என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆடுகள் விலை உயர்வு"
- ஆடி மாதத்தில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
- அதிகளவில் வியாபாரிகள் வந்ததால் 9 மணிக்கே பெரும்பாலான ஆடுகள், கோழிகள் விற்று தீர்ந்தன.
வடமதுரை:
திண்டுக்கல்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் அய்யலூர் பகுதியில் வார ந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மட்டு மல்லாது திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் ஆடு, கோழி கள் வாங்க வருகின்றனர். தற்போது கிராமங்களில் ஆடித்திருவிழாக்கள் களைகட்டி வருகிறது. இன்று ஆடி 18 என்பதால் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடை பெற்று வருகிறது. மேலும் வண்டிகரு ப்பணசாமி கோவிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கிடாவெட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
7 கிலோ கொண்ட ஆடுகள் ரூ.10ஆயிரத்திற்கு விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. அதிகாலை 4 மணிக்கே ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனர். அதிகளவில் வியாபாரிகள் வந்ததால் 9 மணிக்கே பெரும்பாலான ஆடுகள், கோழிகள் விற்று தீர்ந்தன. அதன்பின்னர் கிடாவெட்டுக்கு ஆடுகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வருங்காலங்களில் ஆடு, கோழிகளின் விலை உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். எனவே இதற்கு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு கோவில்களில் பொங்கல் வைத்து கிடா ெவட்டுவது வழக்கம். இதனால் தற்போதே ஆடுகளை வாங்கி வளர்க்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- இன்று அதிகாலை முதலே சந்தையில் வியாபாரிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே அய்யலூரில் வியாழ க்கிழமை தோறும் ஆட்டு ச்சந்தை கூடி வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆடு, கோழி, காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புது க்கோட்டை, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு கோவில்களில் பொங்கல் வைத்து கிடா ெவட்டுவது வழக்கம். இதனால் தற்போதே ஆடுகளை வாங்கி வளர்க்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை முதலே சந்தையில் வியாபாரிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7500 முதல் ரூ.9000 வரை விற்பனையானது. குளிரை தாங்கி வளரும் செம்மறி ஆட்டுக்குட்டிகள் ரூ.3000க்கு விலை கேட்கப்பட்டது. இளம் நாட்டு கோழிகள் கிலோ ரூ.350க்கு விற்பனையானது.
அய்யலூர் சந்தையில் பல வருடங்களாக வியா பாரிகள், விவசாயிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெளி மாவட்ட ங்களில் இருந்து அ திக அளவில் வருகின்றனர். இங்கு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஆனால் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சந்தையை எடுத்து நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
- 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. அவை மளமளவென்று விற்று தீர்ந்தன.
மூலனூர்:
கடந்த 2 மாதங்களாக மழை பெய்துள்ளதன் காரணமாக ஆடுகளுக்கு தீவனம் கிடைத்ததால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வரவில்லை. இதனால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரத்தில் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தைக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. அவை மளமளவென்று விற்று தீர்ந்தன.
இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது "தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது .கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்