search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மற்றொரு சம்பவம்"

    • 5 பேரும் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • ஆட்டோ டிரைவரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    விழுப்புரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கார் டிரைவரான இவரும் இவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ஆண்டாள் (75), அவரது மகள்களான திலகவதி, பத்மாவதி, பேத்தி காந்தமி ஆகியோருடன் காரில் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதற்காக அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்து மீண்டும் சேத்பட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது திண்டிவனத்தை அடுத்த மொளசூர் அருகே வரும்போது முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் காரானது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற 5 பேரும் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆண்டாள் ஆபத்தான நிலையில்மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருவண்ணா மலை மாவட்டம் அண்ட ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். ஆட்டோ டிரைவரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நி லையில் இவர் குடும்பத்துடன் திருவண்ணா மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் சென்னைக்கு தனது மனைவி சாந்தி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆட்டோ வில்சென்று கொண்டி ருந்தார். ஆட்டோ திண்டிவனத்தை அடுத்த சாரம் அருகே சென்றுக் கொண்டிருக்கும்போது, முன்னாள் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேரும் காயமடைந்தனர். அவர்கள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் நாகேந்திரன் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அருகே இருவேறு விபத்தில் 9 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயமானார்.
    • சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள 78 கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் அமுதவல்லி (வயது 20) என்பவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நூல் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17-ந் தேதி வீட்டுக்கு வந்த அவர் 24-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசில் அமுத வள்ளியின் அண்ணன் மணிகண்டன் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து மாயமான அமுதவல்லியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு தெருவில் வசித்து வருபவர் கேசவன் (44). இவருடைய மகள் ரஞ்சனி (21) பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. இது குறித்தும் உளுந்தூர்பேட்டை போலீசில் கேசவன் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் செல்வம் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றார். உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தில் பிளஸ்-2 படித்து வரும் சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில், சிறுமியின் தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றார். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் பள்ளி மாணவர்கள் 3பேர் மாயமானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிைய ஏற்படுத்தி உள்ளது.

    ×