search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ்.தோனி"

    • ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி 661 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விவாத நிகழ்ச்சியில் நேற்று (மே 17) பங்கேற்ற சுனில் கவாஸ்கர் மற்றொரு கருத்தை கூறியுள்ளார்.

    ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பை தொடர்ந்து அதிகரித்து வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி 661 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இருப்பினும் ஆராம்ப போட்டிகளில் தனது சொந்த சாதனைகளை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்திய கோலி சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதே பெங்களூரு அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைய காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

     

    ஹைதராபாத்துக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியில் 15 ஓவர்கள் வரை விளையாடிவிட்டு கடைசியில் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி பெங்களூரு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் என்று முன்னாள் கிரிக்கட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். இதற்கு பதிலளித்த விராட் கோலி , நான் அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறேன். மற்ற யாருக்காகவும் விளையாடவில்லை என்று பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நேற்று (மே 17) பங்கேற்ற சுனில் கவாஸ்கர் மற்றொரு கருத்தை கூறியுள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விராட் கோலி தன்னுடைய கேரியரை துவங்கிய போது அது நிலையான கேரியராக இல்லை. இப்போது நாம் பார்க்கும் விராட் கோலிஇந்த நிலைமைக்கு வர தொடக்க காலகட்டங்களில் கோலியின் ஆட்டத்துக்கு பலம் சேர்த்து அவருக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த எம்எஸ் தோனியே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

     

    • கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது
    • இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அதில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் துரூவ் ஜுரல் 90 ரன்கள் சேர்த்துத் தடுமாறிய இந்திய அணியை ஓர் அளவிற்கு ரன்கள் சேர்க்க உதவினார். இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் துருவ் ஜுரல் தனது முதல் டெஸ்ட் அரைச்சதத்தைப் பதிவு செய்தார்.

    இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துத் தடுமாறி இருந்த போது தான் துருவ் ஜுரல் களத்திற்கு வந்து, இந்திய அணியை ஓர் நல்ல ரன்களை எடுக்க உதவியாக இருந்தார்.

    துருவ் ஜுரலின் இந்த ஆட்டத்தை பார்த்து வியந்த சுனில் கவாஸ்கர் அவரை முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியோடு ஒப்பிட்டுப் பாராட்டி உள்ளார்.

    இது குறித்து பேசிய கவாஸ்கர், "கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது. இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது" இவ்வாறு சுனில் கவாஸ்கர் துருவ் ஜுரலை பாராட்டியுள்ளார்.

    • ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக தோனி புகார் கூறியிருந்தார்.

    கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2014 ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் ஆகியோர் எதிர்மனு தாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சம்பத் குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறி, சம்பத் குமார் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அனுமதியை பெற்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தோனி தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×