search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • செவ்வாய்க்கு, “அங்காரகன்” என்றும் பெயர் உண்டு.
    • பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு “பூமி புத்திரன்” என்று பெயருண்டாயிற்று.

    செவ்வாய்

    செவ்வாய்க்கு, "அங்காரகன்" என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லாக்கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாயின் தோற்றத்தைப் புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    பரமசிவனின் வார்த்தைகளைக் கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கு தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி.

    தேவியை பிரிந்து யோகத்திலிருந்த சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை உண்டாகிப் பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

    பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு "பூமி புத்திரன்" என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரியபதவியை அடைந்தான்.

    தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும்பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.

    பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும்,

    அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும்பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.

    குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.

    செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.

    • சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள்.
    • அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்.

    சந்திரன்

    வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் தீர்வதற்கு உங்கள் ராசியில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.

    திறமைகள் இருந்தாலும் சிலருக்கு வாய்ப்புகள் அமைவதில்லை. சிலருக்குத் திறமை இருந்தாலும் புத்திசாலித்தனம் இல்லாத காரணத்தினால் மந்தமாகவே இருப்பார்கள்.

    சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எண்ணாமல் பணம் சம்பாதிக்க எறும்பு போல் வேலை செய்வார்கள்.

    இப்படி சுறுசுறுப்பாக இருக்க அவர்களின் ஜாதகத்தில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.

    ஒருவரின் ஜாதகத்தில் சந்திர பகவானின் செயல்பாடுகள் கொண்டு மந்த நிலையும், சுறுசுறுப்பான நிலையும் நிர்ணயிக்கப்படுகிறது. மன உளைச்சல், விரக்தி போன்ற எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் பரிகாரம் உள்ளது.

    சந்திர பகவானை வலுப்படுத்த வேண்டும்

    ஒரு குடும்பத்தில் உணவிற்கான அடிப்படைத் தேவை அரிசி. இதை வீட்டில் எப்போதும் குறையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். முழுமையாகத் தீர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பிரச்னைகள் இருப்பவர்கள் கைப்பிடி அளவு அரிசியை எடுத்துக் கொண்டு சந்திர பகவானை மனதார வேண்டிக் கொள்ளவும். பின்னர் அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும். இது பச்சரிசி ஆக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

    இவ்வாறு செய்தால் உங்கள் ராசியில் இருக்கும் சந்திர பகவானின் பலம் அதிகமாகும். மேலும் சிக்கல்கள் அதிகமாக இருப்பவர்கள் சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    கங்கை நதியின் தீர்த்தம் கிடைத்தால் அதனைத் தினமும் குளிக்கும் போது தண்ணீரில் கலந்து நீராடினால் சந்திர பகவானின் பலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும். வாழ்க்கையில் இருக்கும் எல்லா பிரச்னைகளும் தீர்வதற்குச் சந்திர பகவானும் பலம் மிக முக்கியமாகும்.

    மூன்றாம் பிறை தரிசனம்

    மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.

    காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

    ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

    மாங்கல்ய பலம் அதிகரிக்கும்

    மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

    மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

    சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் இன்றைய தினம் இரவு சந்திரனை தரிசனம் செய்தால் மனக்குழப்பம் நீங்கும்.

    பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும். திருப்பதி ஏழுமலையானை திங்கட்கிழமைகளில் வழிபட மன குழப்பம் நீங்கும்.

    • ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை.
    • தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    நவக்கிரகங்கள் - சூரியன்

    ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு,

    பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்குக் கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.

    பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், சாரதரிடம் மன்னிப்புக் கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்குச் சூரிய புராணத்தை உரைத்தார்.

    அதனைக் கேட்டு அவன் நோய் நீங்கியதாகப் புராணம் கூறும்.

    வடநாட்டில் "முல்தானத்தில்" உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பெற்றது என்பர்.

    தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் "திருக்கண்டியூர்" மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகில் உள்ள"பனையபுரம்" ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.

    உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி, அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள "ஆதித்யபுரம், கும்பகோணம் கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் "சூரியமூலை" ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் சூரியனை வழிபட ஏற்ற தலங்கலாகும்.

    • மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமியன்று வணங்குவது சிறப்பானது.
    • “கனகதாராவைப் பாடுவோருக்கு தனது அருள் கிட்டும்” என்பது திருமகள் வாக்கு.

    மகாலட்சுமியை எவ்வாறு வணங்கினால் நிறைய செல்வம் கிடைக்கும்?

    மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமியன்று விரதமிருந்து வணங்குவது சிறப்பானது.

    அதுவும் அந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் மிகவும் விசேஷம். அதனால் எல்லாவிதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

    அதைத்தவிர நாம் பணத்தை எப்போது பயன்படுத்தினாலும் அப்போதெல்லாம் "ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம" என்று சொல்லிவிட்டுப்பயன்படுத்தினால் நம்மிடம் பணம் நிலைத்து நிற்கும்.

    சிறு வயதிலேயே துறவுபூண்டவர் ஆதிசங்கரர்.

    துறவு நெறிக்கு ஏற்றவாறு தினமும் இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு அதன் பின்னால் யாசகம் வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    அப்படி யாசகம் வாங்குவதற்காக ஒரு வீட்டுக்குச் சென்றார். அவர் போன வீடு ஏழை பிராமணரான சோமதேவருடையது.

    அச்சமயம், சோமதேவர் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருந்தார். அவருடைய மனைவியான தர்மசீலை மட்டும் தான் வீட்டில் இருந்தாள்.

    அந்த வீட்டின்முன் நின்ற சங்கரர் "பவதி பிசோந்தேஷி!" என்றார்.

    வறுமையில் வாடினாலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்றுபதில் கூறு தர்மசீலைக்கு வருத்தமாக இருந்தது.

    வேறு வழியின்றி "கொடுப்பதற்கு ஒன்றுமில்லை" என்று மனம் வருந்திக்கூறினாள்.

    அதைக்கேட்ட சங்கரர் "அன்னமிட வழியில்லாவிட்டாலும் பரவாயில்லை. உண்ணத்தகுந்த பொருள் எதுவாக இருந்தாலும் கொடுங்கள்"! என்றார்.

    வீட்டில் அங்குமிங்கும் தேடிப்பார்த்தாள் தர்மசீலை.

    எப்போதோ செய்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் இருந்தது.

    அதைக் கொண்டுபோய் ஆதிசங்கரருக்கு வழங்கினாள்.

    "அம்மையே தாங்கள் அன்புடன் அளித்ததால் இந்த நெல்லிக்காய் இவ்வுலகிலேயே சிறந்த பொருளாகும்" என்றார் சங்கரர்.

    இந்த ஏழ்மை நிலையிலும் அடுத்தவருக்குத் தரவேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதே என்று வியந்த அவர் அந்தத் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத் திருமகளை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.

    அவ்வளவுத்தான்.

    வானத்தில் இருந்து தங்க நெல்லிக்கனிகள் அந்த வீட்டின்மேல் மழையெனக் கொட்டின.

    "கனகதாராவைப் பாடுவோர் அனைவருக்கும் தனது அருள் கிட்டும்" என்பது திருமகள் வாக்கு

    • சிவ வழிபாட்டின் மூலம் புகழ் அடைந்தவர்கள்தான் நாயன்மார்கள்.
    • அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள்.

    அறுபத்து மூன்று நாயன்மார்கள்

    சிவ வழிபாட்டின் மூலம் புகழ் அடைந்தவர்கள்தான் நாயன்மார்கள்.

    இவர்கள் 63 பேர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    சைவத் திருமுறைகள் என அழைக் கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

    முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும்.

    நாயன்மார்களில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே.

    பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள்.

    இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

    அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள். கி.பி. மூன்று நான்காம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர்.

    தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.

    மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார்.

    அவர் மனைவி மங்கையர்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண் ஆவார்.

    திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயன்மார் ஆவார்.

    இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.

    63 நாயன்மார்கள் விவரம் வருமாறு

    1.அதிபத்தர்

    2.அப்பூதியடிகள்

    3.அமர்நீதியார்

    4.அரிவட்டாயர்

    5.ஆனாயர்

    6.இசைஞானியர்

    7.இடங்கழியார்

    8.இயற்பகையார்

    9.இளையான்குடி மாறன்

    10.உருத்திரபசுபதியார்

    11.எறிபத்தர்

    12.ஏயர்கோன்கலிக்காமர்

    13.ஏனாதி நாதர்

    14.ஐயடிகள் காடவர் கோன்

    15.கணநாதர்

    16.கணம் புல்லர்

    17.கண்ணப்பர்

    18.கலிக்கம்பர்

    19.கலியர்

    20.கழறிற்றறிவார்

    21.கழட்சிங்கர்

    22.காரியார்

    23.குங்கிலியக்கலயர்

    24.காரைக்கால்

    25.குலச்சிறையார்

    26.கூற்றுவார்

    27.கோச்செங்கட்சோழர்

    28.கோட்புலியார்

    29.சடையனார்

    30.சண்டேசுரர்

    31.சத்தியார்

    32.சாக்கியர்

    33.சிறுப்புலியார்

    34.சிறுத்தொண்டர்

    35.சுந்தரர்

    36.செருத்துணையார்

    37.சோமாசிமாறர்

    38.தண்டியடிகள்

    39.திருக்குறிப்புத்தொண்டர்

    40.திருஞானசம்பந்தர்

    41.திருநாவுக்கரசர்

    42.திருநாளைபோவார்

    43.திருநீலகண்டர்

    44.திருநீலகண்டயாழ்பாணர்

    45.திருநீலநக்கர்

    46.திருமூலர்

    47.நமிநந்தியடிகள்

    48.நரசிங்கமுனையாரையர்

    49.நின்றசீர்நெடுமாறர்

    50.நேசர்

    51.புகழ்ச்சோழர்

    52.புகழ்த்துனையார்

    53.பூசலார்

    54.பெருமிழவககுரும்பர்

    55.மங்கயற்கரசியார்

    56.மானக்கஞ்சாறர்

    57.முருகர்

    58.முனையடவார்

    59.மூர்க்கர்

    60.மூர்த்தியார்

    61.மெய்ப்பொருளார்

    62.வாயிலார்

    63.விறண்மிண்டர்

    • சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
    • மேலே உள்ள மந்திரத்தை சொன்னாலே, கஷ்டங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும்.

    விநாயகருக்கான விரதங்கள்

    விநாயகருக்கான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

    இது தவிர மாதம் தோறும் தேய்பிறை சதுர்த்தி திதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் வரும் கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை திதி வரையில் 21 நாட்கள் விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம்.

    விநாயகரை துதிக்க மந்திரம்

    ஓம்சுமுகாய நம

    ஓம்ஏக தந்தாய நம

    ஓம்கபிலாய நம

    ஓம்கஜகர்ணகாய நம

    ஓம்லம்போதராய நம

    ஓம்விநாயகாய நம

    ஓம்விக்னராஜாய நம

    ஓம்கணாத்பதியே நம

    ஓம்தூமகேதுவே நம

    ஓம்கணாத்ய சசாய நம

    ஓம்பால சந்திராய நம

    ஓம்கஜானனாய நம

    ஓம்வக்ரதுண்டாய நம

    ஓம்சூர்ப்ப கர்ணாய நம

    ஓம்ஹேரமபாய நம

    ஓம்ஸ்காந்த பூர்வஜாய நம

    மேலே உள்ள மந்திரத்தை சொன்னாலே, கஷ்டங்கள் நீங்கி வாழ்வு மலர்ந்து மணம் வீசும்.

    • பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து.
    • “நான்” எனும் அகங்காரம் பிரம்மனிடம் தென்பட்டது.

    திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

    பெரும் சிறப்புடைய சோழநாட்டின் ஒரு பகுதியாய் இருந்த பொன்னி நதியும், காவிரி நதியும் பாயும் தென் தமிழ்நாட்டின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் வடகரையில் சுமார் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் 25 கி.மீ தொலைவில் சிறுகநூருக்கு மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது.

    இவ்வூரில் பழமையும் பெருமையும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் - ஈசன்

    கிழக்கு நோக்கிய சன்னிதி, சுயம்பு மூர்த்தி, அழகிய தோற்றம், மேலே தாராபாதிரம், நாகாபரனத்துடன் கூடிய சதுர ஆவுடை கூடிய திருமேனி, ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    ஸ்ரீ பிரம்மன் வரலாறு

    நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப்பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னதி.

    பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை.

    எல்லா சிவ ஆலயத்திலும், ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

    ஆனால் திருபட்டூரில்மட்டுமே மிக பிரம்மாண்டமாக அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சந்நிதியுடன் காட்சியளிக்கிறார்.

    பிரம்மன் ஒருமுறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடம் உள்ளது , மேலும் ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என "நான்" எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது.

    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைக்க எண்ணினார். ஆகவே, "பிரம்மனே ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்" என்று அவருடைய ஒரு தலையை கொய்துவிட்டு தேஜஸ் இழக்கக்கடவாய் என்று சாபம் இட்டார்.

    பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார். தன நிலையை உணர்ந்த பிரம்மன் திருபட்டூரில் துவாதச சிவலிங்கங்களை (பன்னிரண்டு) பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.

    ஆக, பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும் திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார்.

    பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு,

    மீண்டும் ஒருமுறை அவர்களுடைய "தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக " என்று வரமளித்தார்.

    "விதி இருப்பின் விதி கூட்டி அருளுக " என்றும் வரம் வழங்கினார்.

    பரிகாரத்தலம்

    நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம் , செல்வ நலத்துடன் வாழ வேண்டும் என்பதே.

    அதற்கு இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவர்.

    ஸ்ரீ பிரம்மாவை வழிபாடு செய்ய உகந்த நாட்கள்

    திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தல் சிறப்பு.

    தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

    பரிகார முறை

    முதலில் இத்தலத்திற்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மன் ஆகியோரை தரிசித்து விட்டு, முப்பத்தி ஆறு தீபமிட்டு ஒன்பது முறை வளம் வந்து வேண்டுதல் வேண்டும்.

    ஒவ்வருவருடைய ஜாதகத்தை பிரம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல் செய்தால் அது அவ்வாறே நடக்கும் என்பது ஐதீகம்.

    இவ்வாறு வேண்டி பலன் பெற்றோர் பல பேர் உள்ளனர்.

    பொதுவான பரிகாரம்

    கணவன் மனைவி பிரிந்தவர் கூடுதல், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தை இன்மை, மன வியாதிகள், பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக நின்று தரிசித்தாலே போதும் சகல தோஷங்களும் நீங்கி "திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது " என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

    • உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.
    • துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.

    லட்சுமி கடாட்சம் தரும் திருப்பதி

    திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.

    இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.

    ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.

    கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.

    பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

    வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.

    வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதிரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.

    உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.

    சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.

    அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

    சந்திரன்சக்தி மிகுந்த கோவில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

    மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.

    மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.

    திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆன கதைகள் உண்டு.

    இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.

    துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.

    திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால்தான் இவ்வளவு கூட்டம்.

    செல்வம் உண்டியலில் அதிகம் குவிவதால், பணம், என்னும் காட்சி ஐ பார்த்தாலே பரவசம்தான்.

    ஜோதிடப்படி மிதுன லக்னம், ரிசப லக்னம், கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.

