என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகளிர் சுய உதவிக் குழு"
- கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
- மொத்தம் ரூ.18 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மகளிர் திட் டம் சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இடையே கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடந்தன.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய விடுதி காப்பா ளினிகளுக்கும் காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத் தில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் கேடயம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-
தமிழ்நாடு நகர்புற வாழ் வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர் கள் மற்றும் பகுதி அளவி லான கூட்டமைப்பு உறுப்பி னர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும், குழுக்களி டையே ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கிட வும்போட்டிகள் நடத்தப்பட் டன. மாநகராட்சி, நகராட்சி கள் மற்றும் பேரூராட்சி பகு திகளில் சுய உதவிக் குழுக்க ளால் அடைந்த பலன்கள், சமூக அங்கீகாரம், சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப் புகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி களில் மொத்தம் 329 பேர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் மாநக ராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முதல் 3 இடங்களை பெற்ற நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அந்த வகை யில் ஒவ்வொரு தலைப்பிற் கும் முதல் 3 இடங்களை பெற்ற 27 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்க பட்டன.
மாவட்ட பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த விடுதி காப்பாளினிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.18 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் திருப்பதி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் ஹரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்