என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாவூத் இப்ராஹிம்"

    • தாவூத் இப்ராகிமுக்கு 2-வது மனைவி இருக்கிறார்.
    • தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார்.

    மும்பை :

    மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். அவர் நிழல் உலகில் இருந்தபடி உலகம் முழுவதும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு கீழ் செயல்படும் கும்பல் 'டி-கேங்' என அழைக்கப்படுகிறது.

    தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் ஹவாலா பணம் மூலம் பயங்கரவாதம், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தாவூத் இப்ராஹிமின் தங்கை ஹசினா பார்கரின் மகன் அலிஷா பார்கரிடம் என்.ஐ.ஏ. வாக்குமூலம் பெற்று உள்ளது. அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் கடந்த ஆண்டு நவம்பரில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று உள்ளது.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தாவூத் இப்ராஹிமின் மனைவி பெயர் மைசாபின். அவருக்கு மாருக், மெக்ரீன், மாசியா என்ற 3 பெண் பிள்ளைகள், மொகின் நவாஸ் என்ற மகன் உள்ளான். மாருக் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தின் மகன் ஜூனைத்தை திருமணம் செய்து உள்ளார். மெக்ரீனுக்கும், மகன் மொகின் நவாசுக்கும் திருமணமாகிவிட்டது. மாசியாவுக்கு திருமணம் நடைபெறவில்லை.

    தாவூத் இப்ராகிமுக்கு 2-வது மனைவி இருக்கிறார். அவர் பாகிஸ்தானி பதான். தாவூத் இப்ராகிம் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக காட்டுகிறார். அது உண்மையில்லை. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் கராச்சி பகுதியில் அப்துல்லா காஜி பாபா தர்க்கா பகுதிக்கு பின்னால் உள்ள அந்த நாட்டின் ராணுவ இடத்தில் வசித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற ஷூட்டர்களை கொண்டு என வட இந்தியாவில் இயங்கி வருகிறது.
    • கடந்த 1998 இல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு முதன்முதலில் லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்தார்.

    பாபா சித்திக் 

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் என்சிபி முக்கியப் புள்ளியான பாபா சித்திக் நேற்று முன்தினம் [சனிக்கிழமை] சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வரும் இந்த கும்பல் சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக்கின் கதிதான் ஏற்படும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

    அடுத்த தாவூத் 

     மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு அடுத்தபடியாக லாரன்ஸ் பிஷ்னோய் தாதா கும்பல் எந்த சட்டத்துக்கும் பயப்படாமல் துணிச்சலாக இயங்கி வருவதையே பாபா சித்திக் கொலை காட்டுகிறது. நாட்டில் உயர்மட்டத்தில் நடக்கும் பல்வேறு குற்றச்செயல்களில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயர் அடிபடுவதை சாதரணமாக பார்க்கலாம். பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கொலைக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலே பொறுப்பு.

    நெட்வொர்க் 

    இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற ஷூட்டர்களை கொண்டு என வட இந்தியாவில் மிகபெரிய தாதா கும்பலாக லாரன்ஸ் பிஷ்னோய் இயங்கி வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பான [என்ஐஏ] தெவிர்த்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் உட்பட இந்த கும்பலில் உள்ள 700 பேரில் 300 பேர் பஞ்சாபை சேர்த்தவர்கள் என்றும் என்ஐஏ தற்போது உபா சட்டத்தின்கீழ் வெளியிடுயுள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

     

    லாரன்ஸ் 

    31 வயதான லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தட்டரன்வாலி [Dhattaranwali] கிராமத்தில் வசதி படைத்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார், இவரின் பிஸ்னாய் சமுதாயம் பஞ்சாப் , அரியானா, மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

    சண்டிகரில் கல்லூரி காலத்திலேயே மாணவர் அரசியலை மறைப்பாக வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடத்தொடங்குள்ளார் லாரன்ஸ். 2010 ஆம் ஆண்டு அவர் மீது முதல் வழக்கு பதிவாகியுள்ளது. அதுவும் ஓரூ கொலை முயற்சி வழக்கு. இவ்வாறு குற்றச்செயலுக்காக ஒரு குவளை சிறிய அளவில் தொடங்கி காலப்போக்கில் அதை விரிவுபடுத்தியுள்ளார். 

