என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் சுய உதவிக் குழு"
- 1.5.2021 முதல் 30.10.2024 வரை 2,538 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- இதுவரை 1,415 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.7.07 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் குறைந்த பட்சம் 10-20 சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து பகுதி மற்றும் வார்டு அளவில் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள குழுக்களுக்கு பல்வேறு அரசு திட்டங்களின் பயன்கள் மற்றும் மானிய உதவிகளை பெறவும் இது வழிகாட்டுகிறது.
1.5.2021 முதல் 30.10.2024 வரை 2,538 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 6 மாதங்கள் சிறப்பாக செயல்பட்ட, கூட்டமைப்புகளுக்கும் சுழல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,415 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.7.07 கோடி சுழல் நிதியாக வழங்கப்பட்டு உள்ளது.
வங்கியில் 317 திட்ட முன் வரைவுகள் சமர்பிக்கப்பட்டு இதுவரை 277.97 கோடி ரூபாய் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் 3,145 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, 1,929 பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1,11,979 குழந்தைகள் பயன் அடைகின்றனர்.
சிறு, குறு உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தின் மூலம் 7,019 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.27.08 கோடி ரூபாய் மூலதன ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
- அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் தமிழ்வேந்தன், மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
தற்போது புதுச்சேரியில் தேர்தல் பிரசாரகளம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சிறிய சிறிய அமைப்புகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் அந்தந்த அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொகுதி வாரியாக இறங்கியுள்ளனர்.
பிரதான 2 தேசிய கட்சிகள் இடையே நேரடி போட்டி மட்டுமின்றி அ.தி.மு.க.வும் தனி அணியாக களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மட்டுமின்றி மாநிலத்தின் முன்னணி நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தற்போது கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அனுப்பி சிறிய சிறிய அமைப்புகள், இயக்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் நோக்கில் குறிப்பாக தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டு வருகின்றனர்.
அப்போது குடியிருப்போர் நலசங்க அமைப்புகளிடம் இருந்து வரும் கோரிக்கைகளை கேட்கும் வேட்பாளர்கள், வெற்றிபெற்றதும் உடனே கோரிக்கையை நிறைவேற் றித் தருவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர்.
இதேபோல் அரசு ஊழியர்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள், மாணவர்-இளைஞர் அமைப்புகள் உள்ளிட்டோரையும் சந்தித்து வருகின்றனர்.
முதல்கட்டமாக இந்நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்ததாக சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.
- மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது.
ஈரோடு:
ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,504 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு விழா நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான் ஒவ்வொரு முறையும் ஈரோடு வரும்போது எல்லாம் எனது தாய் வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்னை உங்களின் மகனாக, சகோதரனாக, பேரனாக இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இது மட்டும் இன்றி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் இது. ஈரோடு மண் திராவிட இயக்கத்தின் தொட்டில் ஆகும். பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். ஏனென்றால் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை தான் நான் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். நான் மட்டும் இன்றி எனது தந்தையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அவர்களின் தயாரிப்பு அவ்வளவு தரமாக இருக்கும். திராவிட அரசின் பிராண்ட் அம்பாசிஸ்டராக மகளிர் சுய குழுக்கள் உள்ளனர்.
2016-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக செலுத்துகிறோம். ஆனால் 2.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திருப்பி வழங்குகிறது. 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தருகிறது. இத்தகைய பொருளாதார சூழலில் தான் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
திராவிட மாடல் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் குழு பங்களிப்பு மிகப்பெரும் உதவியாக உள்ளது. காலை உணவு திட்டம், சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களில் மகளிர் குழு பங்களிப்பு பேருதவியாக உள்ளது. பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் முன்னேற்றம், நோக்கம் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் மிச்சமாகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த அரசு பொறுப்பேற்ற பின் மகளிர் குழுவை சேர்ந்த 12 லட்சத்து 25 ஆயிரத்து 803 பேருக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் 2023-24-ம் ஆண்டில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. விரைவில் இலக்கை முடிப்போம். நான் தற்போது நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேரடியாக கோவையில் இருந்து மும்பை செல்கிறேன். விளையாட்டுத்துறை மேம்பாட்டு சார்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு இன்று விருது வழங்க உள்ளனர். அதற்காக செல்கிறேன். உங்கள் அனைவர் ஆசீர்வாதத்துடன் செல்கிறேன் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்பகுதிகளில் 3,482 குழுக்களில் 41,283 உறுப்பினர்கள் உள்ளனர்.
- ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.2,440.98 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1095 குழுக்களில் 11,446 உறுப்பினர்களும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 647 குழுக்களில் 6303 உறுப்பினர்களும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் 813 குழுக்களில் 8228 உறுப்பினர்களும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 499 குழுக்களில் 5440 உறுப்பினர்களும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 484 குழுக்களில் 4996 உறுப்பினர்களும், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 1091 குழுக்களில் 11,051 உறுப்பினர்களும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 623 குழுக்களில் 6217 உறுப்பினர்களும்,
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 900 குழுக்களில் 9099 உறுப்பினர்களும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 584 குழுக்களில் 6120 உறுப்பினர்களும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 562 குழுக்களில் 5692 உறுப்பினர்களும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 561 குழுக்களில் 5595 உறுப்பினர்களும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 572 குழுக்களில் 6100 உறுப்பினர்களும், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 466 குழுக்களில் 4830 உறுப்பினர்களும், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 661 குழுக்களில் 7085 உறுப்பினர்களும் என ஊரகப் பகுதிகளில் மொத்தம் 9558 குழுக்களில் 98,202 உறுப்பினர்கள் உள்ளனர்.
மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்பகுதிகளில் 3,482 குழுக்களில் 41,283 உறுப்பினர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆக மொத்தம் 13,040 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அதில் 1,39,485 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 236 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.35 லட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 465 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.69 லட்சம், 2023-2024-ஆம் ஆண்டில் அக்டோபர்-2023 வரை 188 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.28 லட்சம் என மொத்தம் ரூ.1.32 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 1,538 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.9.91 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 1,315 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.19.72 கோடி, 2023-2024-ஆம் ஆண்டில் அக்டோபர்-2023 வரை 389 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.01 கோடி என மொத்தம் ரூ.34.64 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 18,548 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.976.94 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 11,631 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.621.16 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 5,474 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.388.87 கோடி என மொத்தம் ரூ.1,986.97 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் நகர்ப்புற பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 633 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.63 லட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 652 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.65 லட்சம் என மொத்தம் ரூ.1.29 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 328 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.15.28 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 3,148 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.207.40 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 3,911 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.194.08 கோடி என மொத்தம் ரூ.416.77 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-22 முதல் 31.10.2023 வரை ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.2,440.98 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்களில் பயனடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழக அரசுக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
- மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவி- ரூ.3¼ கோடி மதிப்பில் 24 திட்ட பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
- ஊராட்சி தலைவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ரூ. 3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் முடி வுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நேரடியாக அனைத்து பகுதி கிராம மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் நேரிலும் , தொலைபேசி மூலமாகவும் பொது மக்களின் கோரிக்கை களை நிறை வேற்ற வலியுறுத்தினார்.
தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி 24 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் விவரம் வருமாறு:-
காலை 7 மணி அளவில் மாங்குளம் கிராமத்தில் ரூ. 70 ஆயிரம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம சாவடியை அமைச்சர் திறந்து வைத்தார். அதன் பின்னர் சின்ன மாங்குளம் கிராமத்தில் முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை போடுவதற் கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
மாத்தூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டத்தை திறந்து வைத்தார்.
வெள்ளியங்குன்றம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய உணவு தானியங்கி சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்.
அதே போன்று அரும்பனூர் ஊராட்சியில் அழகர் கோவில் சாலை சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.60ஆயிரம் மதிப்பீட்டில் தாமரைப் பட்டி, காயம்பட்டி கிரா மத்தில் புதிய நாடக மேடையை திறந்து வைத்தார்.
பின்னர் இதேபோன்று கொடிக்குளம், திருமோகூர், ராஜாக்கூர், வரிச்சியூர், களிமங்கலம், குன்னத்தூர், சக்குடி, கார்சேரி, சக்சி மங்கலம், கருப்பாயூரணி போன்ற பகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் மாவட்ட ஊராட்சி நிதி ஒன்றிய பொது நிதி, ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மாவட்ட ஊராட்சி நிதி போன்ற திட்டத்தின் கீழ் நீர் தேக்க தொட்டி கிராம சாவடி அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கடை, உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் பயணிகள் நிழற்குடை என மொத்தம் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 24 திட்டப் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் தலைவர் சக்திவேல், மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சூரிய கலா கலாநிதி, ஒன்றிய சேர்மங்கள் வீரராகவன், மணி மேகலை, தி.மு.க. நிர்வாகிகள் சோமசுந்தர பாண்டியன், அழகு பாண்டி, பால சுப்ரமணியன், திருப்பாலை சசிகுமார், மருதுபாண்டி, வழக்கறிஞர் கலாநிதி, நேருபாண்டி உள்பட ஊராட்சி தலைவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை ரெயிலடி அருகில் மாவட்ட அளவிலாள வணிக வளாகம் கட்டப்பட்டு இயங்கி வந்தது.
- பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தஞ்சாவூர்:
மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் சந்தைப்படுத்தும் பொருட்டு பல்வேறு வகையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 28மாவட்டங்களில் மாவட்ட அளவிலான வணிக வளாகம், பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் தலா ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.
இவ்வளாகங்களில் கடைகள், கூட்ட அரங்குகள், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை வசதிகள் உள்ளன.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை ரெயிலடி அருகில் மாவட்ட அளவிலாள வணிக வளாகம் (பூமாலை வணிக வளாகம்) ரூ.28 லட்சம் செலவில் கட்டப்பட்டு இயங்கி வந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டபேரவையில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையில் மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி பூமாலை வணிக வளாகத்தினை சிறப்பான முறையில் மேம்படுத்தி பொதுமக்களை கவரும் வகையில் தரம் உயர்த்தி பழுது பார்த்தல், உள்கட்டமைப்பு மேம்படுத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற திட்டப்பணிகளை ரூ.51.41 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு இன்று காலை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பூ மாலை வணிக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பின்னர் பூ மாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகளை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்று இருக்க வேண்டும்.
- தேசிய ஊரக வாழ்வாதார இணையதளத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறுதானிய உணவகம் அமைத்திட வருகிற 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு 2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாட்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்திய வேளாண்மையில் முதன்மையாக விளங்க கூடிய சிறுதானியங்கள் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட உரிய நிபந்தனைகளுடன் விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள் ஆகியவற்றிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்று இருக்க வேண்டும். தேசிய ஊரக வாழ்வாதார இணையதளத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு "ஏ" அல்லது "பி" சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியளர் குழு, கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே, ஆர்வமுடையவர்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), அறை எண்.106, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற 27ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
- கடந்த 2012 முதல் 2018 வரை மாதம் ரூ. 100, ரூ. 200 என்ற வீதம் மகளிர் குழுவில் சேமிப்பு செய்து வந்தனர்.
- குழு தலைவி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் 19 பெண்கள் இணைந்து ஸ்டார் மகளிர் குழுவில் கடந்த 2012 முதல் 2018 வரை மாதம் ரூ. 100, ரூ. 200 என்ற வீதம் சிறுக சிறுக சேமித்து வந்த நிலையில் அக்குழுவின் தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2018 முதல் சேமிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மேற்படி குழு தலைவி மீதமுள்ள பணத்தை தங்களுக்கு தராமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி அறிவுறுத்தலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி விசாரணை செய்து மகளிர் குழுவின் சேமிப்பு பணம் ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்தை மீட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பணத்தை மீட்டுக் கொடுத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பணத்தைப் பெற்ற பெண்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
- அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டு முதல் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தும் பொருட்டு காலை உணவு தயாரிக்க கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி, அளவிலான முதன்மை குழு மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பின்வரும் நிபந்தனைகள் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து 3 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அதே ஊராட்சியில், பேரூராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தை அதே தொடக்கப் பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை அப்பள்ளியில் தொடக்கப் படிப்பு முடிந்து வேறு பள்ளிக்கு சென்று விட்டால் அச்சுய உதவிக்குழு உறுப்பினர் காலை உணவு தயாரிப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு தகுதியான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார்.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்த பட்சம் 10 -ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். உணவு சமைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். அதனை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சமையல் செய்வதற்கு அனுபவம் தேவை என்பது இதில் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக ஆர்வம் மட்டுமே இருந்தால் போதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் நிபந்தனையில் வயது வரம்பும் இடம்பெறவில்லை. இதனால் இப்பணியில் சேர மகளிர் சுய உதவி குழுவினர் மத்தியில் கடும் போட்டி ஏற்படும் என தெரிகிறது.
- மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- பயன்பாட்டை ஒழித்து மீண்டும் மஞ்சபை பயன்பா ட்டிற்கு கொண்டு வருதல் குறித்து ஆலோசிக்க ப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சும் கணேசன் தலைமையில், செயல் அலுவலர் ஆனந்தன் முன்னிலையில் வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடன் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருவெண்ணைநல்லூர் கடைவீதியில் உள்ள கடைகள் மற்றும் பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்தல் குறித்து மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல், மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் கடைவீதியில் உள்ள அனைத்து கடை களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வைத்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தல். மேலும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை ஒழித்து மீண்டும் மஞ்சபை பயன்பா ட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க ப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரூராட்சி சார்பில் மஞ்ச ப்பை வழங்கப்பட்டது. வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவின் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இளநிலை உதவியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்
- 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்தால் அவர்களுக்கு பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தாமாக முன் வந்து நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்குகிறது.
- போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழுவாக சேர்ந்து பெண்கள் தொழில் தொடங்கி அதன் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள இந்த தொகை பெரிதும் உதவியாக இருந்து வந்தது.
ஆனால் காலப்போக்கில் குடும்ப செலவுக்காக குழு அமைத்து பெண்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்தால் அவர்களுக்கு பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் தாமாக முன் வந்து நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்குகிறது.
பணம் கொடுக்கும் போது கணவன்-மனைவி 2 பேரின் ஒப்புதலோடு வழங்கப்படுவதால் தொகை வசூலிக்கும் போது வீட்டில் வந்து பணம் கொடுக்கும் வரை இருந்து நிதி நிறுவன ஊழியர்கள் வாங்கிச் செல்கின்றனர்.
கடனை செலுத்த முடியாத போது மற்றொரு நிறுவனத்தில் கடன் பெற்று அடைத்து விடுகின்றனர். அந்த நிறுவனத்துக்கும் கடனை செலுத்த முடிய வில்லை என்றால் வேறு ஒரு நிறுவனத்தில் கடனை பெற்று விடுகின்றனர்.
இதனால் அவர்கள் மேலும் மேலும் கடனாளியாகி மன அழுத்தத்துக்கு உள்ளாகி விடுகின்றனர். அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவதில் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு குடும்பத்தில் ஒருவர் கடன் பெற்றிருந்தால் மீண்டும் வேறொரு வங்கியில் அவருக்கு கடன் வழங்க முடியாது. ஆனால் தனியார் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கிராமப்புற மக்களிடம் தாராளமாக கடன் உதவியை வழங்கி விடுகின்றனர்.
இதனால் தினசரி வீட்டு வாசல் முன்பு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை கேட்டு வந்து விடுகின்றனர். ஒரு குழுவில் ஒருவர் பணம் கட்ட வில்லையென்றாலும் மொத்த உறுப்பினரும் அதற்கு பொறுப்பாளியாக மாற்றப்படுகிறார்கள். பணம் கிடைக்கும் வரை இரவு 8 மணி ஆனால் கூட வாசலிலேயே அமர்ந்து வசூல் செய்து செல்கின்றனர்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்லும் நிலையில் அவரது தலையில் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் கடன் திணிக்கப்படு கிறது. கடனை கொடுக்க முடியாமல் வெளியூர் சென்று விடுவதும் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்வதும் நடந்து வருகிறது.குறிப்பாக கிராமப்புற மக்களிடம் மட்டுமே இது போன்ற கடன் உதவியை தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மட்டும் காவல் துறை இது போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
- அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி, மல்லாங்கிணறு, ஆர்.ஆர்.நகர், சிவகாசி ஆகிய இடங்களில் கூட்டுற வுத்துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தள்ளுபடி சான்று மற்றும் புதிய கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கே ற்று 1,108 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 11 ஆயிரத்து 197 பயனா ளிகளுக்கு ரூ.18.24கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 67 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 876 பயனாளிகளுக்கு ரூ.4.215 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதன்முறையாக 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட த்தில் மகளிர் சுய உதவிக்குழு இயக்கத்தை முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புற ங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றினார்.
தற்போது முதல்-அமைச்சர் செயல்படுத்திய மகளிருக்கான இலவச பஸ் பயணம் திட்டம் மூலம் கல்வி, பணி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்லக்கூடிய பெண்கள் பயன்பெறுகின்றனர். இந்த இலவச பயணம் மூலம் பெண்கள் செலவிடும் கட்டணம் பொருளா தாரத்தில் ஒரு பங்காக சேமிக்கப்படுகிறது.
கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து கடன் திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 1,195 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 19 ஆயிரத்து 132 பயனாளிகளுக்கு ரூ.32.77 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 ஆகிய திட்டங்களுடன், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை பெண்களின் உரிமைக்காகவும், மேம்பா ட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகு மார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுச்சாமி, விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், நகர்ம ன்றத்தலைவர் மாதவன், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணை த்தலைவர் விவேகன்ராஜ், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.