என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 பேருக்கு"

    • மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 971 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோ தனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரி க்கை வைத்துள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ள னர்.

    • குத்தியாலத்தூர் காப்புகாட்டுப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • அப்பொழுது அங்கு சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் காப்புகாட்டுப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்பொழுது அங்கு சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. சந்தன மரம் வெட்டிய நபர்கள் யார் என வனச்சரகர் தினேஷ் தலை மையில் வனத்துறையினர் ரகசிய ஆய்வில் ஈடுபட்டனர்.

    இதில் கேர்மாளம் அருகே உள்ள கானாகரை கிராமத்தை சேர்ந்த ஜடைசாமி (35), முருகேஷ் (32), மகாதேவா (48) மற்றும் கர்நாடக மாநிலம் எத்தே கவுடண்தொட்டியை சேர்ந்த மாதேகவுடா (45) என 4 பேரும் சந்தன மரம் வெட்டியது தெரிய வந்தது.


    அவர்களை பிடித்து விசாரணை மேற்கொ ண்டதில் 4 பேரும் சந்தன மரம் வெட்டியதை ஒப்பு க்கொண்டனர். பின்னர் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா உத்தரவில் 4 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 40 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    ×