என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் சுய உதவிக் குழு"

    • கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
    • மொத்தம் ரூ.18 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட மகளிர் திட் டம் சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இடையே கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடந்தன.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய விடுதி காப்பா ளினிகளுக்கும் காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத் தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் கேடயம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழ்நாடு நகர்புற வாழ் வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர் கள் மற்றும் பகுதி அளவி லான கூட்டமைப்பு உறுப்பி னர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும், குழுக்களி டையே ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கிட வும்போட்டிகள் நடத்தப்பட் டன. மாநகராட்சி, நகராட்சி கள் மற்றும் பேரூராட்சி பகு திகளில் சுய உதவிக் குழுக்க ளால் அடைந்த பலன்கள், சமூக அங்கீகாரம், சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப் புகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி களில் மொத்தம் 329 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் மாநக ராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முதல் 3 இடங்களை பெற்ற நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அந்த வகை யில் ஒவ்வொரு தலைப்பிற் கும் முதல் 3 இடங்களை பெற்ற 27 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்க பட்டன.

    மாவட்ட பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த விடுதி காப்பாளினிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.18 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் திருப்பதி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் ஹரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மார்ச் 8-ந்தேதி முதலமைச்சர் ரூ. 3,019 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க உள்ளார்.
    • ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி வங்கி கடனாக பெற்று தந்துள்ளோம்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகிலுள்ள பழவனக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் குழு கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்களை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    சுய தொழில் தொடங்க ஊக்குவிப்பது வங்கி கடன் வழங்குவது என துறைக்கு அமைச்சராக, முதலமைச்சர் இருந்தபோது பல்வேறு முன்னேற்றங்களை செய்துள்ளார்.

    கிராமப்புறங்களில் 3.30 லட்சம் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1.50 லட்சம் என மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

    இதில் 54 லட்சம் மகளிர்கள் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றனர். இந்த அரசு பொறுப்பேற்ற நாட்களில் இருந்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி வங்கி கடனாக பெற்று தந்துள்ளோம்.

    மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8-ந்தேதி சென்னையில் முதலமைச்சர் ரூ. 3,019 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க உள்ளார்.

    இப்படி வழங்கப்படுகின்ற இந்த கடன்களை எந்த அளவிற்கு பயனுள்ள வகையில் செலவிடுகின்றார்கள்.

    அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது ஆய்வு செய்ய வேண்டும், அவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.

    குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் வாழ்வாதார மேம்பாடு, மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தில் இந்த ஆய்வினை தொடங்கி உள்ளோம்.

    இங்குள்ள 30 குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் தங்களது செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டனர்.

    அது மட்டுமல்லாமல் உள்ளூர் தேவைகளாக வாய்க்கால்கள் தூர்வார வேண்டும், பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும், பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திராவிட மாடல் அரசு அமைய காரணமாக இருந்த பெண்களை சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    செந்துறை:

    நத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகுடி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் பொது இடங்கள், பள்ளி, ஊராட்சி அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பொது கழிவறை மற்றும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் சரவணன், உதவி திட்ட அலுவலர் தேன்ராஜ், வட்டார இயக்க மேலாளர் விஜயலட்சுமி, கணக்காளர் விஜயலட்சுமி, சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர் ராதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொது இடங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றவும்,

    மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சுத்தம் செய்த தேதியை குறிப்பிடுமாறும், பொது இடங்களில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளையும், ஊராட்சி ஒன்றிய தலைவரையும் அறிவுறுத்தினர்.

    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர்கள் கிருஷ்ணன், முனியாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் கோகிலவாணி வீரராகவன், ஊராட்சி செயலர் வீரபாண்டி, பணித்தள பொறுப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • ஷியோபூரில் உள்ள கரஹாலில் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
    • கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள்.

    மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர் பகுதியில் இன்று சுய உதவிக் குழுக்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    இதற்கு முன்பாக, ஷியோபூரில் உள்ள கரஹாலில் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நமீபியாவில் இருந்து இந்தியா வந்துள்ள எட்டு சிறுத்தைகள் நம் விருந்தினர்கள். அவர்களைக் கைதட்டி அன்புடன் வரவேற்குமாறு உங்கள் அனைவரையும், அனைத்து நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

    என் பிறந்த நாளில், நான் என் அம்மாவிடம் சென்று, அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெறுவது வழக்கமாக கொண்டிருந்தேன். இன்று என்னால் அவரிடம் செல்ல முடியவில்லை. ஆனால் பழங்குடியினர் பகுதிகளிலும் கிராமங்களிலும் கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள்.

