என் மலர்
நீங்கள் தேடியது "காதலி"
- கள்ளக்காதலி வீட்டில் பூக்கடைக்காரர் தூக்கில் தொங்கினார்.
- சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே முள்ளிசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி வேல் (வயது 50), பூக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமி (48). சக்திவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி முத்துலட்சுமி அதுபற்றி விசாரிக்கும்போது, கீழே விழுந்து விட்டதாக கூறி உள்ளார்.
ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக மனைவி கூறியபோது, அதை மறுத்து விட்டு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் லட்சுமி வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரில் குழந்தைகளை அடைத்து வைத்து விட்டு விஷம் குடித்தனர்
- ஆரல்வாய்மொழி போலீசார் 2 பேர் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் புகழ்பெற்ற தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் கார் மற்றும் வாகனங்களில் குடும்பத்தினருடன் வந்தும் பலர் பிரார்த்தனை செய்து செல்வார்கள்.
எனவே தேவாலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்றும் வழக்கம் போல தேவாலயத்திற்கு ஏராள மானோர் வந்திருந்தனர். இதனால் கார்களும் அங்கு அதிகமாக நின்றன.
இதில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றது. இருப்பினும் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தவழியே சென்றவர்கள், கார் அங்கேயே நிற்பதை பார்த்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், காருக்குள் பார்த்தபோது, 2 குழந்தைகள் மட்டும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. வேறு யாரும் இருக்கிறார்களா? என காரை சுற்றி வந்து பார்த்த போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் காருக்கு வெளியே பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த 2 பேர் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பிணமாக கிடந்த ஆணின் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்தபோது, அதில் அவரது டிரைவிங் லைசென்சு இருந்தது. அதன் மூலம் அவரது பெயர் ஆேராக்கிய சூசைநாதன் (வயது 35) என்பதும் கடிய பட்டணத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து, அதில் இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்த போது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் மாயமான தகவல் கிடைத்தது. எனவே பிணமாக கிடந்த பெண் அவரது கள்ளக்காதலி என தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் கடியபட்டணத்தைச் சேர்ந்த சகாய சாமினி (30) என்பது உறுதியானது. 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேர் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து விட்டு, காரில் இருந்த 2 குழந்தைகளையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர்கள் சகாய சாமினியின் மகன்கள் என தெரியவந்தது.
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
ஆேராக்கிய சூசைநாதன், சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி உள்ளார். மேலும் அவரே கார் டிரைவராகவும் செயல்பட்டுள்ளார். அவருக்கு வின்சா என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் தான், ஆேராக்கிய சூசைநாதனுக்கு அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி சகாய சாமினியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காத லாக மாறியுள்ளது. மீன் பிடி தொழிலாளியான ராஜேஷ் கடலுக்குச் சென்றதும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதுபற்றி தெரிய வந்ததும் இரு வீட்டா ரும் கண்டித்து உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் சகாய சாமினி தனது 2 மகன்களுடன் மாயமாகி விட்டார். இது தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சகாய சாமினி மற்றும் அவரது மகன்களை தேடி வந்தனர்.
இந்த சூழலில் தான் கள்ளக்காதல் ஜோடியினர், ஆரல்வாய்மொழி பகுதியில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் தென்னை மரத்திற்கு வைக்கும் குருணை மருந்தை குடித்து தற்கொலை செய்து உள்ளனர்.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
- 45 பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கன்னியாகுமரி:
குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்த லத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தையும் திருடி சென்றனர்.
இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் தனிப்படை போலீசார் கொள்ளையரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ஆலயத்தின் வடக்கு ஜன்னல் வழியாக பர்தா அணிந்த ஒரு பெண் சர்ச்சுக்குள் புகும் காட்சி பதிவாகியிருந்தது.
இந்தநிலையில் குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் நேற்று குளச்சல் வெட்டுமடை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கருங்கல் அருகே கப்பியறை பகுதியை சேர்ந்த சாபுமோன் (வயது 37) என்பதும், மோட்டார் சைக்கிளில் வந்த பெண் நூர்ஜகான் (43) என்பதும் தெரியவந்தது. தற்போது சாபுமோன் நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் சாபுமோன் வள்ளியூரில் 8 வருடங்களாக கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இந்த பண்ணையில் நூர்ஜகான் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பண்ணையருகே பிள்ளைகளுடன் தனி வீட்டில் வசித்தார். சாபுமோனுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இவர் மனைவியுடன் பண்ணையருகே வேறு தனி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நூர்ஜகான் - சாபுமோன் இடையே கடந்த சில வருடங்களாக தகாத உறவு உள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், சாபுமோன் கடந்த பிப்ரவரி மாதம் குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலம் மற்றும் பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதும் தெரியவந்தது.