    அவர்கள் பெருமாள் வழி பாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல வசதிகளோடு இருக்கின்றனர்.

    வடநாட்டவர் பெருமாள் தங்கள் பார்ட்டனர் என்று சொல்கிறார்கள்.

    பெருமாள் சிரித்த ஆனந்தமான தனது பார்வைகள் அனைவரையும் ஆனந்தபடுத்தும்.

    அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.

    குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.

    நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.

    • சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
    • புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    ராகு கால பூஜைக்கான மலர்கள்

    ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.

    இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.

    இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.

    சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.

    புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.

    வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.

    சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.

    சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.

    • மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
    • மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    இறைவன் காலடியில் மலர் போடுங்கள்!

    ஒரு கூடை அரளியைச் சேகரித்துக்கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள்.

    அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் சுவாமி காலடியில் வைத்துப்பாருங்கள்.

    உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும், இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

    நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும்.

    மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.

    அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி

    மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும்.

    மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.

    தாமரை, செண்பகம், முல்லை, பிச்சி, அரளி, துளசி உள்பட பல்வேறு மலர்கள் புஷ்பாஞ்சலிக்கு பயன்படுத்தப்படும்.

    புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.8,500 செலுத்தி ரசீது பெற்று சென்றால் அவர்கள் பெயரில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.

    புஷ்பாஞ்சலிக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை.

    கோவில் சார்பில் மலர்கள் பயன்படுத்தப்படும்.

    தரமற்ற பூக்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது.

    • “எருக்கம்பூ பயத்தை ஒழித்து தைரியம் கொடுக்கக்கூடிய தன்மை உடையது”.
    • சூரியனுக்கும் எருக்கம் பூ மலர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

    கடவுள்களுக்கு உகந்த வெள்ளெருக்கு

    சிவனுக்குரிய அஷ்டபுஷ்பங்களில் முதன்மையானது வெள்ளெருக்கமலர்.

    சிவபெருமானின் ஜடாமுடியில் விரும்பி அணியக்கூடிய பாக்கியம் பெற்ற மலராக வெள்ளெருக்கம் மலர் திகழ்கிறது.

    "எருக்கம்பூ பயத்தை ஒழித்து தைரியம் கொடுக்கக்கூடிய தன்மை உடையது".

    இதனால் புதுச்சேரிஅன்னை இந்த மலருக்கு "தைரியம்" என்று பெயர் சூட்டியுள்ளார்.

    எருக்கம் மலர்களை அன்னையின் பாதத்தில் வைத்துவிட்டு காரியங்களைச்செய்தால் மனதில் தானே தைரியம் வந்து உட்கார்ந்து கொள்ளுமாம்.

    சாதாரண எருக்கம் பூவானாலும் சரி... சிறப்புத்தன்மை கொண்ட வெள்ளெருக்கு மலரானாலும் சரி... அது ஐயப்பனுக்கும் உரியதாகும்.

    இதை தை பொங்கல் சமயத்தில் பந்தளம் அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லப்படும் திருவாபரணப்பெட்டிகள் எடுத்துரைக்கின்றன.

    ஐயப்பனுக்கும், எருக்கம் பூவுக்கும் என்ன சம்பந்தம்?

    சபரி சாஸ்தாவுக்குச் சாத்துவதற்காக ஆபணங்களைக் கொண்ட மூன்று பெட்டிகள் திருவாபரணப்பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி... கொண்டு வரப்படும் அவற்றுள் திருவாபரணப்பெட்டி மட்டும்தான் ஐயப்பன் சன்னதிக்குச் செல்லும் .

