என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்தி"
- இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.
- சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.
கடன்களை தீர்க்கும் செவ்வரளி
"அரளி" பூக்களில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஆனால் அரளி என்று சொன்னதும் சாதாரணமாக நம்மால் அழைக்கப்படும் மலர் செவ்வரளிதான்.
சிவந்த அரளிப் பூ எங்கும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடிய ஓரடுக்கு மலராகும்.
இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.
ஆனால்பெரும்பாலான பக்தர்களால் விரும்பி வாங்கப்படுவது செவ்வரளிப்பூதான்.
மகாவாராஹிக் குரிய மலர்களில் செவ்வரளி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அனைவருக்கும் கிடைக்கக்கூடிய எளிய மலர் செவ்வரளி, இம்மலர் சோலை, நந்தவனம், தோட்டம், பாதையோர பாலைவனம் என்ற பாகுபாடுகளின்றி, எங்கும் மிக எளிமையாக பூத்துக்குலுங்கும் அற்புத குணம் உடையது.
சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மலருக்கு விஞ்ஞான பூர்வமாக, காற்றிலுள்ள கார்பனின் அளவைக்குறைக்கக்கூடிய ஆற்றல் உண்டு.
அதனால்தான் நமது தேசிய நெடுஞ்சாலைகளில் நாற்கரசாலைகளில் அக்கறையுடன் இந்த மலர் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.
அம்மனை வழிபடும்போது நமது மனதை அம்மன் மீது ஒரு நிலைப்படுத்தி சிவப்பு அரளி கொண்டு பூஜை செய்தால், குடும்பச் சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.
மனம் திறந்து கடன் பிரச்சினைகளை கடவுளிடம் சமர்ப்பித்தவிட்டு மஞ்சள் அரளி கொண்டு பூஜை செய்தால் கடன் தொல்லை காணாமல் போகும்.
வேதனை மிகுதியால் சஞ்சலப்படுபவர்கள், வெள்ளை அரளி கொண்டு வேதபிரானை அர்ச்சித்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும்.
இத்தகைய பெருமை மிகு அரளிப்பூ, அனைத்து ஆலயங்களின் நந்தவனங்களிலும் செல்லக் குழந்தையாகவே வளர்க்கப்பட்டு வருகிறது.
திருக்கரவீரம் மற்றும் திருக்கள்ளில் ஆகிய புண்ணிய தலங்களில் தல விருட்சமாகத் திகழகூடிய பெருமையையும் அரளி பெற்றுதுள்ளது.
உத்திர நட்சத்திரக்காரர்கள் அரளிச்செடிகளை நடுவதும் வளர்ப்பதும் மிகவும் அல்லது என சொல்லப்படுகிறது.
- அவன் மலர்களின் மீது மிகுந்த ஆசை கொண்டவன்.
- ருக்மாங்கதன் திருடர்களைக் கண்டு பிடிக்க தீவிரமான முயற்சிகளைச் செய்தார்.
தேவேந்திரன் திருடிய பூக்கள்
புராண காலத்தில் "ருக்மாங்கதன்" என்ற பெயருடைய மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி செய்து வந்தான்.
அவன் மலர்களின் மீது மிகுந்த ஆசை கொண்டவன்.
அவனுக்கு சொந்தமான ஒரு அழகிய நந்தவனத்தில் உலகில் உள்ள பேரழகு வாய்ந்த மலர்களை எல்லாம் வரவழைத்து அங்கே பயிர் செய்தான்.
அதை தன் கண் போல் காத்து வளர்த்து வந்தான்.
ஒரு சமயம், தேவேந்திரன் தனக்கு ஒரு யாகத்திற்கு பூசை செய்ய பூக்கள் வேண்டுமென்று கருதிய போது ருக்மாங்கதனின் பூந்தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு தேவ கண்ணரசனை அனுப்பி அங்கிருந்து வினோதமான பூக்களை திருடிக் கொண்டு வரச் செய்தான்.
தினமும் பூக்கள் திருட்டுப் போவதைக் கண்ட ருக்மாங்கதன் திருடர்களைக் கண்டு பிடிக்க தீவிரமான முயற்சிகளைச் செய்தார்.