இதுபோல் இரணியல் போலீஸ் சரகத்தில் 7 திருட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 16 சர்ச், வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து குளச்சல் போலீசார் சாபுமோன் மற்றும் நூர்ஜகான் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் சாபுமோன் கள்ளக்காதலியுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
- போலீசார் விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா என்பது தெரியவந்தது.
- விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பலவித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இதை பார்க்கும் பலரும் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன.
அதில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் சுவாரஸ்யமாக வைரல் ஆகின்றன. இதை பார்த்து ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. உலகில் காதலுக்கு மட்டும் அசாத்தியமான விஷயங்களை, கிறுக்குத்தனமான விஷயங்களை செய்ய வைக்கும் ஆற்றல் உண்டு. ஏற்கனவே காதலுக்கு கண் இல்லை என்ற பழமொழி உண்டு.
ஆனால், சமீபகாலமாக காதலுக்கு இடம், பொருள் என்று எதுவுமே இல்லை என்பது போல பல காதலர்கள் செயல்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக இளம் காதலர்கள் படங்களில் வருவது போல வித்தியாசமான சாகசங்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு காதல் ஜோடி ஸ்கூட்டரில் சென்றபடியே ரொமான்சில் ஈடுபட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது. டாம் குரூஸ்-கேமரூன் டயஸ் நடித்த 'நைட் அண்ட் டே' ஹாலிவுட் திரைப்படத்தில் காதலர்கள் ஸ்கூட்டரில் சென்றவாறே ரொமான்சில் ஈடுபடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதுபோன்று இந்த காதல் ஜோடி லக்னோவின் நெரிசலான பகுதியில் அரங்கேற்றியுள்ளனர். இந்த லக்னோவின் பரபரப்பான சாலையில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டே செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இரு சக்கர வாகனத்தில் ஓட்டுபவர் முன்னால் அமர்ந்து இருக்க, பின்னால் உடன் செல்பவர் அமர்ந்திருப்பார். காதலர்கள் கூட வழக்கமாக அப்படித்தான் செல்வார்கள்.
ஆனால், லக்னோவின் அந்த பரபரப்பான சாலையில் ஸ்கூட்டி ஒன்றில் காதலன் ஓட்டிச்செல்ல காதலியோ அவருக்கு முன்னால் அமர்ந்து சாலையின் பின்புறம் நோக்கி அமர்ந்து காதலனை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்கிறார். அதுவும் அந்த காதலி வாகனத்தை ஓட்டிச்செல்லும் தனது காதலனை கொஞ்சிக்கொண்டே செல்கிறார். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடனே வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.
காதலர்களின் இந்த ரொமான்ஸ் காட்சியை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 14 வினாடிகள் கொண்ட வீடியோவில், பெண் இரு சக்கர வாகனத்தின் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வாலிபரை கட்டிப்பிடிப்பதும், கழுத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தது. இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாரிக் என்பவர் உத்தரபிரதேச போலீசாருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலியுடன் நடுரோட்டில் ரொமான்சில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த இளைஞர் விக்கி சர்மா (23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவசர அவசரமாக வாகனம் ஓட்டியதற்காகவும், பொது இடத்தில் ஆபாசமாக பேசியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மைனர் என்பதால் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருப்பதோடு திருமண விழாக்களில் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி லக்னோ கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் விக்கி சர்மா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆபாச செயல்கள் (பிரிவு 294) மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டுதல் (பிரிவு 279) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அந்த பெண் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பொதுமக்கள் தங்கள் உயிரையும் மற்றவர்களையும் பணயம் வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
- ஆத்திரம் அடைந்த இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாலிபரை கழுத்தில் குத்தினார்.
கோவை:
கோவை அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையத்தை சேர்ந்தவர் 25 வயது தொழிலாளி.
இவரும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் வாலிபர் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதுகுறித்து வாலிபர் தனது காதலியிடமும் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதித்தார்.
மேலும் தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்குமாறு, வாலிபரிடம் இளம்பெண் தெரிவித்தார்.
இதையடுத்து வாலிபர், பெண்ணின் வீட்டிற்கு சென்று, நானும், உங்களது மகளும் விரும்புகிறோம். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறோம். எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என கேட்டுள்ளார்.
ஆனால் இளம்பெண்ணின் வீட்டார் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் தனது முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்து வந்தார். மேலும் வாலிபர், இளம்பெண்ணை அடிக்கடி சந்தித்து, அவரிடம் பணமும் வாங்கி வந்தார்.
