என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிசூடு"

    • பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது

    அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் உயிர்பலி அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போது மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி வெற்றி விழாவில் ஏற்பட்ட மோதல் துப்பாக்கிசூட்டில் முடிந்துள்ளது.

    இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் தண்டனை வழங்கியது
    • பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டிருந்தார்

    பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை ஆட்சி செய்த சிரோமணி அகாலி தள அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் அக்கட்சியினருக்கு மத முறைப்படி தன்கா [tankhah] தண்டனையை வழங்கியது.

    2015 ஆம் ஆண்டு பஞ்சாப் துணை முதல்வராக இருந்தபோது சிரோமணி அகாலி தல முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுக்பீர் சிங் பாதல்,  சீக்கியர்களுக்கும் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களைத் தூண்டிய வழக்கில் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சுக்பீர் சிங் பாதல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி அகால்தக்த் அவருக்கு இந்த  தண்டனையை விதித்துள்ளது. 

    இதன்படி  அம்ரிஸ்தரில் பொற்கோவிலில் சேவாதார் ஆக சேவை செய்ய முடிவானது. நேற்று முன் தினம் முதல் இந்த தண்டனையை ஏற்று சுக்பீர் சிங் பாதல் சேவத்தார் நீல நிற உடையுடன் பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டுக்கொண்டு கையில் ஈட்டியோடு கோவிலுக்கு காவல் இருந்து மத தண்டனையை நிறைவேற்ற தொடங்கினார்.

     

    அவருடன் ஆதரவாளர்களும் உடன் இருந்தனர். அகாலிதளத்தின் மூத்த தலைவரும், பாதலின் மைத்துனருமான பிக்ரம் சிங் மஜிதியா, பொற்கோவிலில் பாத்திரங்களைக் கழுவித் தனது தண்டனையை நிறைவேற்றி வந்தார்.

    இந்நிலையில் பொற்கோவில் வாசலில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் பாதல் மீது இன்று [ புதன்கிழமை] காலை திடீர் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் அருகே நெருங்கிய நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார். ஆனால் அருகில் இருந்த ஆதரவாளர் ஓடிச்சென்று அந்த நபரின் கையை தட்டி விட்டதால் சுக்பீர் சிங் உயிர்பிழைத்தார்.

    சுற்றியிருந்த மக்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கிச்சூடு நடந்திய நபர் நரேன் சிங் சௌரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பபர் கால்ஸா இன்டர்நேஷனல் (BKI) என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது. 

     

    • எஸ்.கே.சக்சேனா (55 வயது) கடந்த 5 வருடங்களாக தலைமை ஆசிரியராக இருந்து வந்தார்.
    • நெற்றியில் குண்டு பாய்ந்த சக்சேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை சுட்டுக் கொலை செய்து அவரது ஸ்கூட்டரிலேயே 12 ஆம் வகுப்பு மாணவன் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் [Chhatarpur] மாவட்டத்தில் தாமோரா [Dhamora] அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக கடந்த 5 வருடங்களாக எஸ்.கே.சக்சேனா (55 வயது) இருந்து வந்தார்.

    இந்நிலையில் இன்று மதியம் 1:30 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற சக்சேனா மீது அதே பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளான். நெற்றியில் குண்டு பாய்ந்த சக்சேனா சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.

     

    சம்பவத்தின்பின் சக்சேனாவின் ஸ்கூட்டரிலேயே 12 ஆம் வகுப்பு மாணவனும் அவனுடன் வந்த கூட்டாளியும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தப்பியோடிவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • யமுனா விளையாட்டு வளாகத்தில் இன்று காலை வாக்கிங் சென்றார்
    • ஏழு முதல் எட்டு சுற்று ரவுண்டுகள் சுட்டுள்ளனர்.

    தலைநகர் டெல்லியில் அதிகாலை வாக்கிங் சென்ற 53 வயது தொழிலதிபர் பைக்கில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியின் ஷாஹ்தாரா மாவட்டத்தில் உள்ள ஃபார்ஷ் பஜார் பகுதியில் யமுனா விளையாட்டு வளாகத்தில் இன்று [சனிக்கிழமை] காலை சுனில் ஜெயின் [53 வயது] நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்றிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த இருவர் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

     ஏழு முதல் எட்டு சுற்று ரவுண்டுகள் சுட்டுள்ளனர். இதில் ஜெயின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிருஷ்ணா நகரில் வசிக்கும் ஜெயின் பாத்திர தொழில் செய்து வந்தவர் ஆவார். இவருக்கு எதிரிகள் யாரும் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வாருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருவதாக துணை போலீஸ் கமிஷனர் ஷஹ்தரா தெரிவித்துள்ளார்.

    நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு டெல்லியின் கோவிந்த்புரி பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில் பொது கழிப்பறையை 'ஃப்ளஷ்' செய்வது தொடர்பாக அக்கம்பக்கத்தினருக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்துள்ளது.