    கடந்த நூற்றாண்டின் இந்தியாவிற்கும் இந்த நூற்றாண்டின் புதிய இந்தியாவிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் நமது பெண்களின் சக்தி பிரதிநிதித்துவமாக இருப்பது. இன்றைய புதிய இந்தியாவில் பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பெண் சக்தியின் கொடி பறக்கிறது.

    கடந்த 8 ஆண்டுகளில், சுய உதவிக் குழுக்களை மேம்படுத்துவதற்கு எல்லா வகையிலும் உதவி செய்துள்ளோம். இன்று நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர். இந்த பிரச்சாரத்தில் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒரு சகோதரியாவது இருக்க வேண்டும் என்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

    கிராமப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்ளூர் தயாரிப்புகளை பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி சமுதாய நலக்கூடம் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ரூ.72.30 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் வட்டம் எம்.சண்முகபுரம் ஊராட்சி வடக்குசெவலில், சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கினார். இதையடுத்து இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

    கனிமொழி எம்.பி. தலைமை வகித்து சமுதாய நலக்கூடம் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, புதூர் ஊராட்சி ஒன்றியம் கவுண்டன் பட்டி, நாகலா புரம் ஆகிய இடங்களில் தலா ரூ.72.30 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடங்களை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கூடுதல் ஆட்சியர் சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் நாகலாபுரம், வேப்ப லோடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா ரூ.3.73 கோடியில் தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கு பூமி பூஜையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் அன்பு ராஜன், ராதாகிருஷ்ணன், செல்வ ராஜ், மும்மூர்த்தி, ராமசுப்பு, நவநீதகிருஷ்ணன், புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரகனி காளிமுத்து, துணைத் தலைவர் அனிதா பரணி, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவி 5 குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

    கொடைரோடு:

    அம்மையநாயக்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவி 5 குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி கொடைரோட்டில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் (பொறுப்பு) பழனிச்சாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சவுந்திரபாண்டியன், தி.மு.க பேரூர் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடன் உதவி வழங்கினர்.

    5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.நிர்வாகிகள் வண்ணக்கிளி, வாசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
    • சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும்.

    தாராபுரம்:

    தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சு.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியனின் தற்காலிகப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்வது உள்ளிட்ட நிலுவைக்கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாகப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மண்டல அளவில் வரும் ஜூலை 22 ந்தேதி தர்ணாவும், சென்னையில் வரும் ஆகஸ்ட் 16 ந்தேதி முதல் ஆகஸ்ட் 19 ந்தேதி வரையில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.

    சத்துணவு திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், இந்தத் திட்டத்தின் மகளிா் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்தாமல் சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்டத்தலைவா் ஞானசேகரன், மாநில துணைத்தலைவா்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
    • பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடியும்.

    நாகப்பட்டினம்:

    ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

    கீழையூர் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் நாகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பா கோவிலில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் கட்டிட பணிகளை தரமாகவும் துரிதமாகவும் கட்டி முடித்திட பயணாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டார்‌.

    தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான 6.84 கோடி மதிப்பீட்டில் 188 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

    விழாவில் பேசிய அமைச்சர் இந்தாண்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு 20ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 21ஆயிரத்து 760கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கி தமிழக அரசு சாதனை படைத்ததாக தெரிவித்தார்.பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார்.
    • தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது மற்றும் தொழில் பயிற்சி வழங்குவது சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு முன்னிலை வகித்தார்.

    தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் மற்றும் சமுதாய பயிற்றுனர் ஜென்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களை பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைப்பது பற்றியும் தொழில் பயிற்சி வழங்குவது பற்றியும் பேசினார்.

    மேலும் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் மகளிர் சுய உதவி குழு மூலம் தொழில் தொடங்கி மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்துவது பற்றியும் பயிற்சி வழங்கினார்.

    மேலும் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்க்கவும் மஞ்சள் பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசுரமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் 18 மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், மாரியம்மாள், சீதாலெட்சுமி மற்றும் மகளிர் சமுதாய வழ பயிற்றுனர்கள் உமா மகேஸ்வரி, சந்திரலேகா, சுபா ராஜேஸ்வரி, மேரி ஆனந்த பாஸ்கலின், விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்றுகளை மகளிர் சுய உதவிக் குழுவினர் நடுகின்றனர்
    • தண்ணீர் ஊற்றி தொடர்ந்து பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர்.

    கரூர்:

    நொய்யல் அருகே வேட்டமங்கலம் பகுதிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை அதிக அளவில் வளர்த்து மழை பொழிவதை உருவாக்கும் வகையில் அப்பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் தாங்களாகவே குழிகள் பறித்து மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

    நடப்படும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி தொர்ந்து பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர்.

    • மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் குருமலை மற்றும் குழிபட்டி செட்டில் மென்டில் வாழும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006 ன் படி தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டது.