நேற்றிரவு வாலிபரும், இளம்பெண்ணும் அன்னூர் பகுதியில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது வாலிபர் ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு வாக்குவாதமாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாலிபரை கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். மேலும் வாலிபர், இளம்பெண்ணையும் தாக்கினார்.
இவர்களது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை.
- எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ), மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக மூழ்கி இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.
பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச்சென்ற நித்யா அதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை அவர் வேலை பார்க்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் வீடு உன தேடி வந்தார். ஆனால் நித்யா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து புஷ்பராஜூக்கு நள்ளிரவில் அழைப்பு வந்தது. உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார். இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,
மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அந்த இன்ஸ்டாகிராம் நண்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.
- இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் செய்து வந்தனர்.
- பெற்றோரிடம் தான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடலை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது23). இவர் சென்னையில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் வசித்து வரும் சரவணன் மகன் வினோத் குமார்(27). இவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இருவரும் கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக காதல் செய்து வந்த நிலையில் வினோத்குமார், பாக்கிய லட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை தகாத உறவு வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாக்கியலட்சுமி கர்ப்பிணியானார். தற்போது 5மாத கர்ப்பிணியான பாக்கியலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி வினோத்குமாரிடம் வற்புறுத்தி உள்ளார். திரு மணம் செய்து கொள்வதை மறுத்த வினோத்குமார் கருவை கலைத்து விடு மாறு கூறியுள்ளார். பாக்கிய லட்சுமி அதனை மறுக்கவே தனது பெற்றோரிடம் தான் 5 மாத கர்ப்பமாக இருப்ப தாக கூறியுள்ளார். மேலும் காதலன் வினோத் குமார்தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோத்குமார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் வினோத்குமார், பாக்கியலட்சுமியை ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வினோத்குமாரிடம் பாக்கியலட்சுமியை திரு மணம் செய்து கொள்ளு மாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை ஏற்ற வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் உள்பட இருவீட்டார் சம்ம தத்துடன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் இருவீட்டார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
- மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தோப்புக்கு டெனிஷாவை வரவழைத்து உள்ளார்
- மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் டெனிஷாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி உள்ளார்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த டெனிஷா (வயது 22).
இவர் மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். அப்போது அங்கு படித்த மார்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா (22) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக டெனிஷா, வெர்ஜின் ஜோஸ்வாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை தருவதாக மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தோப்புக்கு டெனிஷாவை வரவழைத்து உள்ளார். அவர் அங்கு வந்தததும் வெர்ஜின் ஜோஸ்வா மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் டெனிஷாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று உள்ளார்.
டெனிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மார்த்தாண்டம் போலீசார், வெர்ஜின் ஜோஸ்வாவை தேடி வந்த நிலையில், அவர் விரிகோடு பகுதியில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தலை துண்டாகி தண்டவாளத்தில் கிடந்த வெர்ஜின் ஜோஸ்வாவின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. டெனிஷாவும், வெர்ஜின் ஜோஸ்வாவும் மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3 ஆண்டுகள் சேர்ந்து படித்துள்ளனர். அப்போது இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். அப்போதே பல இடங்களுக்கு சுற்றி திரிந்து இருவரும் பல்வேறு கோணங்களில் போட்டோக்களை எடுத்து வைத்துக்கொண்டனர். 3 ஆண்டுகள் படிப்பு முடிந்த பின்பு டெனிஷா பி.எட். படிக்க சென்றுள்ளார்.
வெர்ஜின் ஜோஸ்வா ஒரு சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு, ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில் டெனிஷா வுக்கும், வெர்ஜின் ஜோஸ்வா வுக்கும் இடையே காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது வெர்ஜின் ஜோஸ்வாவின் நடவடிக்கை களில் மாற்றம் ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.
