search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி கோவில்"

    • சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இன்று காலை பிரமோற்சவ விழாவில் சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடந்தது. மாட வீதிகளில் ஏழுமலையான் பவனி வந்தார்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்திற்கு முன்பாக பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    நேற்று ஏழுமலையான் கோவிலில் 62,745 பேர் சாமி தரிசனம் செய்தனர். 24,451 பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 19 காத்திருப்பு அறைகள் நிரம்பியது. 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் வி.ஐ.பி . தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது.
    • பக்தர்கள் குறுக்கு வழியில் தரிசனம் செய்வதற்காக புரோக்கர்களிடம் சிக்கி பணத்தை இழந்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பவன்குமார் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர்களிடம் தரிசன டிக்கெட் இல்லாததால் தேவஸ்தான ஊழியர் நாகபூஷணம் என்பவரை நாடினர்.

    அவரது பரிந்துரை கடிதத்தின் மூலம் புரோக்கர் சுரேஷ் என்பவர் இரண்டு கல்யாண உற்சவ டிக்கெட்டுகளை பெற்று பவன்குமாரிடம் ரூ.28,500க்கு விற்பனை செய்தார்.

    ஆயிரம் ரூபாய் கல்யாண உற்சவ டிக்கெட்டுகளை ரூ.28,500 கொடுத்து ஏமாந்ததை அறிந்த பவன்குமார் இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பத்மநாபனிடம் புகார் செய்தார்.

    இது குறித்து பவன் குமார் மற்றும் விஜிலன்ஸ் அதிகாரி பத்மநாபன் திருமலையில் உள்ள போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள திருப்பதி தேவஸ்தான ஊழியர் நாகபூஷணம் மற்றும் புரோக்கர் சுரேஷை தேடி வருகின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகிறது.எனவே பக்தர்கள் யாரும் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அடிக்கடி அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

    இருப்பினும் பக்தர்கள் குறுக்கு வழியில் தரிசனம் செய்வதற்காக புரோக்கர்களிடம் சிக்கி பணத்தை இழந்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்வதற்காக வரும் 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தினமும் 1000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 7000 தரிசன டிக்கெட்களை தேவஸ்தானம் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிட்டது.

    திருப்பதியில் நேற்று 71,434 பேர் தரிசனம் செய்தனர். 24,212 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.78 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும்.
    • வி.ஐ.பி. தரிசன நேரம் காலை 8 மணிக்கு மாற்றப்படுகிறது.

    திருப்பதியில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கும் முறை நிறுத்தப்பட்டது. இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:- கடந்த அறங்காவலர் குழு கூட்டத்தின்போது, பக்தர்களுக்கு மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. அந்த டோக்கன்கள் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதி ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்-2 ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளன. அதற்காக, அனைத்து வசதிகளுடன் கூடிய கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். மேலும் சாதாரணப் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருப்பதைத் தவிர்க்க வி.ஐ.பி. தரிசன நேரத்தை டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து காலை 8 மணியாக மாற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×