search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை தம்பதி"

    • ஆர்வமுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கணவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் சென்னையை சேர்ந்த தன்னார்வலர்களான பிரதாப்-சங்கவி தம்பதியினர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது 3 வயது குழந்தையை விட்டு விட்டு ஆர்வமுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக பிரதாப் கூறியதாவது:-

    எங்கள் குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள் ஏற்கனவே வயநாடு பகுதிக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சில வீடியோக்களை எங்களுக்கு அனுப்பினார்கள். அதில் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் வீடியோக்களும் இருந்தன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு தவித்த குழந்தைகளின் வீடியோக்களை பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது.

    அதை உணர்ந்துதான் நாங்கள் மீட்பு பணிக்கு வந்தோம். நாங்கள் ஏற்கெனவே வெள்ளத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மீட்பு பணிக்காக ரெயிலில் வந்தோம். இங்கு மலையில் இருப்பவர்களுக்கு தான் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டோம். எனவே நாங்கள் மலைப்பகுதிகளுக்கு சென்றோம்.

    எந்த இடத்தில் நிலச்சரிவு ஆரம்பித்ததோ அந்த இடத்தில் இருந்துதான் மீட்பு பணியை தொடங்கினோம். இன்னும் எவ்வளவு நாள் இருப்போம் என்பது தெரியாது. ஆனால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்து விட்டுதான் செல்வோம். திருமணத்துக்கு முன்பு எனது மனைவிதான் தன்னார்வலராக இருந்தார். திருமணத்துக்கு பிறகு நானும் அவருடன் சேர்ந்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதாப்பின் மனைவி சங்கவி கூறியதாவது:-

    எங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அவளுக்கு 3 வயது ஆகிறது. குழந்தைகளின் வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி வைத்தபோது மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதற்காக உடனே கிளம்பி வந்தோம். 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது முதல் நான் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

    தன்னார்வ தொண்டு பணியில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பது எனது கணவருக்கு தெரியும். எனவே அவர் இதுவரை என்னை தடுத்தது கிடையாது. மேலும் அவரும் என்னுடன் மீட்பு பணிக்கு வர சம்மதித்தார். இதில் எனக்கு அவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புகாரின் பேரில் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சென்னை தம்பதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து புகார் அளித்து வருவதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    கோவை:

    கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். டிராவல்ஸ் உரிமையாளர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை சென்னை திருவொற்றியூரை சேர்ந்த லட்சுமிபதி(62) மற்றும் அவரது மனைவி நிர்மலா(52) ஆகியோர் சந்தித்து, நிர்மலா சாய்பாபாவின் மறுஅவதாரம் எனவும், தாங்கள் கூறும் நிறுவனம் மற்றும் தங்களிடம் பணத்தை முதலீடு செய்தால் 3 மடங்கு செல்வம் பெருகும் என தெரிவித்தனர்.

    இதனை நம்பிய சந்திரசேகர், லட்சுமிபதி பங்குதாரராக உள்ள நிறுவனம், மற்றும் அவர்களது உறவினர்களிடம் கோவை சிங்காநல்லூர் வங்கி கிளையில் இருந்து பல தவணைகளாக ரூ.1.45 கோடி பணத்தை பெற்று கொடுத்ததாக கூறப்படுகிறது.

    3 மாதத்தில் லாபம் கிடைக்கும் என கூறிய அவர்கள் முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை லாபம் என கூறி கொடுத்ததுடன், அதிலிருந்து ரூ.3 லட்சத்தை பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென கேட்டு பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே சந்திரசேகருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் அவர்கள் இது போல் பணத்தை பலரிடம் பெற்று மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர் கோவை மாநகர குற்றப்பிரவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சென்னை தம்பதிகளான லட்சுமிபதி மற்றும் நிர்மலா ஆகியோர் பாபா பேரை சொல்லி ஏமாற்றியதாக அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது பெற்றோரிடம் ரூ.3 லட்சமும், திருப்பூரை சேர்ந்த சத்திய நாராயணனிடம் ரூ.4 லட்சம், திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளத்தை சேர்ந்த தர்மலிங்கத்திடம் ரூ.2 லட்சம், கோவை ஆர்.எஸ்.புரம் முத்து நாகரத்தினம் என்பவரிடம் ரூ.1.30 லட்சம், கோவை வெள்ளலூரை சேரந்த சூர்யா என்பவரிடம் ரூ.4.15 லட்சம் வாங்கி மோசடி செய்ததாகவும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல இந்த சென்னை தம்பதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து புகார் அளித்து வருவதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×