இதனால் அவருடன் பேசுவதை டெனிஷா தவிர்த்து வந்துள்ளார். இதில் விரக்தி அடைந்த வெர்ஜின் ஜோஸ்வா, படிக்கும் காலங் களில் எடுத்த போட்டோக்கள் மற்றும் செல்பி எடுத்த போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அவரை தீவிரமாக காதலிப்பதாக ஓவியங்களை வரைந்து சமூக வலைதளங் களில் பரவ விட்டார். தனக்கு இறுதி ஊர்வலம் நடப்பதாக சவப்பெட்டிகளை வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். தான் அவரை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், காதலி தன்னை விட்டு வெகுதூரம் பிரிந்து செல்வதாகவும் அவரது பதிவேற்றங்கள் மற்றும் எழுத்துக்கள் வெளிப்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை பார்த்த டெனிஷா அதிர்ச்சி அடைந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து அவர், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களை அழித்து விடும்படியும், மேலும் அவரிடம் இருந்த போட்டோக்களை திருப்பி தந்து விடும்படியும் கெஞ்சி கேட்டுள்ளார். அதற்கு வெர்ஜின் ஜோஸ்வா உன்னுடைய முடிவு எனக்கு தெரிய வேண்டும், நீ என் வீட்டு அருகாமையில் வந்து போட்டோக்களை பெற்றுக்கொள் என கூறி அழைத்துள்ளார். வேறு வழி இன்றி டெனிஷா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வெர்ஜின் ஜோஸ்வாவை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது ஆள் ஆரவாரம் அற்ற பகுதிக்கு சென்ற டெனிஷா, ஏற்கனவே தீர்க்கமான முடிவில் இருந்த வெர்ஜின் ஜோஸ்வா வாகனத்தில் பெரிய வெட்டு கத்தியை மறைத்து வைத்து காத்திருந்தார். இருவரும் சிறிது நேரம் சிரித்து சிரித்து பேசியதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் திடீரென மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தி எடுத்து அவரை வெட்டி சாய்த்தார். அலறியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் நின்ற சிறுவன் கத்தி கூச்சலிட்டு உள்ளான்.
அப்போது மாணவி ஆரவாரம் இன்றி கிடப்பதை பார்த்ததும் வெர்ஜின் ஜோஸ்வா இறந்து விட்டார் என நினைத்து தான் கொண்டு வந்த வெட்டுக்கத்தி மற்றும் 2 மொபைல் போன்களையும் தூக்கி வீசி விட்டு தான் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அருகில் உள்ள முண்டவிளை ரெயில்வே கிராசின் அருகாமையில் எதிரே வந்த ெரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகையை ஆசை.. ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இருவரும் சில வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீரென நடிகை விவாகரத்து கேட்டாராம். நடிகரும் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டாராம். நடிகை மீது தவறு இருப்பதால் தான் நடிகர் எதுவும் சொல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டார் என்று பலரும் பேசி வந்தார்களாம்.
ஆனால், நடிகர், நடிகை இருக்கும்போதே வேறு ஒரு ஹீரோயினுடன் தொடர்பில் இருந்துள்ளாராம். இது தெரிந்து தான் நடிகை, நடிகரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். நடிகை சென்றதும் இதுதான் வாய்ப்பு என்று நினைத்த நடிகர் காதலியின் வீட்டில் தஞ்சம் புகுந்துவிட்டாராம்.
- மகள் காணாமல் போனதால் பதறிப்போன பெற்றோர்கள் மச்சிலி பட்டணம் போலீசில் புகார் அளித்தனர்.
- பனிந்திரா மற்றும் இளம்பெண் இருவரும் அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
இவர்களது காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 29-ந்தேதி பனிந்திரா தனது காதலியை ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்தார். அதன்படி இளம்பெண் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார்.
மகள் காணாமல் போனதால் பதறிப்போன பெற்றோர்கள் மச்சிலி பட்டணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பண்ணை தேடி வந்தனர். பனிந்திரா தனது காதலியை அழைத்துக்கொண்டு கோபால பட்டினத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் பனிந்திரா மற்றும் இளம்பெண் இருவரும் அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர். அந்த கடற்கரையில் உயரமான இடத்தில் அமர்ந்திருந்தனர். அந்த இடத்திற்கு கீழே பெரிய அளவிலான பாறைகள் உள்ளன. அதில் ராட்சத அலைகள் வந்து சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.
அதனை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது இளம்பெண் திடீரென தவறி கீழே விழுந்தார்.
உயரமான இடத்தில் இருந்து விழுந்த அவர் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். அலைகள் இருந்ததால் அவர் எங்கே இருக்கிறார் என்பது பனிந்திராவுக்கு தெரியவில்லை. மேலும் அப்போது இருட்ட தொடங்கியது.
இதனால் பயந்து போன பனிந்திரா தனது காதலியை காப்பாற்ற எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தார். இரவு நேரமானதால் கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
பாறை இடுக்குகளில் சிக்கி விடிய விடிய தவித்தார். அதிகாலை நேரத்தில் கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் புறப்பட்டு வந்தனர். அவர்கள் இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டனர். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து மீனவர்கள் அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பெற்றோரை போலீசார் எச்சரித்தனர். கடலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் தவறி விழுந்து விட்டேன்.