ஆனால் அவரால் திருடர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.
கடைசியாக முனிவர் ஒருவரின் உதவியினால் கண்டு பிடித்தான். கேட்டால் தர மறுத்துவிடுவானோ என்ற காரணத்தினால் தான் மலர்களைக் கவர்ந்து வரச் சொன்னதாக இந்திரன் பதில் கூறினார்.
அதன் பிறகே ருக்மாங்கதன் சமரசம் அடைந்தார்.
- மாலையில் செந்தாமரை, அல்லி, துளசி, வில்வம் ஆகியவை உகந்தன.
- முல்லை, கிளுவை, வில்வம், விளா ஆகியவை பஞ்ச வில்வமாகும்.
மூன்று வேளைக்கு ஏற்ற மலர்கள்
காலை நேரத்தில் தாமரை, பூவரசம்பூ, துளசி, நவமல்லிகை, நத்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னாகரம் (தாழை & இம்மலர் சிவ வழிபாட்டில் பயன்படுத்தலாகாதது) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.
நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ் ஆகியன நன்மை தரும்.
மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மரிக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியவ உகந்தன.
அஷ்ட புஷ்பங்கள்:
அறுகு, செண்பகம், புன்னாகரம், நத்தியாவட்டை, பத்திரி, பிருகதி, அரளி, தும்மை ஆகிய அஷ்ட புஷ்பங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பூக்களை எத்தனை நாட்கள் வைத்து இருக்கலாம்?
தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறுமாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், செண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.
பூஜைக்குரிய இலைகள்:
துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மரிக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியவையாக கருதப்படுகிறது.
பஞ்ச வில்வங்கள்:
முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியவை பஞ்ச வில்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
- விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய 21 இலைகள்
- இந்த இலைகள் கணபதி வழிபாட்டிற்கு மிகவும் உகந்தவை.
விநாயகர் சதுர்த்தி பூஜைக்குரிய 21 இலைகள்
1.மாசிப்பச்சை இலை
2.கண்டங்கத்திரி இலை
3.வில்வ இலை
4.அருகம்புல்
5.ஊமத்தை இலை
6.இலந்தை இலை
7.நாயுருவி இலை
8.துளசி
9.மாவிலை
10.அரளி இலை
11.விஷ்ணுகிராந்தி இலை
12.நெல்லி இலை
13.மருக்கொழுந்து இலை
14.நொச்சி இலை
15.ஜாதிக்காய் இலை
16.வெள்ளெருக்கு இலை
17.வன்னி இலை
18.கரிசராங்கண்ணி இலை
19.வெண்மருதை இலை
20.எருக்கு இலை
21.தேவதாரு இலை
- காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
- பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.
சஷ்டி விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின்சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.
பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர்.
ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும்.
கந்தசஷ்டிவிரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும்.
காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.
ஆனால், வயோதிகர்கள்,நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.
காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
காலை, மாலை வழிபாட்டின் போதுஅவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோசெய்ய வேண்டும்.
ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம்.
மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவதுநன்மை தரும்.
சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர்வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.
பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.
பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதாரவேண்டுங்கள்.
அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லதுசிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.
பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்குபொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.
பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம்ஒன்றினை ஏற்றுங்கள்.
ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.
மனம் முழுவதும் அந்தமயில் வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம்,கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.
ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்றுஉங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள்.
முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம்முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.
நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும்.
எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான்.
ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.
அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர்.
மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராட வேண்டியது அவசியம்.
அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
வேறுசிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடைநைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.
வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு,நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டியயாவும் நிச்சயம் கைகூடும்.
நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில்நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.
- ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.
- மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.
சஷ்டி விரதம் வழிமுறைகள்
கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.
நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.
அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.
கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.,வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.
கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.
நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.
சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும்.
பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு' என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார்.
இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.
மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும்.
பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு.
ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.
முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு.
அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.
வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.
இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம்.
சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.
- குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.
- கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.
கந்தசஷ்டி விரதத்தின் பலன்கள்
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று.
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.
சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.
இந்த விரதத்தை மனதில் கொண்டே "சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்'' என்ற பழமொழி எழுந்தது.
சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.
கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.
அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.
உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி,
தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.
ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.
- அறுகோண வடிவிலான ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.
- இதை 'சாயாபிஷேகம்' என்றார்கள். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள்.
சஷ்டி யாகம்
திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார்.
அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.
குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டத்திக்கு பாலகர்கள், துவார பாலகர்கள் என அனைத்து தெய்வங்கள், தேவதைகளை எழுந்தருளச் செய்வர்.
உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.
ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தளி சூரபத்மனை சம்ஹாரம் செய்வார்.
அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாக சாலைக்கு திரும்புவார்.
கண்ணாடிக்கு அபிஷேகம்
ஜெயந்திநாதர், சூரபத்மனை சம்ஹாரம் செய்த பிறகு பிரகாரத்தில் உள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார்.
அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும்.
அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார்.
இதை 'சாயாபிஷேகம்' என்றார்கள். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள்.
போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது.
இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகுதான், முருகப்பெருமான் சன்னதிக்கு திரும்புவார் அத்துடன் சூரசம்ஹார வைபவமும் நிறைவடையும்.
ராஜகோபுரம் திறக்காதது ஏன்?
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
பிரதான கோபுரத்தை சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.
ஆனால், அந்த பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தை விட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.
கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.
அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
- சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.
- ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
கந்த சஷ்டிவிரதம்
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.
ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.
இந்த ஆறு நாளையும் பக்தர்கள் விரத நாட்களாக கடைபிடிக்கின்றனர்.
செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.
தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருப்பது வழக்கம்.
இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது.
ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து 'காப்புக்கட்டல்' அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.
பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர்.
இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.
- அன்னபூரணிக்குரிய நைவேத்தியம் அரிசி அல்ல. அவளுக்கு லட்டே பிரியமானது.
- அரிசி போடும் பாத்திரத்தில் அன்னபூரணியை போட்டு மூழ்கடித்து விடுகின்றனர்.
அன்னபூரணி சிலையை அரிசிக்குள் போடாதீர்?
அன்னபூரணி சிலை இல்லாத வீடுகளே இப்போது குறைவு.
இந்த சிலைகளை பத்து ரூபாய்க்கு கூட செய்து கடைகளில் விற்கின்றனர்.
இதை வாங்கி வந்து ஒரு தட்டில் வைத்து சுற்றிலம் அரிசி தூவி திருவிளக்கின் முன் வைத்து பூஜை செய்கின்றனர். இன்னும் சிலர் அரிசி போடும் பாத்திரத்தில் அன்னபூரணியை போட்டு மூழ்கடித்து விடுகின்றனர்.
இது முற்றிலும் தவறான வழிபாடாகும்.
அன்னபூரணிக்குரிய நைவேத்தியம் அரிசி அல்ல. அவளுக்கு லட்டே பிரியமானது.
காசியில் லட்டுத் தேரில் தீபாவளியைன்று அவள் பவனி வருவாள். அன்னபூரணிக்கு தினமும் லட்டு படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
முடியாதவர்கள் அன்னபூரணி சிலையை ஒரு சிறிய தடடில் வைத்து சுற்றிலும் சுத்தமான தண்ணீர் விட வேண்டும். இதை காலையும் மாலையும் மாற்றி விட வேண்டும்.
தண்ணீர் விடுவதன் மூலம் அன்னபூரணி மனம் குளிர்ந்து மழை பெய்ய வைத்து ஊருக்கே அன்னம் கொடுப்பாள் என்பது ஐதீகம்.
அன்னபூரணியை அரிசி டப்பா அல்லது பானைக்குள் போட்டு வைத்தால், வீட்டில் அரிசி குறையாமல் இருக்கும் என்பது மூட நம்பிக்கை.