    அதனுள் திருமுகக் கவசம், சூரிகைகள், யானை விக்ரகம் , புலி விக்ரகம், வலம்புரிச்சங்கு, பூர்ண புஷ்கலா தேவியர் உருவம், பூக்கள் வைப்பதற்கான தங்கத்தட்டு, நவரத்தின மோதிரம், சரப்பளிமாலை, நவரத்தின மாலை, தங்க இதழ்களாலான வில்வமாலை ஆகியவற்றுடன் தங்கத்தாலான எருக்கம்பூக்களாலான மாலையும் வைக்கப்பட்டிருக்கும்.

    இத்தனை மலர்களை விட்டுவிட்டு எருக்கம் பூமாலைக்கு மட்டும் ஏன் இத்தனை விசேஷம்? எளிய பொருட்களையும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்பதை உணர்த்துவதற்குத்தான் ஐயப்பன் எருக்கம் பூவை தன்னுடன் வைத்துள்ளார்.

    சூரியனுக்கும் எருக்கம் பூ மலர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

    ரதசப்தமியன்று (சூரியன் தனது ரதத்தை தென்திசையிலிருந்து வடக்கு நோக்கித்திருப்பும் தினம்) ஏழு எருக்க இலைகளுடன், மஞ்சள் பொடி, பசுஞ்சாணம், அருகம்புல், அட்சதை ஆகியவற்றை சேர்த்து தலையில் இருதோள்களில், இருபாதங்களில் வைத்துக்கொண்டு சூரிய திசை நோக்கி, கங்கையை நினைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யவேண்டும்.

    இதனால் ஏழு ஜென்மங்களின் பாவம் அகல்வதுடன் சூரிய பகவானின் பரிபூரண அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் வெள்ளெருக்கு மரம்தான் தல மரமாக விளங்குகிறது.

    வெள்ளெருக்கு தலமரமாக அமைந்த விசேஷ ஆலயங்களும் உண்டு.

    திருமங்கலக்குடி பிராண நாதேஸ்வரர், மங்களநாயகி ஆலயத்தில் தல விருட்சமாக வெள்ளெருக்கு உள்ளது.

    இங்கு ஞாயிறு மதியம் உச்சிக்காலத்துப்பிறகு வெள்ளெருக்கு உள்ளது.

    இலையில் தயிர் சாதம் நைவேத்யமாகப் படைக்கப்பட்டு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

    இத்திருக்கோவிலில் ஒரு கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமை தயிர்சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து நைவேத்யம் செய்து உண்டு வர, எப்பேர்ப்பட்ட நோயும் விலகிவிடுமென்பது நிதர்சனம்.

    கடந்த சில ஆண்டுகளாக வெள்ளெருக்கு மரம் உண்டாவதே அரிதாகிவிட்டது.

    எளிதாகத் தோன்றுவதும் இல்லை. நவரத்தினங்களும், பொக்கிஷங்களும், தெய்வத் திருவுருவங்களும் புதைந்திருக்கும் இடங்களிடையே வெள்ளெருக்கு முளைக்குமாம்.

    அது முளைத்த இடத்தில் ஐஸ்வர்யங்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள்.

    இத்தகைய அரிய வெள்ளெருக்கு வேரில் செதுக்கப்படாமலே பிள்ளையார் தோன்றுவதுதான் விசேஷம்.

    அப்படியே செதுக்குவதற்கும் வேர் எடுக்க நினைத்தாலும் அது சாதாரண செயலல்ல.

    இன்ன திதியில், நேரத்தில் கிழமைகளில் என்று கணித்து மரத்துக்கு காப்புகட்டி, சில வழிபாடுகளைச் செய்து, குறிப்பாக வடக்கு முகமாகச் செல்லும் வேர்களை எடுத்து மஞ்சள் சந்தனக் காப்புகளை சாத்தி, பக்குவப்படுத்தி உருவாக்கிய பிள்ளையாரின் சக்திக்கு அளவே இல்லை.

    மாந்தரீக ஆற்றல் கொண்ட வெள்ளெருக்குக்கு பாம்பு பயந்து ஓடும். பூதப் பிசாசு துர்பயங்கள் விலகும். துர்சக்திகளை நினைத்து பயம் உள்ளவர்கள் வெள்ளெருக்குப்பட்டையைப் பதப்படுத்தி நூல் திரித்து விளக்காக ஏற்றிவர, இல்லமும் இதயமும் பயமின்றித்தெளிவடையும்.

