என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விரட்டி பிடித்த போலீசார்"
- தலைமறைவான சத்திய மூர்த்தி மற்றும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
- போலீசார் யுவராஜ் வடிவேல் உள்ளிட்டோர் 2 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று சத்தியமூர்த்தியை பிடித்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 34). இவர் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்தி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரேஷன் அரிசி கடத்தியதாக சின்னகோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆவின் பாலம், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இவரது 5 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான சத்திய மூர்த்தி மற்றும் சிலரை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஐந்து வாகனங்களையும், 21 ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் சத்தியமூர்த்தி, நேற்று கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டவுடன் வீட்டின் பக்கவாட்டில் குதித்து சத்தியமூர்த்தி தப்பித்தார். அவரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், மூர்த்தி மற்றும் போலீசார் யுவராஜ் வடிவேல் உள்ளிட்டோர் 2 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.
மேலும் அரிசி கடத்தல் விவகாரத்தில் அவருடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்த போலீசார், சத்தியமூர்த்தியை கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்