என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீஞ்சூர் ஒன்றிய குழு கூட்டம்"
- கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை பணிகள் ஊராட்சிகளுக்கு செய்ய முடியாமல் உள்ளதாக கூறி பெரும்பாலான கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- அடுத்த மாதம் கூட்டத்தின் போது மீஞ்சூர் ஒன்றியத்திற்கு சி.எஸ். ஆர் நிதி வழங்கப்படாவிட்டால் கூட்டத்தை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தமிழ்செல்வி பூமிநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை பணிகள் ஊராட்சிகளுக்கு செய்ய முடியாமல் உள்ளதாக கூறி பெரும்பாலான கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த மாதம் கூட்டத்தின் போது மீஞ்சூர் ஒன்றியத்திற்கு சி.எஸ். ஆர் நிதி வழங்கப்படாவிட்டால் கூட்டத்தை புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதில் கவுன்சிலர்கள் சுமித்ராகுமார், பானு பிரசாத், கிருஷ்ணபிரியா வினோத், வெற்றி, சங்கீதா அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது.
- ஒன்றிய குழு தலைவர் தலையிட்டு புதிய ஊழியர் நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அம்மா சிமெண்ட் கிடங்கு கண்காணிப்பு ஊழியராக நியமனம் செய்யப்பட்ட வரை நீக்கி விட்டு வேறு ஒருவரை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர் சுமித்ரா குமார் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினார். இதனால் தி.மு.க. உறுப்பினர்களுக்கும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் தலையிட்டு புதிய ஊழியர் நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி கவுன்சிலர்கள் பானு பிரசாத், கிருஷ்ண பிரியா வினோத், வெற்றி, தமின்சா, சகாதேவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்