என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்"
- யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
- பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை 2-ம் நாளான நாளை மதியம் நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி - புரட்டாசி மாதம் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு யாகசாலை வந்தார். 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளினார். மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார். இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும், இதனால் இந்நிகழ்ச்சி பூ பரத்திய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூழிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எனவே இதற்கு நூழிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
பவித்ரோத்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம் பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு மேற்கில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
இந்த பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை 2-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.
பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும், எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெற உள்ளது
- பக்தர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள்
திருச்சி:
108 வைணத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்ேவறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து நாட்களிலும் உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
அந்த வகையில், நாளை (24-ந்தேதி, திங்கட்கிழமை) தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு சந்தனு மண்டபம் சென்றடைகிறார்.
தொடர்ந்து காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். அதனைத் தொடர்ந்து பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை அலங்காரம், அமுது செய்தலுக்கு பின்னர் மாலை 4.45 மணிக்கு ஜாலி (சாலி) அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.
இரவு 8 மணிக்கு சந்தனு மண்டலத்தில் இருந்து புறப்படும் உற்சவர் நம்பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுக்கு மரியாதையாகி இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். காலை 6.45 மணி முதல் 8 மணி வரை விஸ்வரூப தரிசனம், பூஜா காலம் காலை 8 மணி முதல் 10 மணி வரை சேவை நேரம் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை பகல் 1.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆகும். இரவு 7 மணிக்கு மேல் ஆரியப்படாள் வாயிலில் அனுமதி இல்லை.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்