search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரகாளியம்மன் கோவில்"

    • பூசாரி வேல்முருகன் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலில் இருந்து வீட்டிற்கு சென்று உள்ளார்.
    • கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு சாமி நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தினந்தோறும் பூஜை நடப்பது வழக்கம்.

    நேற்று கோவில் பூசாரி வேல்முருகன் பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு சென்று உள்ளார். இன்று காலை கோவில் வாசல் உள்ள கதவை திறந்து கோவிலை பார்த்தபோது கோவிலில் கதவுகள் உடைக்கப்பட்டு சாமி நகைகள், வெள்ளி பொருட்கள் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் மேலும் சங்க நிர்வாகிகள், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து பார்வை யிட்டு மர்ம ஆசாமியை தேடி வருகி ன்றனர்.

    ×