search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்திக்கடவு-அவினாசி"

    • அத்திக்கடவு-அவிநாசி திட்டம் பவானிஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
    • தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ஈரோடு மாவட்டம் பவானிஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

    இங்கு ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரைநீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் (மொத்தம் 1045) நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை நீரேற்று முறையில் செயல்படுத்திட தமிழக அரசின் மூலம் ரூ.1652.00 கோடிக்குநிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், ரூ.1756.88 கோடிக்குதிருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணைமற்றும் ஆறு நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன் பாளையம், திருவாச்சி ,போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.

    குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடிவடைந்துள்ளது (மொத்தநீளம் 267.5 கி.மீ) மற்றும் குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

    தற்சமயம் சுமார் 797.40கி.மீ. அளவு குழாய் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்மாற்றிகள், பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர் உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

    மின்கம்பங்கள் அமைக்கும் பணிமற்றும் பூமிக்கடியில் மின்சாரதொடரமைப்புகள் பதிக்கும் பணி100 சதவீதம் முடிவுற்றுள்ளது (மொத்தநீளம் 63.15 கி.மீ) பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது.

    இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1624.7 3கோடிஅளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் சோதனைஓட்டம் தொடங்கப்பட்டுத ற்போதுவரை ஆறு நீரேற்றுநிலையங்கள் மற்றும்பிரதானக் குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக் குழாய்கள் மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் சோதனைஓட்டம் நடைபெற்றுவருகிறது. 

    • பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீரேற்று நிலையங்களில் ராட்சத மின் மோட்டார்களை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
    • கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராய ன்பாளையத்தில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீரை ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. அளவிற்கு குழாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நீரேற்று திட்டம் தான் அத்திக்கடவு- அவிநாசி திட்டம்.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 1756 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் 106 கிமீ தொலைவிற்கு குழாய் அமைத்து 3 மாவட்டங்களில் உள்ள 1045 குளம் குட்டைகளை நிரப்பும் வகையில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த திட்டத்திற்காக 6 இடங்களில் நீரேற்று நிலையங்களும. அமைக்கப்பட்டன. பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீரேற்று நிலையங்களில் ராட்சத மின் மோட்டார்களை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கி அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • தற்போது 600 குளங்களுக்கு நீர் செல்லும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.

    இக்கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிள் குறித்து தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். அந்த வகையிலே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டுள்ளார்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய்பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களுக்கு நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அதற்கு மொத்தமாக 958 கி.மீ நீளம் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது 600 குளங்களுக்கு நீர் செல்லும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 445 குளங்களுக்கு நீர் செல்ல குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவாக பணிகள் முடிக்கப்படும்.

    இந்த திட்டத்தில் மெயின் குழாயின் நீளம் 106.8 கி.மீ. அதன் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு விட்டது. இதில் 6 நீரூந்து நிலையங்கள் வருகிறது.

    பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் பவானி, நல்லக்கவுண்டன்பா ளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் என ஆறு நீர்உந்து நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சுமார் 267.1 கி.மீ. அளவு ஆளு குழாய் (மொத்த நீளம் 267.5 கி.மீ) மற்றும் 780.8 கி.மீ. அளவு குழாய் (மொத்த நீளம் 797.8 கி.மீ) பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    மின்மாற்றிகள், பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

    மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 61.35 கி.மீ. அளவு (மொத்த நீளம் 63.15 கி.மீ) பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    நிலம் பயன்பாட்டு உரிமை பெறும்பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது. சுமார் 1036 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் - 1045 எண்கள்). இத்திட்டமானது கொரோனா பெருந்தொற்றால் 2020-2021-ம் ஆண்டுகளில் பணிகளில் தாமதம் ஏற்பட்டு தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1603.66 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, செயற்பொறியாளர் மன்மதன் (நீர்வளத்துறை அத்திக்கடவு-அவிநாசி திட்டம்), உதவி செயற்பொறியாளர்கள் சங்கர் (பவானி), ஜெ.வெங்டாஜலம் (பவானி), சண்முகராஜா (பெருந்துறை), விஜயகுமார் (நம்பியூர்) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×