search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுப்பினர் அட்டை"

    • கடந்த ஏப்ரல் 3-ந் தேதியன்று இது தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்து வந்தது.
    • அட்டை இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தி.மு.க.வில் 1 கோடியே 10 லட்சத்திற்கும் மேல் உறுப்பினர்கள் இருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவரான பிறகு மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கு உடன் பிறப்புகளாய் இணைவோம் என்ற பெயரில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

    கடந்த ஏப்ரல் 3-ந் தேதியன்று இது தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்து வந்தது. இதில் வெற்றிகரமாக மேலும் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

    இவ்வாறு சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை அண்ணா அறிவாலயத்தில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஒப்படைத்திருந்தனர். அதன் மூலம் இப்போது புதிய உறுப்பினர் அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த அட்டை இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, தேனி, தென்காசி மாவட்டங்களுக்கான உறுப்பினர் அட்டை 10-ந் தேதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுசெயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி உறுப்பினர் அட்டை வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் வைப்பார் ஊராட்சி தலைவர் சக்கம்மாள் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு முறை சாரா தொழிலாளர் காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தமிழ்நாடு கட்டுமான மற்றும் உடல் உழைப்பு (அமைப்புசாரா) தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வைப்பார் சமுதாய நல கூட்டத்தில் நடைபெற்றது.

    ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுசெயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமை தாங்கி இலவசமாக உறுப்பினர் அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் வைப்பார் ஊராட்சி தலைவர் சக்கம்மாள் ராமர், கிராம தர்மகர்த்தா வீரமல்லு, சமுதாய தலைவர் முத்துராமலிங்கம், ஐ.என்.டி.யூ.சி. வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் முருகதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×