search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் தொழில்"

    • பெங்களூருவில் போதை விருந்து வழக்கில் தெலுங்கு நடிகை ஹேமா கைது.
    • போலீஸ் சோதனையின் போது, ஆந்திரா, கர்நாடக திரை உலகினர் பங்கேற்றது தெரியவந்தது.

    பெங்களூரு புறநகர் பகுதியில் சிங்கேனா அக்ரஹாராவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் கடந்த மே 20 மாலை 'சன்செட் டு சன்ரைஸ் விக்டரி' என்ற தலைப்பில் நடந்த ரேவ் பார்ட்டியில் தொழில்நுட்பக் கலைஞர்கள், தெலுங்கு நடிகர்கள், கர்நாடகாவின் பெரிய புள்ளிகள் அவர்களின் வாரிசுகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர்.

    இந்த பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவலறிந்து அங்கு சென்ற கர்நாடக காவல்துறையினர், எம்.டி.எம்.ஏ, கோகைன், ஹைட்ரோ கஞ்சா மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஹேமா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுகிறது

    இந்நிலையில் போதைப்பொருள் விநியோகத்துடன் பாலியல் தொழிலும் நடத்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள ஒவ்வொரு நபரிடமும் நுழைவுக் கட்டணமாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரவது கேட்டால் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    கர்நாடகாவைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதையே அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ரேவ் பார்ட்டிகளை பொறுத்துக் கொள்ளாது என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.

    இந்த ரேவ் பார்ட்டி தொடர்பாக, தெலுங்கு நடிகை ஹேமாவிடம் கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த ரேவ் பார்ட்டிக்கு செல்லவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட போதை பொருள் உட்கொண்டது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து நடிகை ஹேமாவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ரேவ் பார்ட்டியில் தொழில்நுட்பக் கலைஞர்கள், தெலுங்கு நடிகர்கள், கர்நாடகாவின் பெரிய புள்ளிகள் அவர்களின் வாரிசுகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர்.
    • போதைப்பொருள் விநியோகத்துடன் பாலியல் தொழிலும் நடத்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    பெங்களூரு புறநகர் பகுதியில் சிங்கேனா அக்ரஹாராவில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் கடந்த மே 20 மாலை 'சன்செட் டு சன்ரைஸ் விக்டரி' என்ற தலைப்பில் நடந்த ரேவ் பார்ட்டியில் தொழில்நுட்பக் கலைஞர்கள், தெலுங்கு நடிகர்கள், கர்நாடகாவின் பெரிய புள்ளிகள் அவர்களின் வாரிசுகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர். தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஹேமா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுகிறது

     

    இந்த பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவலறிந்து அங்கு சென்ற கர்நாடக காவல்துறையினர், எம்.டி.எம்.ஏ, கோகைன், ஹைட்ரோ கஞ்சா மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் போதைப்பொருள் விநியோகத்துடன் பாலியல் தொழிலும் நடத்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள ஒவ்வொரு நபரிடமும் நுழைவுக் கட்டணமாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரவது கேட்டால் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறும்படி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    கர்நாடகாவைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதையே அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ரேவ் பார்ட்டிகளை பொறுத்துக் கொள்ளாது என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார். கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பிரானும் பாஜக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் 2000 வீடியோக்கள் வெளியாகி நாட்டையே உலுக்கிய நிலையில் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த போதைப் பார்ட்டியில் பாலியல் தொழில் நடந்துள்ளதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    • பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மாணவிகள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • புரோக்கர் நதியாவின் வாடிக்கையாளர்கள் யார்-யார் என்பது பற்றிய பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கத்தில் பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்துக்காக நதியா என்ற பெண் புரோக்கர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் குடும்பத்தினர் 6 பேரும் பிடிபட்ட நிலையில், மாணவிகளை வெளியில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த கோவை வாலிபரும், சென்னையை சேர்ந்த 70 வயது முதியவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெண் புரோக்கர் நதியா, பிளஸ்-2 படிக்கும் தனது மகளை வைத்து மாணவிகளுக்கு வலை விரித்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டிருந்தார். மாணவிகள் விலை பேசப்பட்டு வெளிமாநிலங்களுக்கும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு மாணவிகளை அழைத்துச் செல்ல பெரிய மனிதர்கள் பலர் ஆசைப்பட்டு விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதற்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை பணத்தை வாங்கிக் கொண்டு தரகர்கள் அனுப்பி வைத்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மாணவிகள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவை வாலிபர் மற்றும் சென்னையை சேர்ந்த முதியவரை போன்று யார்-யாரெல்லாம் சிறுமிகள் என்று தெரிந்தும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி பாலியல் புரோக்கர் நதியாவின் வாடிக்கையாளர்கள் யார்-யார்? என்பது பற்றிய பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் புரோக்கர்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி விபசார தடுப்பு பிரிவு போலீசார் பாலியல் புரோக்கர்களை பட்டியல் எடுத்து அவர்களை முழுமையாக வேட்டையாட முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக லாட்ஜுகள், தங்கும் விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    • தனது பெயரை அவர்களது உடலில் பச்சை குத்தி விடுவது இவன் வழக்கம்
    • பல வித சித்திரவதைகளை கையாண்டு தனது கூட்டத்திலிருந்து தப்பிப்பதை தடுப்பான்

    அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் வசித்தவன் "சுகர் பேர்" (sugar bear) என அழைக்கப்பட்டு வந்த சோமோரி மோசஸ் (47).

    2003 தொடக்கத்திலிருந்தே இவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி மயக்கி, பிறகு அவர்களை பல விதங்களில் அச்சுறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தான். தன்னை விட்டு அவர்கள் வெளியேறுவதை தடுக்க பல வழிமுறைகளை கையாண்டு வந்தான. அவர்களது உடலில் அவனது பெயரை பச்சை குத்தி விடுவான்.

    ஒரு பெண் இவரை விட்டு தப்ப முயன்ற போது அவளை அடித்து காயங்களின் மேல் எலுமிச்சை சாற்றை ஊற்றினான். வேறொரு பெண்ணை மின் ஒயரால் அடித்து காயங்களில் உப்பை தடவினான். மற்றொரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி இத்தொழிலில் ஈடுபட வைத்தான்.

    இந்நிலையில், 2017ல் லியாண்ட்ரா ஃபாஸ்டர் எனும் 32 வயது பெண்ணை அடித்து கொன்று விட்டான். பிறகு அவள் உடலை கத்தியாலும், அறத்தாலும் துண்டு துண்டுகளாக்கினான். சில பாகங்களை தனது வீட்டில் உள்ள ஃப்ரீசரில் மறைத்து வைத்த அவன், பல பாகங்களை எப்படியோ அழித்து விட்டான்.

    லியாண்ட்ரா காணாமல் போனதாக வந்த புகாரை காவல்துறை விசாரித்து வந்தது. லியாண்ட்ராவை தேடி வந்த காவல்துறையினர் சோமோரியின் வீட்டை சோதனையிட்ட போது, "சோமோரி" என பச்சை குத்தப்பட்ட ஒரு உடல் பாகம் அவன் வீட்டில் சிக்கியது. இதனை தொடர்ந்த நடைபெற்ற தீவிர விசாரணையில் அவன் கைது செய்யப்பட்டான்.

    குற்றத்தை ஒப்பு கொண்ட சோமோரி 15 வருட சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளான்.

    • தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு வீட்டில் 4 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்றுள்ளதை கண்டுள்ளனர்
    • குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 பேரை மாவட்ட தனி ப்படை போலீசார் கைது செய்து நடவ டிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு வீட்டில் 4 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்றுள்ளதை கண்டுள்ளனர். அதனையடுத்து இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 5 நபர்களை காவல்த்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 4 இளம் பெண்களையும் மீட்டு ஆவுடையார்கோவில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பாதிக்கப்பட்ட பெண் வயது வந்தவர்.
    • பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மும்பை :

    மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் முல்லுண்டு பகுதியில் சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை மஜ்காவ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 34 வயது பெண்ணை ஒரு ஆண்டு தேவ்னாரில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் ஒழுக்ககேடாக எதையும் செய்யவில்லை என கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.பாட்டீல், "பெண்ணை ஒரு ஆண்டு காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவை அதிரடியாக ரத்து செய்தார்.