இன்னும் சிலர் அன்னபூரணி படத்தை சமையலறையில் ஒட்டி வைக்கின்றனர். கேட்டால் சில கோவில்களில் மடப்பள்ளியில் அன்னபூரணி இருக்கிறாளே என்கின்றனர்.
கோவில்கள் புனித இடங்கள், நமது வீடுகள் சிலவற்றில் அசைவம் கூட சமைக்கப்படுகிறது. சமையலறைகளில் அன்னபூரணி படத்தை வைக்கக் கூடாது. எந்த தெய்வமாக இருந்தாலும், அது பூஜை அறையிலேயே இருக்க வேண்டும்.
- அவனது துன்பங்களை சகிக்க முடியாத தேவர்கள் சிவபெருமானை சரணடைந்தனர்.
- அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியவில்லை.
சூரபத்மன் கதை
காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக் குலப்பெண்ணிற்கும் பிறந்தவர் சூரபத்மன்.
தன் தாயின் உபதேசப்படி சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அப்படியும் சிவபெருமான் காட்சி அளிக்காததால் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.
சூரபத்மனின் தவ வலிமையையும், தியாகத்தையும் மெச்சிய சிவபெருமான் சூரபத்மன் வேண்டியபடி அவனுக்கு தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும், நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமையையும் அளித்தார்.
இதில் உச்சக்கட்டமாக சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தையும் பெற்றான்.
இப்படி மிகவலுவான வரங்களைப் பெற்ற சூரபத்மனால் அமைதியாக இருக்க முடியவில்லை.
தேவர்களுக்குப் பல வழிகளிலும் துன்பத்தைக் கொடுத்தான். அவனது துன்பங்களை சகிக்க முடியாத தேவர்கள் வரம் கொடுத்த சிவபெருமானை சரணடைந்தனர்.
இந்த அசுரனை ஒழிக்க ஒரு சேனாதிபதி வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.
அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது. அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.
கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.
பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார். அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.
சிவபெருமான் முருகனுக்கு அசுரனுடன் போர் செய்ய சேனைத் தளபதியாக வீரவாகுவையும், மற்ற சிவகணங்களையும் சிருஷ்டித்தார். அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.
சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் அசுரரர்களை அழிக்க புறப்பட்டுச் சென்றார். முதலில் சூரபத்மனின் சகோதரர்களான கஜமுகாசுரன், சிம்மமுகாசுரன், அவன் மகன் பத்மகேசரி ஆகியோரை அழித்தார்.
பின்னர் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவகுருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டார். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.
இங்கிருந்து முருகப் பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல்ல அறிவுரைகளைக் கூறச் சொன்னார். ஆனால் வீரவாகுவின் பேச்சினை சூரபத்மன் கேட்கவில்லை.
அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.
முருகப்பெருமானின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.
கடைசியாக திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெற செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனை சரணாகதி அடைந்தான். அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.
தானே அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார். இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.
இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும்போது பகவானுடைய மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.
- முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.
- முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன்.
ஆறுமுகக் கடவுள் முருகப் பெருமான்!
தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர்.
முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.
சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார். முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.
இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள். ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.
மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.
முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.
தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதலிய எழுத்துகள் பன்னிரண்டும் தோள்காளாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.
முருகன் சிவந்த மேனியும், அபயவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.
முருகப்பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.
சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமேதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்களாயின.
எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.
முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்
ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.
அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.
சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.
உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.
வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.
வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.
முருகன் நமக்கு வீடு பேற்றை அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடு பேற்றை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.
ஆறுமுகனுக்குரிய ஆறெழுத்தான "சரவணபவ" என்பதை கூறியபடி ஆறு படை வீடுகளுக்கும் சென்று நல்ல எண்ணங்களுடன் நம்மிடம் உள்ள ஆறு பகைவர்களும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டி வணங்க வேண்டும்.
இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப்படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் அவன் ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள்.
சூரபத்மன் கதையை அடுத்த பதிவில் காணலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்