    ராக்கி  

    இதற்கு ராக்கி எனப்படும் ஜஸ்விந்தர் சிங் நெருங்கிய கூட்டாளியும் பஞ்சாப் பசில்காவை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியின் உதவியும் முக்கிய காரணம். இந்த ராக்கி கடந்த 2020 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை குறிவைத்து இயங்கும் லாரன்ஸ் பிஸ்னாய் கும்பல் மற்ற கும்பல்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வெளியுலகுக்கு தெரியத் தொடங்கியது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள நெட்வொர்க்களுடனும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்புள்ளதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு படை கூறுகிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் குழுவுக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக என்ஐஏ கூறுகிறது.

     

    சிறை 

    ஆள் கடத்தல், காண்டிராக்ட் கொலைகள் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் இவர்கள் சிறைகளில் இருந்தும்கூட நெட்வொர்க்கிங் மூலம் செயல்பட்டவரே இருக்கின்றனர் கடந்த 2015 இல் லாரன்ஸ் பிஷ்னோய் கைதுசெய்யப்பட்டு தற்போது குஜராத்தின் அகமதாபாத் சபர்மதி சிறையில் உள்ளார். இருந்தபோதும் அவரின் கும்பலின் செயல்பாடுகள் தடையில்லாமல் நடப்பதன்மூலம் அந்த கும்பல் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை யூகிக்க முடியும்.

    சல்மான் கான் பகை 

    கடந்த 1998 இல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு முதன்முதலில் லாரன்ஸ் பிஸ்னாய் கொலை மிரட்டல் விடுத்தார். அதன்மூலமே அவர் முதன்முதலில் பரவலாக அறியப்பட்டார். 1998 இல் சல்மான் கான் கரும்புலி வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கியதை அடுத்து இந்த கொலை மிரட்டல் வந்தது. இந்து மதத்தின் பசு புனித விளங்காக உள்ளதுபோல் லாரன்ஸின் பிஷ்னோய் சமூகத்தில் கரும்புலி மான் என்பது புனித விலங்காகும்.

     

    சல்மான் கான் அதை வேட்டையாடினர் என்பதனால் லாரன்ஸ் அவருடன் பகையை வளர்த்துக்கொண்டார். அதுமுதல் பல்வேறு சமயங்களில் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறிவைத்து வருகிறது.சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்நிலையில் தற்போது பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட பின்னர் சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    • போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
    • ஷாரிக் சதாவுக்கு, தாவூத் இப்ராகிம் கும்பலுடனும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடனும் தொடர்பு உள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதிக்குள் இந்து கோவில் இருப்பதாக கூறி இந்து அமைப்பு தொடர்ந்து வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்டருடன் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர்.

    அதிகாரிகளுக்குத் துணையாக வந்த போலீஸ் மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்க்க வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

    இந்த கலவரம் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பான 4,400 பக்க குற்றப்பத்திரிகையை உ.பி போலீஸ் சிறப்பு விசாரணைக் குழு நேற்று முன் தினம் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் 79 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.

    இந்த கலவரத்தை சம்பலைச் சேர்ந்த ஷாரிக் சாத்தா என்பவர் திட்டமிட்டு நடத்தியதாக குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது. தற்போது ஷாரிக் சாத்தா ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

    இதுகுறித்து சம்பல் போலீஸ் எஸ்.பி. கிருஷ்ண குமார் பிஸ்னோய் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "சம்பல் பகுதியில் கலவரம் நடைபெற்ற இடத்தில் இருந்து பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் பறி முதல் செய்யப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷாரிக் சதா என்பவர்தான் இந்த கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    டெல்லி - என்சிஆர் பகுதியில் மட்டும் இவரது கும்பல் 300-க்கும் மேற்பட்ட கார் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளது. சம்பலை சேர்ந்த ஷாரிக் சதாவுக்கு, தாவூத் இப்ராகிம் கும்பலுடனும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடனும் தொடர்பு உள்ளது.

    போலி பாஸ்போர்ட் மூலம் ஷாரிக் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பியோடியுள்ளார். அங்கிருந்தபடியே சம்பல் கலவரத்துக்கு அவர் சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஷாரிக் கும்பலை சேர்ந்தவர்கள்தான் சம்பல் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     

    சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியாவுர்ரகுமான் பார்க், எம்எல்ஏ இக்பால் மொகமூதின் மகன் சுஹைல் இக்பால் ஆகியோருடன் ஷாரிக்குக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, அவர்களுடைய பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

    ×