இந்த சம்பவத்திற்கும் காதலன் பனிந்திராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இளம்பெண் உறுதியாக கூறினார்.
காதலியை தவிக்க விட்டு காப்பாற்றாமல் தப்பி ஓடிய காதலன் பனிந்திராவை செல்போனில் தொடர்பு கொள்ள போலீசார் முயன்றனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த 13-3-2019 அன்று மதியம் 12 மணி அளவில் லட்சுமியின் கருவை கலைக்குமாறு கவுதம் நிர்ப்பந்தம் செய்துள்ளார்
- குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2500 அபராதமும விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பக்கம் உள்ள ஆத்துப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கவுதம் (வயது 27). இவர், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (வயது 21) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. பின்னர் இரண்டு பேரும் திருப்பூர் அருகே உள்ள பொங்குபாளையம் கிராமம், காளம்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்போது லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-3-2019 அன்று மதியம் 12 மணி அளவில் லட்சுமியின் கருவை கலைக்குமாறு கவுதம் நிர்ப்பந்தம் செய்துள்ளார். இதனை லட்சுமி மறுத்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் சண்டை வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த கவுதம், மண்எண்ணையை எடுத்து லட்சுமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.பின்னர் அவர் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கவுதமை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. திருப்பூர் மகிளா அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.பாலு வழக்கை விசாரணை செய்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2500 அபராதமும விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் மேலும் 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும், மேலும் மற்ெறாரு பிரிவில், ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
- பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.
- கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி, பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பொன்னேரி சின்ன கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி பிரியா (24) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து பழகி வந்தனர்.
இந்நிலையில் பிரியாவுக்கு சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ரவுடியான ஜில்லா என்கிற ஆனந்தன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இத னால் பிரியா ஏற்கனவே பழகி வந்த கோபால கிருஷ்ணனுடன் ஏற்பட்ட தொடர்பை துண்டித்தார். மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு பொன்னேரி அடுத்த புளியந்தோப்பு பகுதியில் கோபால கிருஷ்ணனை வழி மறித்த மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கோபால கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கள்ளக்காதலியை அடையும் போட்டியில் கோபாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே புழல் அருகே காரில் தப்பி செல்ல முயன்ற பிரியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரத்த கறைபடிந்த 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிரியாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கோபால கிருஷ்ணனுடன் உள்ள தொடர்பை பிரியா தவிர்த்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது. கோபால கிருஷ்ணன், பிரியாவின் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதையடுத்து கோபால கிருஷ்ணனை தீர்த்துகட்ட முடிவு செய்த பிரியா இதுபற்றி தனது மற்றொரு கள்ளக்காதலனான ரவுடி ஆனந்தனிடம் கூறினார். அவரும் பிரியாவை அடையும் ஆசையில் கோபால கிருஷ்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அவர்களது திட்டப்படி பிரியா, கள்ளக்காதலன் ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் 3 பேர் அரிவாள் கத்தியுடன் நேற்று இரவு கோபால கிருஷ்ணனை தேடி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். ஆனால் கோபால கிருஷ்ணன் நண்பர்களை பார்க்க புளியந்தோப்பு பகுதிக்கு சென்றால் அங்கு சென்று அவரை தீர்த்து கட்டிவிட்டனர். கோபால கிருஷ்ணனை அரிவாளல் வெட்டி கொன்ற போது அருகே நின்ற கள்ளக்காதலி பிரியா அதனை ரசித்து பார்த்து உள்ளார். பின்னர் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் கொலையாளிகள் அனைவரும் பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.
இதைத்தொடர்ந்து தனியாக நின்ற பிரியா அவ்வழியே வந்த காரில் சவாரி கேட்டு புழல் பகுதிக்கு தப்பி சென்ற போது போலீசாரின் சோதனையில் சிக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கைதான பிரியா கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஆட்டோ டிரைவரான லட்சுமணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியாவின் கள்ளத் தொடர்புகள் அதிகமானதால் லட்சுமணன் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டு அவ்வப்போது வந்து தனது குழந்தைகளை மட்டும் பார்த்து சென்று உள்ளார்.
கணவர் வீட்டுக்கு வராததால் மேலும் சந்தோஷம் அடைந்த பிரியா பலருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. கோபால கிருஷ்ணன் தன்னுடன் தொடர்பை தொடர கூறியதால் ஏற்பட்ட மோதலில் அவரை மற்றொரு கள்ளக்காதலனை ஏவியே பிரியா தீர்த்து கட்டிவிட்டார்.
இந்த கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.