    பிகாம் சிங் என்ற நபர் தனது பக்கத்து வீட்டுக்காரர் சுதீர் என்பவரை சமையலறை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த இரண்டு சம்பவங்களையும் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி பொதுச்செயலாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆட்சியில் குற்றவாளிகள் முற்றிலும் அச்சமற்றவர்களாக மாறிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.

    • வேனுக்குள் இரண்டு காவலர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தன.
    • செலக்ஷன் கான்ஸ்டபிள் ஒருவர் காயமின்றி தப்பினார்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ்காரர் ஒருவர் தனது சக ஊழியரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    வடக்கு காஷ்மீரின் சோபோரில் இருந்து ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் உள்ள துணைப் பயிற்சி மைய (எஸ்டிசி) தல்வாராவுக்கு இரண்டு காவலர்கள், மற்றொரு சக ஊழியருடன் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    காலை 6:30 மணியளவில் உதம்பூரின் ரெஹெம்பல் பகுதியில் உள்ள காளி மாதா கோவிலுக்கு அருகே போலீஸ் வேனுக்குள் இரண்டு காவலர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தன.

     

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அதிகாரிகள், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வாக்குவாதத்தில் டிரைவரை தலைமை கான்ஸ்டபிள் தனது ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார் என்று தெரிவித்தனர்.

    வாகனத்தில் பயணித்த மற்றொரு நபரான தேர்வு செலக்ஷன் கிரேடு கான்ஸ்டபிள் ஒருவர் காயமின்றி தப்பியதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

     

    • கைத்துப்பாக்கியுடன் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
    • கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் போன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தியவர்கள்.

    ஈரான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தலைநகர் தெஹ்ரானில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் இன்று [சனிக்கிழமை] காலை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு நீதிபதிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைத்துப்பாக்கியுடன் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    பலியானவர்கள் அல் ரஜினி மற்றும் அல் மொகிஸ்சே என அடையாளம் காணப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

    கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் போன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தி வந்தவர்கள் என ஈரானின் நீதித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் தெரியாத நிலையில் அவர் மீது இதற்குமுன் எந்த வழக்கும் இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

    • முதுகலை படிப்பதற்காக 2022 இல் அமெரிக்கா சென்ற ரவி தேஜா சமீபத்தில் தனது படிப்பை முடித்து அங்கு வேலை தேடி வந்தார்.
    • அவரது தந்தை கொய்யாடா சந்திரமௌலி செய்தியாளர்களிடம் கூறினார்.

    அமெரிக்காவில் வேலை தேடி வந்த இந்திய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கனா மாநிலம் ஐதராபாத்தின் சைதன்யபுரி பகுதியில் உள்ள ஆர்.கே.புரம், கிரீன் ஹில்ஸ் காலனியைச் சேர்ந்தவர் கொய்யாடா ரவி தேஜா. முதுகலை படிப்பதற்காக 2022 இல் அமெரிக்கா சென்ற ரவி தேஜா சமீபத்தில் தனது படிப்பை முடித்து அங்கு வேலை தேடி வந்தார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் அவென்யூவில் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தேஜா வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக இன்று காலை எங்களுக்கு தகவல் கிடைத்தது என்று அவரது தந்தை கொய்யாடா சந்திரமௌலி செய்தியாளர்களிடம் கூறினார்.

    குடும்பத்தினருக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, தேஜா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரியவந்துள்ளது. 

    • நண்பர்கள் புனித் மற்றும் குகால் ஆகிய இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்
    • ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.

    அரியானாவில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள நாராயண்கரில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா (41 வயது) படுகொலை செய்யப்பட்டார்.

    நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு தனது நண்பர்கள் புனித் மற்றும் குகால் ஆகிய இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.

    உடனே அவர்கள் மீட்க்கப்பட்டு சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ஹர்பிலாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவே உயிரிழந்தார். புனித் தற்போது நலமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

     

    • ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.
    • முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின

    உலகிலேயே தன்னை ஓரினசேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த முதல் இஸ்லாமிய மதகுரு இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ்(57) சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரமான க்வெபர்ஹா(Gqeberha) அருகே நேற்று (சனிக்கிழமை) முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட இமாம் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பிற ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் புகலிடமாக கேப் டவுனில் உள்ள வின்பெர்க்கில் அல்-குராபா மசூதியை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று அவர் ஒருவருடன் காரில் இருந்தபோது, ஒரு வாகனம் அவர்களுக்கு முன்னால் நின்று அவர்கள்  வழியைத் தடுத்தது. முகத்தை மறைத்த இரண்டு மர்ம நபர்கள் அந்த காரில் இருந்து இறங்கி இமாமின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

     

    இதில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டியவர் காயங்களுடன் தப்பித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கொலைக்கான நோக்கம் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினத்தவர், திருநங்கைகள் சங்கம் (ILGA) இந்தக் கொலையைக் கண்டித்தது.