    திருவோணம் நட்சத்திரக்காரர்கள் எருக்கஞ்செடி நட்டு, புண்ணியம் தேடிக்கொள்ளலாம்.

    • இதனை “கைலாய மலையின் பனித்தூறல்” என்று வர்ணிப்பவர்களும் உண்டு.
    • சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    மனதை அமைதிப்படுத்தும் நில சம்பங்கி

    வெள்ளைநிறம் உடைய மலர்கள் சாத்வீக குணத்தை கொண்டவை. மீண்டும் மீண்டும் சாத்வீகமான மலர்களை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்து தரிசிக்கும்போது, அந்த வெள்ளை மலர்களில் உள்ள சாத்வீக குணம் நமக்குள்ளும் வந்துவிடும்.

    அத்தகைய சாத்வீக குணத்தை தரும் மலர்களில் ஒன்றாக நில சம்பங்கி மலர் உள்ளது. இந்த நில சம்பங்கி மலர்களுக்கு மற்ற மலர்களை விடக் கூடுதலான ஒரு அம்சம் உண்டு.

    அதாவது நில சம்பங்கி மிகமிக வலிமையான பிரத்யேகமான வாசனை கொண்டது.

    நில சம்பங்கி மாலையை மற்ற மலர்களைபோல கட்டுவது போல் இல்லாமல் ஊசியில் நூல் கோத்து, நீள நீளமாகக் கோத்து, மிக மெல்லிய, நளின மாலைகளை அணிவது இன்றும் வழக்கம்.

    இதைவிட ஆலயங்களில் செய்யப்படும் அனைத்து அலங்காரங்களுக்கும் அதிகம் பயன்படும் மலர் இதுதான்.

    இந்தப் பூவின் வெண்மைநிறம் மற்றும் மெல்லிய நீண்ட குழல் போன்ற வடிவத்தின் காரணமாக, இதனை "கைலாய மலையின் பனித்தூறல்" என்று வர்ணிப்பவர்களும் உண்டு.

    இந்த மலர்மாலை அனைத்து ஆலயங்களிலும் அனைத்து தெய்வங்களுக்கும் எப்போதும் அணிவிக்கப்படும் மாலையாக உள்ளது.

    சகஸ்ரநாம அர்ச்சனைகளுக்கு ஏராளமான பூக்கள் தேவைப்படும்போது வாசனைமிக்க மலர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகம் இடம்பெறும் மலர் சம்பங்கிதான்.

    மல்லிகை சாகுபடி செய்யும் மதுரை விவசாயிகள் சமீபகாலமாக நிலசம்பங்கி சாகுபடிக்கு வெகுவாக மாறியுள்ளனர்.

    "இரவு ராணி" என்று நம் விவசாயிகள் இந்தப்பூவை சொல்வ துண்டு. சந்தை விற்பனையில் அதிகலாபம் பெற்றுக் கொடுப்பதால் இந்த மலர் பூ வியாபாரிகளின் செல்வம் ஆகவும் கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    அவனுக்குகந்த நாட்களிலும், நேரங்களிலும் கைநிறைய அள்ளி அள்ளி அர்ச்சித்து வணங்கினால் மனத்தூய்மை பெருகும்.

    உங்களைச்சுற்றி எது நடந்தாலும் பதற்றம் அடைய மாட்டடீர்கள். நிதானமான மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள்.

    நிலசம்பங்கிப்பூக்களை "புதிய சிருஷ்டி" என்று புதுச்சேரி அன்னை வர்ணித்துள்ளார். எனவே சம்பங்கி மலர்கள் நமக்குள்ள திறனை அதிகப்படுத்தவும், இல்லாத அம்சங்களை உருவாக்கவும் உதவுகின்றன.

    ×