search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டை உடைத்து கொள்ளை"

    • 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு
    • 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகரில் உள்ள கே.பி.கே.நகரை சேர்ந்த அதிமுக பிரமுகரும் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க மாவட்ட துணை தலைவருமான ஆனந்தன் ஜெயா தம்பதியினருக்கு பூர்ணிமா என்ற மகளும் வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர்.

    மேலும் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் ஆனந்தன் தனது மனைவியுடன் சென்னைக்கு மீனவர் சங்க கூட்டத்திற்கு செல்வதற்கும் தனது பிள்ளைகள் சென்னையில் படித்து வருவதால் இருவரையும் பார்க்கவும் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்தும் அதில் இருந்த சுமார் 25 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதனையடுத்து நேற்று மதியம் தனது வீட்டிற்கு ஆனந்தன் குடும்பத்தினர் வந்தடார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்தது இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

    மேலும் கொள்ளை சம்பவம் குறித்து ஆனந்தன் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்னர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை சேகரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கோகுல், எஸ்.ஐ. சுந்தரேசன் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    ஆரணி டவுன் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 47). இவர் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பக்க கதவு இன்று உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜீவாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுந்த ரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற னர். அப்போது ஜீவா வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்து பீரோவையும் உடைத்துள்ளனர்.

    வீட்டில் நகை பணம் எவ்வளவு திருட்டு சென்றது என்ற விவரம் தெரியவில்லை .இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து பதிவு செய்தனர்.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×