search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிரவாத தடுப்பு ஒத்திகை"

    • ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது.
    • கடலில் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கடலில் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்திய கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை சாகர் கவாச் ஒத்திகை நடைபெறுகிறது.

    புதுச்சேரி கடல் பகுதியில் மீன்பிடி படகில் தொலைநோக்கு கருவிகள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    புதுச்சேரி மீனவ கிராமங்களான காலாப்பட்டு, புதுக்குப்பம் வீராம்பட்டினம் உள்ளிட்ட 16 கிராமங்களில் சந்தேகம்படும்படி கடலில் தென்படும் கப்பல்கள், படகுகள் குறித்தும் சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டாலும் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • நாடு முழுவதும் கடல் வழியே தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.
    • தேங்காய்திட்டு துறைமுக வளாகத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமான அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் சீ விஜில் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி நாளை மாலை வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடல் வழியே தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதில் இந்திய கடலோர காவல் படை, மத்திய சுங்கத்துறை மற்றும் புதுவை கடலோர காவல்படையினர் இணைந்து ஆழ்கடல் மற்றும் கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக பகுதியான கோட்டகுப்பம் அருகே ஆழ்கடலில் கள்ளத்தோணி மூலம் தீவிரவாத வேடமிட்ட 9 நபர்களை அடையாளம் கண்ட கடலோர காவல் படையினர் ஆழ் கடலில் விரட்டிச்சென்று கைது செய்தனர். இவர்களை தேங்காய்திட்டு துறைமுக வளாகத்தில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமான அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    அவர்களிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தீவிர தீவிரவாத தடுப்பு ஒத்திகை நாளை மாலை வரை தொடர்கிறது.

    ×