search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கு அலங்காரம்"

    • பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
    • 1,008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்ய னடைப்பு சித்தர் நகரிலுள்ள பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில், சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வராக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

    ஆன்மிக சிறப்புபெற்ற குருமகாலிங்கேஸ்வரருக்கு சனிப்பிரதோஷம் மற்றும் சிவராத்திரி விழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    காலை 10 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலெட்சுமி ஹோமத்துடன் சிவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மகாபூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு 9மணிக்கு முதல்கால யாக பூஜைகளுடன் சிவராத்திரி வழிபாடு பூஜைகள், சிவ பெருமானுக்கு 1,008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தமிழ்மறையில் தேவாரம், திருவாசக பாராய ணத்துடனும், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரா தனை நடைபெற்றது.

    இரவு 10மணிக்கு பேராசிரியர் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும் அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணம் நடந்தது.

    இன்று அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால யாக பூஜை சதுர்வேத பாராயணத்துடனும் நடை பெற்றது. காலை 4மணிக்கு 4-ம் கால யாக பூஜை, சிறப்பு அபிஷேம், அலங்கார தீபாராதனைகளுடன் கோலாகலமாக நடை பெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×