    "முஹ்சின் ஹென்ட்ரிக்ஸின் கொலைச் செய்தியால் ILGA வேர்ல்ட் குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. வெறுப்பு காரணமாக நடந்த குற்றம் என இதை நாங்கள் அஞ்சுகிறோம். அதிகாரிகள் இதை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று அதன் நிர்வாக இயக்குனர் ஜூலியா எர்ஹார்ட் தெரிவித்துள்ளார். 

    பல்வேறு LGBTQ ஆதரவு குழுக்களில் PANIYATRIYAஹென்ட்ரிக்ஸ், 1996 இல் ஓரினச்சேர்க்கையாளராக தன்னை வெளிப்படையாக அறிவித்திருந்தார். 

    • மஹோலி தாலுகாவில் அரசு நெல் கொள்முதல் மற்றும் நில பேரங்களில் நடந்த முறைகேடுகள் குறித்துசெய்தி வெளியிட்டார்.
    • கடந்த பத்து நாட்களாக ராகவேந்திராவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பத்திரிகையாளர் ராகவேந்திர பாஜ்பாய் (35) ஒரு முன்னணி இந்தி நாளிதழில் பிராந்திய நிருபராகப் பணியாற்றி வந்தார். நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் சீதாபூர் மாவட்டத்தின் இமாலியா சுல்தான்பூர் பகுதியில் சீதாபூர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அந்த பத்திரிகையாளர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினர்.

    மர்ம நபர்கள் சுட்டதில் மூன்று தோட்டாக்கள் அவரது தோள்பட்டை மற்றும் மார்பில் பாய்ந்தன. உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.

    உள்ளூர் மக்களின் உதவியுடன், காவல்துறையினர் பத்திரிகையாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    சமீபத்தில் மஹோலி தாலுகாவில் அரசு நெல் கொள்முதல் மற்றும் நில பேரங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து ராகவேந்திர பாஜ்பாய் செய்தி வெளியிட்ட நிலையில் 4 அரசு அதிகாரிகள் (லெக்பால்) இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கடந்த பத்து நாட்களாக ராகவேந்திராவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாகவும், மிரட்டல் வந்த செல்போன் கால்களை டிரேஸ் செய்து வருவதாகவும் சீதாபூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) பிரவீன் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.

    உத்தரப்பிரதேசத்தில் பாஜக காட்சியின்கீழ் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் சமாஜ்வாடி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. 

    • திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.
    • பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார்.

    குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் 76 வயதான ராம் போரிச்சா. இவரது 52 வயது மகன் பிரதாப், அவரது மனைவி ஜெயா, மகன் ஜெய்தீப் ஆகியோர் ஒரு வீட்டிலும், அவர்களது பக்கத்து வீட்டில் ராம் போரிச்சாவும் வசித்து வந்தனர். வெவ்வேறு வீடுகளில் வசித்தாலும், அவர்களின் தந்தைக்கான உணவு பிரதாப்பின் வீட்டிலிருந்தே சென்றது.

    ராம் போரிச்சாவின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அன்றிலிருந்து தனியாக வசித்து வரும் ராம் போரிச்சா, மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

    இதை அவர் தனது மகன் பிரதாப்பிடம் கூறினார். ஆனால் மகனும் அவனது குடும்பமும் இதற்கு மறுத்துள்ளது. திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு தாத்தா திருமணம் செய்தால் அவமானம் என்று எடுத்துக்கூறி உள்ளனர்.

    இதனால் கோபமடைந்த ராம் போரிச்சா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொடூரத்தைச் செய்தார். பிரதாப் தனது தந்தையிடம் சென்று தேநீர் குடிக்க வருமாறு அழைக்க சென்றார்.

    ஏற்கனவே துப்பாக்கியுடன் காத்திருந்த ராம் போரிச்சா, அறையை பூட்டிவிட்டு, இரண்டு முறை மகனை சுட்டார். துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்ட மருமகள், மாமா ராம் போரிச்சா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தனது கணவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார்.

    பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மருமகளையும் மாமா ராம் போரிச்சா கொல்ல முற்பட்டார். இதை உணர்ந்த ஜெயா, உடனடியாக வெளியே ஓடி கதவைப் பூட்டினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, பால் வாங்க சென்றிருந்த மகன் ஜெய்தீப் திரும்பி வந்ததும் நடந்ததை கூறினார்.

    ஜெய்தீப் ஜன்னல் வழியாக தனது தாத்தா வீட்டிற்குள் எட்டிப் பார்த்தபோது, தனது தந்தை இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் தாத்தா அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கதவுகளைத் திறந்து ராம் போரிச்சாவைக் கைது செய்தனர். பிரதாப்பின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விசாரணையின் போது, தனது மகனைக் கொன்றதற்கு வருத்தப்படவில்லை என்றும், தனது மகன் பல நாட்களாக தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும் ராம் போரிச்சா தெரிவித்தார். 

    ×