search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகர்"

    • அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது.

    ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நன்னாள்.

    இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

    அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில்

    ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள்.

    உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து

    நினைவு கூறும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.

    குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது.

    அரக்கர்களின் செருக்கழித்து முருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும்.

    அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த

    இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகளை செய்வது பக்தர்களின் வழக்கம்.

    • ஓம் என்பது அ.உ.ம. என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.
    • அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    முருகன் தமிழ்க்கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலவன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன்,

    ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் அவர் அழைக்கப்படுகிறார்.

    புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.

    புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவண பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது.

    இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.

    கார்த்திகைப் பெண்கள் 6 பேர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர்.

    பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார்.

    ஆறுமுகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார்.

    கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் இவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    ஓம் என்னும் பிரணவப் பொருளை சிவப்பெருமானுக்கு மட்டுமின்றி உலகுக்கே முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ.உ.ம. என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ.உ.ம. என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ.உ.ம. மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

    முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப்

    புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.

    முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது.

    ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடி கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

    • திருப்பரங்குன்றம்- சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகள் தெய்வானையை மணந்த திருத்தலமிது.
    • பழமுதிர் சோலை- அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

    சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதி நூலை பாடியிருக்கின்றார்.

    அதன் மூலம் ஆறு திருத்தலங்கள், முருகனின் அறுபடை வீடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.

    அதன் விவரம் வருமாறு:

    1.திருப்பரங்குன்றம்- சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகள் தெய்வானையை மணந்த திருத்தலமிது.

    2. திருச்செந்தூர் -அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச்சூடிய திருத்தலமிது.

    3. பழனி- மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுத பாணியாக நின்ற திருத்தலமிது.

    4. சுவாமிமலை- தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.

    5. திருத்தணி-சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

    6.பழமுதிர் சோலை- அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

    • போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் “படைவீடு’ எனப்படும்.
    • இவற்றுள் முதல் பகுதியில் திருப்பரங்குன்றம் தலத்தின் மகிமை பற்றி கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது.

    போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும்.

    அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்ய சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும்.

    ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.

    வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தை சுட்டிக்காட்டி,

    அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார்.

    இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது.

    இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார்.

    அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார்.

    முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது.

    பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

    பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை.

    இதுகடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழி செய்தியாகும்.

    இது பிற்காலத்தில் எழுந்த நூல் என்று கருதுவாரும் உண்டு;

    எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் இது சங்கநூல் என்கிறார்கள்.

    முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.

    "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்று பொருள்படும்.

    "முருகாற்றுப்படை" எனும்போது, முக்தி பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை முக்தி பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும்.

    திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளை தனித்தனியாக கூறியுள்ளது.

    அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற அரிய ரகசியம் தொகுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அறுபடை வீடுகளும் மனிதன் யோக சாஸ்திரத்துடன் எப்படி ஒருங்கிணைந்துள்ளது என்பதை காட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

    இவற்றுள் முதல் பகுதியில் திருப்பரங்குன்றம் தலத்தின் மகிமை பற்றி கூறப்பட்டுள்ளது.

    இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் மூன்றாம் பகுதியில் பழனி, நான்காம் பகுதியில் சுவாமிமலை,

    ஐந்தாம் பகுதியில் திருத்தணி, ஆறாம் பகுதியில் பழமுதிர்சோலை ஆகிய படை வீடுகள் பற்றி கூறப்பட்டுள்ளன.

    • இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
    • சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்படும்.

    முருகக்கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது.

    ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது.

    ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

    முருகன்:

    முருகு என்றால் அழகு என்பார்கள். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.

    இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

    சரவண பவன்

    சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன்.

    சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும்.

    ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில்

    மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

    ஆறுமுகம்(ன்)

    சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது.

    சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள்.

    இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது.

    குகன்

    மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன்.

    குமாரன்

    கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள்.

    ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கிறார்கள்.

    கந்தன்

    கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது.

    விசாகன்

    விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள்.

    வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன்.

    முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும்.

    இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.

    விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம்.

    முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது.

    ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.

    வேலன்

    வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர்.

    முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.

    சுப்பிரமணியம்

    இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம்.

    புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன்.

    மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர்.

    ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது.

    • கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.
    • அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம்.

    1. சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் சிங்காரவேலவனாக மயில் மீதமர்ந்த முருகனை தனித்தனியே யானைகள் மீது அமர்ந்த தேவியருடன் தரிசிக்கலாம்.

    2.கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.

    3. அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம்.

    4. கோவை கிணத்துக்கடவு எனும் கனககிரியில் உள்ள பொன்மலையில் தரிசனம் தரும் முருகனை,

    பார்வை இழந்த அடியவர் ஒருவர் வழிக்குத்துணை உன் மென்மலர்ப் பாதங்கள் என திடமாக நம்ப,

    அதிசயமாக அந்த அடியவர்க்கு பார்வையை மீட்டுத்தந்தவர் இந்த முருகன்.

    5. பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி கோலத்தில், தம்பதி சமேதராகவும்,

    முருகனை பல்லடம் உடுமலைப்பேட்டை பாதையில் உள்ள தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம்.

    6. நாகை, தில்லையடிக்கருகில் உள்ள திருவிடைக்கழி தலத்தில் குரு சண்டிகேஸ்வரரோடு அருள்கிறார் முருகப்பொருமான்.

    7. சென்னை பாரிமுனையில் கந்த கோட்டத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியாக முருகன் தரிசனம் தருகிறார்.

    8. கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் வழக்கத்துக்கு மாறாக

    இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது முருகன் அமர்ந்துள்ளார்.

    9. திருவாரூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள எண்கண் தலத்தில் எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

    10. தென்காசிக்கு 6 கி.மீ தொலைவில் உள்ள ஆய்க்குடியில் மழலைவரம் வேண்டுவோர்க்கு

    படிப்பாயசம் பிரார்த்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ பாலமுருகனை காணலாம்.

    11. கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோடன், செங்கோட்டையன் எனும் பெயர்களில்

    முருகப்பெருமான் திருச்செங்கோடு தலத்தில் காட்சி தருகிறார்.

    12. பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம்.

    கோலை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைப்பட்ட இரும்பு சிறையும் உள்ளது.

    13. கோவைக்கு அருகில் உள்ள அனுவாவியில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்ற அனுமனின் தாகத்தை தீர்த்த அழகு முருகனை தரிசிக்கலாம்.

    14. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாக செயல்படுவதை உணர்த்திய முருகனை

    வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் நெல்லை மாவட்டம் இலஞ்சியில் தரிசிக்கலாம்.

    15. காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் ஆலயத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற திகடச் சக்கர எனும் முதல் அடி எடுத்து கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.

    16. விராலிமலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்கிறார்.

    17. குமரி மாவட்டம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள குமார கோவிலில் வள்ளியுடன் முருகன் கருவறையில் வீற்றிருக்கிறார்.

    18. பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை வைக்க சொல்லி

    உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம்.

    அந்தப்பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம்.

    19. தென்காசி, திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏரி தரிசிக்கலாம்.

    20. மாமல்லபுரம் கல்பாக்கம் பாதையில், திருப்போரூரில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக முருகனை தரிசிக்கலாம்.

    சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில் முருகனுக்கு சமமாக போற்றப்படுகிறது.

    • பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.
    • கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும்.

    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.

    கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.

    இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும்.

    எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.

    • பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.
    • பாராயணம் புரிதல் வேண்டும் தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.

    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டிவரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து

    தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து

    அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும்.

    கந்தனின் சரித்திரங்களைக் கேட்க வேண்டும்.

    பாராயணம் புரிதல் வேண்டும் தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.

    இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும்.

    எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.

    • கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபடுவோர் சிவபெருமான், முருகப்பெருமான் அருளைப் பெறுவர்.
    • அடுத்த நாள் ரோகிணியில் காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்ய வேண்டும்.

    கார்த்திகை மாதம் விரதம் இருந்து தீப தரிசனம் செய்தல் மிகுந்த புண்ணியமாகும்.

    கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தை முக்கியமாக வைத்து அண்ணாமலை தீபம் வருவதால்

    இதற்கு 'கார்த்திகை தீபம்' என்ற பெயரும் உண்டாயிற்று.

    இந்நாளில் இல்லம், கோவில், மடம், சத்திரம், மலை உச்சி, வாசற்படி, மண்டபம், மூலஸ்தானம், வியாபார ஸ்தலங்கள்

    ஆகியவற்றிலும் மங்களம் உண்டாகத் தீபங்களை ஏற்றலாம்.

    கார்த்திகை மாத விரதத்தின் மகிமையை சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளியுள்ளார்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபடுவோர் சிவபெருமான், முருகப்பெருமான் அருளைப் பெறுவர்.

    கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில்

    விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

    அடுத்த நாள் ரோகிணியில் காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்ய வேண்டும்.

    அடியார்களோடு கூடி உண்ண அன்னதானம் செய்யலாம்.

    பின்னர் மாதந்தோறும் கார்த்திகை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

    கார்த்திகை விரதத்தால் முருகன் அருளால் சகல செல்வயோகமிக்க பெருவாழ்வை பெறுவார்கள்.

    • சீதையைத் தேடுவதற்காக அனுமார் இவ்விரதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
    • இவ்விரதத்தை மேற்கொண்ட தேவேந்திரன் மூவுலகத்தையும் ஆண்டிருக்கின்றார்.

    பார்வதி தேவி, சிவபெருமான், அரிச்சந்திரன் ஆகியோர் சதுர்த்தி விரதம் இருந்து சங்கடம் நீங்கியுள்ளனர்.

    சீதையைத் தேடுவதற்காக அனுமார் இவ்விரதத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

    இவ்விரதத்தை மேற்கொண்ட தேவேந்திரன் மூவுலகத்தையும் ஆண்டிருக்கின்றார்.

    பஞ்சபாண்டவர்கள் நாடிழந்து வனவாசம் சென்ற பொழுது இந்த விரதத்தை பகவான் விஷ்ணுவின் அறிவுரைப்படி

    மேற்கொண்டு குருச்சேத்திரப் போரில் பகைவர்களை வென்றிருக்கின்றனர்.

    கந்தக் கடவுளாம் முருகக் கடவுளே தவத்தில் சிறந்த முனிவர்களிடம் மனிதர்களின் சிக்கல்கள் தீர,

    விநாயகப் பெருமானுக்குரிய இந்த சங்கடஹர சதுர்த்தியைத் தான் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்

    என்று சான்றோர்கள் எடுத்துரைப்பார்கள்.

    போராட்டங்களை சந்தித்தவர்களெல்லாம் இந்த விரத்தினால் பலன் பெற்றிருப்பதால் முறையாக நாமும்

    சங்டஹர சதுர்த்தி விரதத்தை முறைப்படி மேற்கொண்டு மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும்

    இல்லாமல் வாழலாம் அல்லவா?

    சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்போம்.

    சந்தோஷத்தோடு வாழ்வில் வளம் சேர்ப்போம்.

    • முருகப் பெருமான் நடனப் பிரியன். அவனே நடன சிகாமணி.
    • முருகன் குடையுடன் கூத்தாடி அசுரர்களை வென்றார்.

    ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் சூரியன் கிழக்கில் இருந்து தென்பக்கமாக உதிக்கும் காலம்.

    இக்காலத்தை தட்சிணாயன புண்ணிய காலம் என்பர்.

    தை முதல் ஆனி வரையான 6 மாத காலம் சூரியன் கிழக்கில் இருந்து வடக்குப் பக்கமாக உதிக்கும்.

