search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024"

    • ஆர்சிபி எணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.
    • 2வது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான்- ஐதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன.

    ஐபிஎல்-ன் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி எணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.

    இதைதொடர்ந்து, 2வது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான்- ஐதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன.

    இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியோறியதை தொடர்ந்து, அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

    தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளதை அடுத்து, சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.

    ஆர்சிபி அணியின் கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல்-ல் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 45 ரன்னில் வெளியேறினார்.
    • ஆர்சிபி தரப்பில் சிராஜ், பெர்குசன், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படித்தார் 34 ரன்களும் மஹிபால் லோமரோர் 32 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - டாம் கோஹ்லர் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடி காட்டினர். டாம் கோஹ்லர் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 45 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய சாம்சன் சிக்சர் அடிக்க தேவையில்லாமல் இறங்கி வந்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜூரல் 8 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து ரியான் பராக் - ஹெட்மெயர் ஜோடி அணியின் வெற்றிக்காக போராடினர். கடைசி கட்டத்தில் ரியான் பராக் 36 ரன்னிலும் ஹெட்மெயர் 26 ரன்னிலும் ஓரே ஓவரில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆனால் அந்த சந்தோஷத்தை கொஞ்ச நேரம் கூட கொண்டாட முடியவில்லை. 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய பவல், கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் சிராஜ், பெர்குசன், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்கள் விளாசினார்.
    • ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.

    இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய சில நிமிடங்களில் பட்டிதார் 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் ரிவ்யூ மூலம் அவுட் இல்லை என தெரிய வந்தது.

    இதனையடுத்து தொடர்ந்து விளையாடிய தினேஷ் கார்த்திக், தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்சிபி அணிக்கு ஷாக் கொடுத்து 11 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு முனையில் நான் இருக்கிறேன் என அதிரடி காட்டிய மஹிபால் லோமரோர் 17 பந்தில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.

    • ராஜஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார்.
    • டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் (32 முறை) 4-வது இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.

    இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் (32 முறை) 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சுனில் நரைன் (44 முறை) உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் டக் அவுட் ஆன வீரர்கள் விவரம்:-

    18 - தினேஷ் கார்த்திக்

    18 - கிளென் மேக்ஸ்வெல்

    17 - ரோஹித் சர்மா

    16 - பியூஷ் சாவ்லா

    • எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    டூ பிளசிஸ் 17 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

    ஐ.பி.எல். தொடரில் 8 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷிகர் தவான் 6,769 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதற்கிடையே, விராட் கோலி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • குவாலிபையர் 2 போட்டி மே 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
    • இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியது. அந்த வகையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மே 24 ஆம் தேதி நடைபெறும் குவாலிபையர் 2 சுற்று போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள வேண்டும்.

    குவாலிபையர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    • ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி ரத்து செய்தது.
    • விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், ராஜஸ்தான் - பெங்களூரு போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும், "குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 2-5 மணிவரை பயிற்சி செய்ய பெங்களூரு அணி திட்டமிட்டிருந்தது. ஆனால் கோடைக்காலம் என்பதால் மாலை 6.30 மணிவரை வெளிச்சம் இருக்கும் என்பதால் பயிற்சியை 3-6 மணிக்கு மேற்கொள்ளலாம் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

    அதே சமயம் குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டது" என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    • ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோப்பை தங்களுடைய என்று அவர்கள் நம்புவார்கள்.
    • யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

    ஐபிஎல் 2024 சீசன் பிளேஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கியது. குவாலிபையர்-1ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    பிளேஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேறுமா? என்ற கேள்வி இருந்த நிலையில், தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆர்சிபி தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், கொல்கத்தா அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்வதை விரும்பாது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வருண் ஆரோன் கூறியதாவது:-

    இந்தமுறை சாம்பியன் படத்தை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், போட்டி நடைபெறும் அன்றைய தினத்தில்தான் ரிசல்ட் முடிவு செய்யப்படும். உங்களுடைய அணி சிறந்ததா? அல்லது மோசமானதா? என்பது விசயம் அல்ல. ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரும்பும் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் உத்வேகம். ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோப்பை தங்களுடைய என்று அவர்கள் நம்புவார்கள். யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

    இன்னும் முக்கியமான போட்டிகள் உள்ளன. இறுதிப் போட்டிக்கான நெருக்கடி முற்றிலும் மாறுபட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவரை கொல்கத்தா விரும்பாது. ஏனென்றால், ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விருபத்துடன் விளையாடி வருகின்றனர்.