    மேலும் உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

    சம்பந்தப்பட்ட பெண் ஏற்கனவே தவறு செய்தார் என்பதற்காக, அவர் மீண்டும் அதே தவறை செய்து இருப்பார் என போலீசார் பிடித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் வயது வந்தவர். அவர் வேலை செய்ய உரிமை இருக்கிறது. சட்டப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் அல்ல. பொது இடங்களில் பாலியல் தொழில் செய்து, அதனால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் தான் குற்றம் என கூற முடியும்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் பொது இடத்தில் பாலியல் தொழில் செய்தார் என்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை. இந்த சூழலில் ஏற்கனவே நடந்ததை வைத்து பெண்ணை பிடித்து காப்பகத்தில் அடைத்து வைத்து இருப்பது சரியல்ல. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய் வேண்டும். பெண்ணை அவரது விருப்பத்துக்கு மாறாக காப்பகத்தில் அடைத்து வைப்பது, அவர் நாடு முழுவதும் சென்று வரும் உரிமைக்கு தடையாக இருக்கும். சட்டப்படியும், பெண்ணின் வயதின்படியும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பெண்ணை காப்பகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • அழகான பெண்கள் இருப்பதாகவும் ரூ.500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி உள்ளார்
    • ஒரு அறையில் அரைகுறை ஆடையுடன் இளம் பெண் இருந்தது தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சுண்டன்பரப்பு கிராமத்தைச்சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒருவர், அவரை வழிமறித்து தனது வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும் ரூ.500 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணையில் இறங்கினர். மேலும் குறிப்பிட்ட வீட்டிற்கு அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் அரைகுறை ஆடையுடன் இளம் பெண் இருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஒரு வாலிபரையும் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ராஜேஷ் (வயது 38) என்பதும் கேரள மாநிலம் திருவ னந்தபுரம் ஆனை நலவட்டம், கடைக்காவூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் என்பதும் தெரியவந்தது.

    இவர் சுவாமி நாதபுரம் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பெண் களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார். அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்ணை நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு காப் பகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

    • இளம்பெண்களை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
    • நடிகையின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று மாடல் அழகிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போஜ்புரி நடிகை சுமன் குமாரியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மாடல் அழகிகளை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி மும்பை குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-

    போஜ்புரி நடிகை சுமன் குமாரி (வயது 24), மாடலிங் தொழில் செய்யும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யபப்பட்டுள்ளார். அவர் வசம் இருந்த மூன்று மாடல் அழகிகள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    இவ்வாறு காவல்துறை கூறி உள்ளது.

    • இந்திரா, ராஜலட்சுமி என்பவரை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்றுள்ளார்.
    • அனைத்து மகளிர் போலீசார் இந்திராவை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே திட்டுக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி இந்திரா (வயது 45). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வால்காரை பகுதியைச் சேர்ந்த வீராசாமி மனைவி ராஜலட்சுமி (29) என்பவரை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்றதாக சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அனைத்து மகளிர் போலீசார் இந்திராவை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்ததில் ராஜலட்சுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது. உடனே அனைத்து மகளிர் போலீசார் இந்திரா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பியூட்டி பார்லரில் அர்ச்சனா வேலைபார்த்தபோது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக தகவல்
    • அர்ச்சனாவின் வலையில் சிக்கிய ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் முயற்சி நடந்து வருவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அர்ச்சனா நாக் என்ற 26 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார்.

    ஒடிசா திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஒரு பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அர்ச்சனா குறித்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

    ஆரம்பகாலத்தில் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்த அர்ச்சனா, பின்னர் பியூட்டி பார்லரில் சேர்ந்ததாகவும் அங்கு ஜெகபந்து சந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்ததாகவும், பியூட்டி பார்லரில் வேலைபார்த்தபோது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வந்தார். இதனால் அரசியல்வாதிகள், பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை அவர் நன்கு அறிந்திருந்தார். இதன்மூலம் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் அர்ச்சனா நட்பாக பழகியதுடன், அவர்களுக்கு பெண்களை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.


    அர்ச்சனாவின் வலையில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி) கட்சித் தலைவர்கள் சிக்கியிருக்கலாம் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பிஜேடி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் அர்ச்சனாவுக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டால் ஒடிசாவில் 22 ஆண்டுகால நவீன் பட்நாயக் ஆட்சி கவிழ்வதற்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்எஸ் சலுஜா கூறி உள்ளார்.

    இதற்கு முன்பு வேறு சில வழக்குகளில் செய்தது போன்று, அர்ச்சனாவின் வலையில் சிக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் இளைஞரணி தலைவர்களை பாதுகாக்கும் முயற்சி நடந்து வருவதாகவும் சலுஜா குற்றம் சாட்டினார்.

    18 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் அர்ச்சனாவின் நெட்வொர்க்கில் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பிஜேடி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், பாஜக புவனேஸ்வர் பிரிவுத் தலைவர் பாபு சிங் கூறியிருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிஜேடி மறுத்துள்ளது. தங்கள் தலைவர்களுக்கு தொடர்பு இருந்தால் அதுபற்றிய ஆதாரங்களை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விவகாரம் ஒடிசா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×