என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பீடி இலைகள் பறிமுதல்"
- வெளிமாவட்டத்தில் இருந்து பீடிஇலைகள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடிக்கு வெளிமாவட்டத்தில் இருந்து பீடிஇலைகள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரை சாலை ரோச் பூங்கா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்ததது. அப்போது போலீசாரை பார்த்ததும் ஆட்டோவில் இருந்த 2 பேர் தப்பிச் சென்றனர்.
போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 42 மூட்டைகளில் 35 கிலோ பீடிஇலைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பீடிஇலைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பீடிஇலைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? பீடிஇலைகள் இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்களா? இதில் தொடர்புடையவர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தி, தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடிஇலைகள், மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்.
- தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
- தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதனை தடுக்க கடலோர காவல்படையினரும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், தூத்துக்குடி நகர உட்கோட்ட சிறப்பு படை போலீஸ் தலைமை காவலர் மாணிக்கராஜ் மற்றும் மகாலிங்கம், சாமுவேல், செந்தில் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த மினிலாரியில் இருந்து சிலர் தப்பி ஓடினர். எனினும் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் அவர் மினிலாரியை ஓட்டிவந்த தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த சார்லஸ் (வயது41) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் மினிலாரியை சோதனையிட்டனர். அதில் 49 மூட்டைகளில் 2,500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவைகள் தூத்துக்குடியில் இருந்த இலங்கைக்கு கடத்த முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சார்லசை கைது செய்தனர்.
மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து. பீடி இலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதில் தொடர்புடையவர்கள் யார்- யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடியவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- படகினை சோதனை செய்ததில், அதில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 1400 கிலோ எடை கொண்ட, 41 பீடிஇலை பண்டல்கள் இருந்தது.
- கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், படகை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வீரபாண்டியபட்டிணம் ஜீவா நகர் கடற்கரை பகுதியில் மர்ம நபர்கள் சிலர் படகுடன் கடத்தலில் ஈடுபடுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கியூப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், சுரேஷ்குமார், சுரேஷ், கந்தசாமி, தலைமை காவலர்கள் ராமர், பாலகிருஷ்ணன், கோவிந்தராஜ், முதல் நிலை காவலர்கள் இருதயராஜ், பழனி பாலமுருகன் ஆகியோர் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டிணம் ஜீவா நகர் கடற்கரை பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து அதனை சோதனை செய்ய முயன்றனர். அப்போது, அதிலிருந்து தப்பி ஓட முயன்ற நபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும் பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து படகினை சோதனை செய்ததில், அதில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 1400 கிலோ எடை கொண்ட, 41 பீடிஇலை பண்டல்கள் இருந்தது.
இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி இந்திரா நகர் பிரபு (41) அலங்கார தட்டு ஜெயக்குமார் (32) தாளமுத்து நகர்-இந்திராநகர் இரட்சகர் (36) திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி ரஞ்சித்(42) மற்றும் திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெரு மெல்வர்(30) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மெல்வருகு சொந்தமான படகையும் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்