    இவ்வாறு வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

    • 14 இன்னிங்சில் 308 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
    • இரண்டு அரைசதங்களுடன் 25.66 மட்டுமே சராசரி வைத்துள்ளார்.

    ஐபிஎல் 2024 சீசனின் பிளேஆஃப் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும். இதனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் விறுவிறுப்பில் பஞ்சம் இருக்காது.

    ஆர்சிபி அணி முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 14 போட்டிகளில் விளையாடி 708 ரன்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக கெய்க்வாட் 583 ரன்கள் எடுத்துள்ளார்.

    விராட் கோலி லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடினாலும் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் மற்றும் ரன்விகிதம் அதிகமாக இருந்ததில்லை.

    இதுவரை 14 பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். சராசரி 25.66 ஆகும். ஸ்டிரைக் ரேட் 120.31 ஆகும்.

    தொடர்ச்சியான ஆறு போட்டிகளில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றில் களம் இறங்குகிறது. இதனால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இதனை மனதில் வைத்து இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடி முந்தைய சறுக்கலில் இருந்து மீண்டு வந்து அணிக்கு தூணாக நிற்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விராட் கோலியும் அதே நிலையுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

    • பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனால் பயிற்சி ஆட்டத்தை ஆர்சிபி ரத்து செய்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி நேற்று ரத்து செய்தது. மேலும், செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்துள்ளது.

    கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

    விராட் கோலி அகமதாபாத்திற்கு வந்த பிறகு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதைப் பற்றி அறிந்தார். அவர் ஒரு தேசிய பொக்கிஷம், அவருடைய பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை என போலீசார் தெரிவித்தனர். அகமதாபாத்தில் உள்ள இரு அணி விடுதிகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

    • பெங்களூரு அணி கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டது.
    • முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று கம்பீரமாக காட்சியளித்தது ராஜஸ்தான் அணி.

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.

    இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.

    ஒருபக்கம் முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்று கம்பீரமாக காட்சியளித்த அந்த ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் வரிசையாக 4-ல் தோற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தையே பிடித்தது.

    மறுபக்கம் இதுவரை கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி தனது முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியின் கதை முடிந்தது என்று எல்லோரும் நினைத்த போது, அந்த அணி கடைசி 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டது. அதுவும் முந்தைய திரில்லிங்கான ஆட்டத்தில் 27 ரன் வித்தியாசத்தில் சென்னையை வெளியேற்றி சிலிர்க்க வைத்தது.

    பெங்களூரு அணியின் இந்த எழுச்சியை முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.

    "இந்த ஐபிஎல் தொடரில் தோல்வியிலிருந்து மீண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பெங்களூரு அணி நம்பியதே அற்புதமான விஷயம். தொடர் தோல்வியினால் அணியின் வீரர்கள் நம்பிக்கையை இழந்திருக்கலாம். ஆனால் அணியில் உள்ள மூத்த வீரர்களான விராட் கோலி, டு பிளசிஸ் ஆகியோர் மற்ற அணி வீரர்களை ஊக்கப்படுத்தி சிறப்பாக அணியை வழிநடத்தியுள்ளனர். அதுவும் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்" என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும், "தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் பெங்களூரு அணியை வெல்ல முடியும். இல்லையென்றால் குவாலிபையர் 1-ல் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி எளிதாக வென்றது போல ராஜஸ்தான் அணியை பெங்களூரு எளிதாக வென்று விடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக சுனில் கவாஸ்கர் கிண்டலாக கமெண்ட் அடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.
    • ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவது 4-வது முறையாகும்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியின் பிளே அப் சுற்று நேற்று தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ந் தேதி நடைபெறும். குவா லிபையர்-2 ஆட்டத்தில் (இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று) விளையாடும். ஐதராபாத்துடன் இந்த போட்டியில் மோத போகும் அணி எது என்பது இன்று இரவு தெரியும்.

    அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்-டூப்ளசி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 'குவாலிபையர்-2' ஆட்டத்தில் ஐதராபாத்துடன் மோதும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.

    ராஜஸ்தான் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவது 4-வது முறையாகும். இதில் 2013-ல் ஐதராபாத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2015-ல் பெங்களூரிடம் 71 ரன் வித்தியாசத்திலும், 2018-ல் கொல்கத்தாவிடம் 25 ரன்னிலும் தோற்றது.

    பெங்களூரு அணி 5-வது தடவையாக எலிமினேட்டரில் ஆடுகிறது. 2015-ல் ராஜஸ்தானையும், 2022-ல் லக்னோவையும் (14 ரன்) தோற்கடித்தது.

    2020-ல் ஐதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2021-ல் கொல்கத்தாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.

    ×