    மேலும், 102 நபர்களுக்கு ரூ .71.26 லட்சம் மதிப்பீட்டில் தொழில் முதலீட்டுக்கான அரசு மானிய விடுவிப்பு உத்தரவு ஆணைகள் மற்றும் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

    வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிகாலத்தில் தர்மபுரியில் தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன.

    மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் , மலைவாழ் மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு குறைந்தது 8 ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆகையால், மலைவாழ் மக்கள் கண்டிப்பாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். இதுவரை பொதுத்தேர்தலில் மட்டும் வாக்களித்து வந்தீர்கள். இப்பொழுது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களிலும் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மலைவாழ் மக்கள் அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது .

    அந்த வகையில் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தொழில் தொடங்க தாட்கோ மூலம் மானியம் வழங்கப் படுகிறது. தாட்கோ மூலம் 2022-2023 நிதியாண்டில் கறவை மாடு வாங்குதல், வாகனம் வாங்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட தொழில் தொடங்கும் நடவடிக்கைகளுக்கு வங்கி மூலம் கடனும் , தாட்கோ மூலம் மானியமும் வழங்கப்படுகிறது .

    பொதுமக்கள் அடிப்படை தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. செட்டில் மென்ட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவைகள் குறித்து கேட்டறிந்து பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்றைய தினம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 26 நபர்களுக்கு ரூ .38.43 லட்சம் மதிப்பீட்டில் மானியமும் , வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு இளைஞர்களுக்கான ரூ .18.85 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 50 நபர்களுக்கு ரூ 11.50 லட்சம் மானியமும், நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ .0.91 லட்சம் மானியமும் என மொத்தம் 102 நபர்களுக்கு தாட்கோ மூலம் ரூ .71.26 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    வருவாய்த்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும் மற்றும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணமும் என மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார் .

    இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ரவிச்சந்திரன் , தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஷ்வந்த் கண்னண் . வட்டாட்சியர் கணேசன் ,ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் கனிமொழி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் , மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    தலையாட்டி பொம்மை அனுப்பி வைத்த தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பிரதமர் மோடி புகழாரம். அனைத்துப் பெருமையும் கலெக்டர், மகளிர் திட்ட அலுவலரையே சேரும்- பெண்கள் பெருமிதம் அடைந்தனர்.
    தஞ்சாவூர்:
    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கிபாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

    அதன்படி இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது தஞ்சாவூரில் இருந்து தஞ்சை தாரகை  மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி பெண்கள் எனக்கு தலையாட்டி பொம்மைகள் அனுப்பியுள்ளனர். 

    இதனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தலையாட்டி பொம்மை அனுப்பிய அந்த சுய உதவி குழுவை சேர்ந்த அனைத்து பெண்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

    பிரதமர் மோடி பேசியதன் மூலம் இந்தியா முழுவதும் தஞ்சை தலையாட்டி பொம்மைகளின் சிறப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களின் சிறப்பு பரவியது. 

    மேலும் தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக்குழு பெண்களால் தஞ்சைக்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கும் பெருமை கிடைத்துள்ளது.
    இதுகுறித்து தஞ்சை தாரகை மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடியை சேர்ந்த மணிமேகலை என்பவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் திட்ட அலுவலர் லோகேஸ்வரி மற்றும் அதிகாரிகளின் சீரிய முயற்சியால் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தஞ்சை தாரகை மகளிர் சுயஉதவி குழு விற்பனை அங்காடி அமைக்கப்பட்டது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழு தயாரித்த பொருட்கள் எளிதாக விற்பனை செய்ய முடிகிறது. 

    எங்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது. எங்களை போன்ற பெண்களுக்கு சுய உதவி குழு மூலம் விடிவு காலம் பிறந்துள்ளது. நாங்கள் மகளிர் சுயஉதவி குழு தயாரித்த அனைத்துப் பொருட்களின் விற்பனை வருகிறோம்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ஜோடி டான்சில் பொம்மை, ஒரு ஜோடி  தலையாட்டி பொம்மை ஆகியவற்றை பிரதமர் மோடிக்கு தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலமாக அனுப்பி இருந்தோம். 

    இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாங்கள் அனுப்பி இருந்த தலையாட்டி பொம்மைகள் பற்றி பேசியது பெருமையாக உள்ளது. 
    இனி மற்ற பெண்களும் சுயமாக பொருட்கள் விற்பனை செய்வர். 

    பிரதமர் மோடி பேசியதன் மூலம்  மகளிர் சுய உதவிக்குழு கூடுதலாக புத்துயிர் கிடைக்கும். இந்த பாராட்டுக்கள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் திட்ட அலுவலர் லோகேஸ்வரி ஆகியோரே சேரும். இவ்வாறு அவர் கூறினார்.
    ×