளது.

      இதை குபேர வாசல் என்கிறார்கள். ஏனெனில் வாலி வடதிசை பார்த்தே தவமிருக்கிறான்.

      இங்கு வட கிழக்கில் பஞ்சலிங்கமும் உண்டு.

      இங்கு அமைதியாய், தனியே அமர்ந்து, உள்ளுக்குள் ஆழ்நிலை தியானம் செய்தால் இங்கு குடியிருக்கும் சூட்சும சக்தியை அறிய முடியும்.

      அஷ்டமி அன்று பஞ்சலிங்கத்திற்கு சாம்பிராணி தூபம் போட, குடிப்பழக்கம் மறக்கப்படும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும்.

      • ஸ்ரீ ராமபிரான் 3 நாட்கள் வசித்த திருத்தலம்.
      • இத்திருத்தலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் ஆகும்.

      பிரசாதம் வாங்கினால் குழந்தை பாக்கியம்

      கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் பழமையான பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சவுந்தரர்யவல்லி தாயார் சமேதய ஸ்ரீ பேட்டராய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

      இக்கோவிலின் மூலவர் ஸ்ரீ வேட்டையாடிய பிரான் (பேட்டராய சுவாமி), ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராய் அருள்பாலிக்கிறார்.

      தென் திசையில் ஸ்ரீ சவுந்தர்யவல்லி நாச்சியார் எழுந்தருளியுள்ளார்.

      ஆழ்வார்கள், ஸ்ரீ வேதாந்த தேசிகர், ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால் சாமி, சீதாலட்சுமண சமேத ஸ்ரீ ராமபிரான், வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ விநாயகர் மற்றும் மலைக்குகையில் ஸ்ரீ கஜலட்சுமி நரசிம்மர் சந்நதிகளும் உள்ளன.

      ஸ்ரீ ராமபிரான் 3 நாட்கள் வசித்த திருத்தலம்.

      இதனால் இத்திருத்தலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் ஆகும்.

      சகல தீவினைகளையும் போக்கி நல்ல சுகபோகங்களையும் அள்ளித் தருகிறார்.

      இக்கோவிலின் பிரகாரம் 235 அடி அகலம் உள்ளவை.

      தெற்கு மதிலின் நீளம் 204 அடியாகும். கிழக்கு மதிலின் நீளம் 244 அடியாகும்.

      கோவிலின் தலைவாசல் கிழக்கு திசையை நோக்கி உள்ளது.

      எம்பெருமான் திருப்பதி கோவிலில் உள்ளபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

      108 திவ்ய தேசங்களில் முக்கியமான நான்கு திவ்ய தேசங்களான கோவில் ஸ்ரீரங்கம், திருமலை (திருப்பதி), பெருமாள் கோவில் (காஞ்சி), திருநாராயணபுரம் (மேல்கோட்டை) ஆகும்.

      இந்த நான்கு திவ்ய தேச சம்பந்தமும் ஒருங்கிணைந்த ஒரே சேத்திரம் டெங்கனிபுரம் ஆகும்.

      இக்கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் செய்யும் பூஜைகளை போலவும்பஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகளும் ஆராதனைகளும் இங்கு பெருமாளுக்கு ஏக்கார்த்தி, கும்பார்த்தி, தேரார்த்தி ஆகிய ஆரத்திகள் எடுக்கின்றனர்.

      இந்த ஆகம பூஜைகள் பரம்பரையாக நடந்து வருகிறது.

      இக்கோயிலில் மூலவர் திருமலை வேங்கடவன் வேட்டையாடி வந்து நின்ற கோலத்தில் நிலைத்துள்ளார்.

      உற்சவ மூர்த்தியாக காஞ்சிபுரம் வரதராஜர் பேட்டராய சுவாமியாக அருள் பாலிக்கிறார்.

      திருநாராயபுரம் ஆயி சாமிகள் மங்கலாசனம் செய்து மணவாள மாமுனிகளை சந்தித்த சேத்திரம்.

      இங்கு உகாதிபண்டிகை (தெலுங்கு வருட பிறப்பு) ஆன பின் 11 நாட்களில் பூரம் நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.

      தேர்த் திருவிழாவிற்கு முன்பு கருட பிரதிஷ்டை நடைபெறும்.

      அப்போது குழந்தை இல்லாதவர்கள் சுவாமியை மனம் உருகி வேண்டி பிரசாதம் வாங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

      இதனால் ஆண்டு தோறும் இந்நிகழ்ச்சியின் போது ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் வாங்குவது பரம்பரையாக நடந்து வருகிறது.

      • நமது குடும்ப விழாக்களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை.
      • கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் சென்றார்கள் பாண்டவர்கள்.

      சகோதரர் ஒற்றுமையை ஓங்க செய்யும் பெரம்பலூர் மதனகோபால சுவாமி

      தனிமரம் தோப்பாகாது என்பார்கள்.

      குடும்பங்கள் கூடி வாழ்வது தான் கோடி நன்மை தரும்.

      நமது குடும்ப விழாக்களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை.

      வாழும் போது வாழ்த்துவதும், வீழும் போது தாங்கி பிடிப்பதும் சொந்த, பந்தங்கள்தான்.

      ஆனால் குடும்பங்களுக்குள் தான் எத்தனை பிரச்சனை. உறவு குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவது இன்று, நேற்று நடப்பது அல்ல.

      புராண காலத்தில் இருந்தே அது தொடர்கிறது.