    இதை உத்திராயண புண்ணிய காலம் என்பர்.

    வடதிசை இறைவனுக்குரிய திசை.

    இறைவன் வடதிசையில் வீற்றிருக்கிறான்.

    தை முதல் ஆனி வரை தேவர்களுக்கு ஒரு பகல் பொழுது, ஆடி முதல் மார்கழி வரை ஒரு இரவு.

    இந்த இரண்டும் சேர்ந்த பகலிரவு அவர்களுக்கு ஒரு நாள் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

    இவ் வகையில் மார்கழி வைகறைப் பொழுதாகவும், தை மாதம் இளங்காலைப் பொழுதாகவும் கொள்ளப்படுகிறது.

    இறைவனைத் தொழ அவனுடைய அருளைப் பெற மிகச் சிறப்பான நேரம் வைகறைப் பொழுதும் இளங்காலைப் பொழுதுமாகும்.

    சூரியன் மகர ராசியில் பிரவேசித்து உதிக்கும் நாளன்று நாம் மகர சங்கராந்தி என்று தைப் பொங்கல் நாளாகக் கொண்டாடுகிறோம்.

    இந்த பிரபஞ்சத்தையும், உயிர்களையும் படைத்த இறைவன், தன் கருணையினால்,

    கருவறையில் அசைவற்றுக் கிடந்த உயிர்களுக்கு, உடல் கொடுத்து, அவன் படைத்த இந்த உலகத்தையும்

    அதன் பொருட்டான இயற்கையையும் நாம் அனுபவிக்கச் செய்து,

    இந்த பிரபஞ்சத்தை இடையறாது இயக்கி வரும் பொருட்டு,

    திருநடனம் புரிந்த தினமாகத் தைப்பூச நன்னாளை ஆன்றோர் வகுத்துள்ளனர்.

    இறைவன் உயிர்கள் பொருட்டு நடனம் புரிந்த தினம் தைப்பூச தினம்.

    இந்த பிரபஞ்சம் முழுவதும் அவன் திருநடனத்தால் தான் இயங்குகின்றன.

    எனவே இறைவன் ஆனந்த நடனம் புரிந்த நாளாகத் தைப்பூச நன்னாளைக் கொண்டாடி வருகிறோம்.

    முருகப் பெருமான் நடனப் பிரியன்.

    அவனே நடன சிகாமணி.

    முருகன் "குடை", "துடை", "பவுரி" என் னும் பலவகைக் கூத்துக்களை ஆடினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முருகன் குடையுடன் கூத்தாடி அசுரர்களை வென்றார்.

    அதனால் அவருக்கு "சத்ரநடன மூர்த்தி" என்று பெயர்.

    சிலப்பதிகாரம் முருகப் பெருமானின் கூத்தை விளக்குகிறது.

    சிதம்பரத்தில் எல்லாவித இசைக் கருவிகளும் ஒலிக்க முருகன் நடனமாடினான் என்பார்கள்.

    பல கோவில் சிற்பங்களில் முருகப்பெருமான் நடனம் புரியும் சிற்பங்கள் உள்ளன.

    முருகப் பெருமான் நடனமூர்த்தி என்பதற்கு இவைகள் சிறந்த எடுத்து காட்டாக விளங்குகின்றன.

    • உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது.
    • திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது.

    தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது.

    உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப்பெற்றது.

    அதிலிருந்தே அண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோவில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது.

    அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி கோவில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோவிலின் வாயிலில் ஒரு பிரம்மஹத்தி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவபெருமான் பார்வதியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.

    வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த் தொலியும் ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை,

    வியாக்கிர பாதமுனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரம் தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் தரிசித்து ஆனந்தமடைந்தார்கள்.

    பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக

    சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.

    சிதம்பரத்திற்கு வந்து அரும் பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, ரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது தைப்பூசப்புண்ணிய தினத்தன்று தான்.

    அதன் காரணமாகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    ×