என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குவிந்த பயணிகள்"
- தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்பினர்
- பஸ் மற்றும் ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறினர்
வேலூர்,
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல கடந்த 21-ந் தேதி முதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதே போல ரெயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து பணி செய்யும் இடத்திற்கு அவரவர்கள் இன்று திரும்பினர். இதனால் நேற்று மாலையில் இருந்து வேலூர் புதிய, பழைய பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இன்று காலையிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடி ரெயில் நிலையங்களில் ஊருக்கு செல்வதற்காக பயணிகள் கூட்டம் அதிகரித்தது
இதனால் பஸ் மற்றும் ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறிச் சென்றனர்.
- தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட எதுவாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
- முன்பதிவு பெட்டி கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடிக்க ஏறினர்.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாட எதுவாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட ஆயிரக்கண க்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதைப்போல் வெளி மாவட்டத்தில் தங்கி இருந்த ஈரோடு மாவட்ட மக்களும் தீபாவளி கொண்டாடு வதற்காக ஈரோட்டுக்கு வந்தனர்.
இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க ப்பட்டன. மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் கல்லூரி கள் திறக்கப்படுகின்றன. இதேபோல் அரசு| தனியார் அலுவலகங்களும் நாளை முதல் வழக்கம் போல் செயல்பட தொடங்குகிறது.
இதையடுத்து தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் இன்று முதல் மீண்டும் ஈரோடுக்கு திரும்பி வருகின்றனர். இதே போல் ஈரோட்டில் இருந்து வெளி யூருக்கு செல்பவர்களும் இன்று திரும்பி சென்றனர்.
இதன் காரணமாக இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. முன்பதிவு பெட்டி கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடிக்க ஏறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்