      அதிலும் சகோதர குடும்பங்களுக்குள் எழுந்த பகையால் பஞ்ச பாண்டவர்கள் பட்ட பாடு அனைவரும் அறிந்ததே.

      அந்த பாண்டவர்களே தங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ, சகோதர ஒற்றுமை ஓங்கிட வேண்டி நின்ற ஒரு கோவில் தமிழகத்ததில் உள்ளது.

      பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோவில் தான் அது.

      சாபம் ஒன்றினால் புலியாகத் திரிந்த வியாக்ரம மகரிஷியின் சாபம் விலகிய தலம் வியாக்ரபுரம்...!

      யார் அந்த முனிவர்? அவருக்கு என்ன சாபம்?

      துர்வாசரின் சீடராக இருந்த ஒரு முனிவர், ஒரு சமயம் கவனக் குறைவால் தம் குருநாதரின் கமண்டலத்தில் இருந்த நீரைத் தட்டிவிட்டார்.

      அதனால் கோபமடைந்த துர்வாசர். அவரைப் புலியாக மாறும்படி சபித்தார்.

      பதறிப்போனார் சீடர். மன்னிக்கும்படி வேண்டினார்.

      சாபம் விட்டது விட்டதுதான் அதை மாற்ற முடியாது. ஆனால் விமோசனம் சொல்கிறேன்.

      புலியாக நீ உலாவும் பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் வருவார்கள்.

      அப்போது பீமனின் கதை யால் நீ அடிபடுவாய்.

      அந்த சமயத்தில் உன் சாபம் விலகும் என்றார் துர்வாசர். சாபம் பலித்து சீடன் புலியாகித் திரிந்தான்.

      பூர்வ ஜென்ம வாசத்தால், அக்காட்டிலிருந்த பெருமாளைத் துதித்தான்.

      கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் சென்றார்கள் பாண்டவர்கள்.

      அப்போது ஒரு முனிவர் அவர்களைச் சந்தித்தார். உங்களின் இந்த நிலைக்குக் காரணம் தீவினை பாவம்தான்.

      அது தொலைய தீனரட்சகனான புருஷோத்தமனை பூஜிக்க வேண்டும் என்றார்.

      புருஷோத்தமனை பூஜிக்க தொடங்கினார்கள் பாண்டவர்கள்.

      ஒருநாள் பூஜைக்குத் தேவையான நீரை எடுக்க ஆற்றங்கரைக்கு சென்ற பாஞ்சாலி, தண்ணீர் எடுக்காமலே பதற்றத்துடன் ஓடிவந்தாள்.

      அவளை ஆசுவாசப்படுத்திய பீமன், அவளது அச்சத்திற்கு காரணம் கேட்டான்.

      பெரிய புலி ஒன்று துரத்துவதுதான் தன் கிலிக்குக் காரணம் என்றாள், பாஞ்சாலி. உடனே கதையுடன் புறப்பட்டான் பீமன்.

      தவறவிட்ட நோஞ்சானான பெண்ணுக்கு பதில், திடகாத்திரமான ஆண்... கொழுத்த வேட்டை என்று பாய்ந்தது புலி.

      அடுத்த கணம் அதன் தலையில் இடி போல் விழுந்தது ஓர் அடி. மரண ஓலம் எழுப்பிய புலி, கீழே விழுந்து துடித்தது, துவண்டது.

      சட்டென்று முனிவராக மாறி எழுந்தது. புலி பாய்ந்தபோது துணிவுடன் நின்ற பீமன், அது முனிவராக மாறியதும் அதிர்ந்தான்.

      பெரும் தவறு செய்துவிட்டதாக பயந்தான். மன்னிப்பு வேண்டிப் பணிந்தான்.

      கனிவுடன் அவனைப் பார்த்த முனிவர், தமது சாபம் விலகிய கதையை அவனுக்குச் சொன்னார்.

      தனக்கு நன்மை செய்த அவனுக்கு வீரம் பன்மடங்காகப் பெருக வரம் அளித்தார்.

      வியாக்ரம் என்றால் புலி என்று அர்த்தம். முனிவர் புலிவடிவில் இருந்ததால், அந்தத் தலம் வியாக்ரமபுரம் என்றானது.

      தமிழில் பெரும் புலிவனம் பெரும்புலியூர், அதுவே மருவி பெரம்பலூர் ஆகிவிட்டது.

      வழிபாடு செய்த பாண்டவர்களுக்கு வரம் தர வந்தார் வாசுதேவன். அவர்கள் துன்பம் தீர அருளினார்.

      வினை தீர்க்க வந்த வேணு கோபாலா, இத்தலத்தில் நீங்கள் நிரந்தரமாக வாசம் செய்திடவேண்டும்.

      எங்க ளுக்கு இந்தத் துன்பங்கள் வந்ததற்கு முக்கியமான கார ணம், உறவினர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனது தான்.

      எனவே இங்கே வந்து உம்மை வணங்குவோரின் இல்லறம் நல்லறமாக அருள வேண்டும் என வேண்டினார்கள் பாண்டவர்கள்.

      பாண்டவர்களுக்கு அருளிய அதே வாசுதேவன், மதன கோபாலசுவாமியாக இன்றும் இங்கு அருள் பாலிக்கிறார்.

      தினமும் ஏராளமான மக்கள் தங்கள் சகோதர ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் கோபாலனை வணங்கி செல்கின்றனர்.

      ×