என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 307520
நீங்கள் தேடியது "தீ மிதித்து"
- எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட தாவாந்தெரு காளியம்மன் திருக்கோவில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
- பின்னர் குழந்தைகள், பெண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட தாவாந்தெரு காளியம்மன் திருக்கோவில் மாசி மாத தீமிதி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை சரபங்காநதிக்கு சென்று பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு பல்வேறு பக்தர்கள் அலகுகளை குத்திக்கொண்டும், கார்களை கட்டி இழுத்தும் தாவாந்தெரு காளியம்மன் கோவில் வரை ஊர்வலமாக வந்தனர்.
முதலில் கோவில் பூசாரி பம்பை மேளங்கள் முழங்க ஓம் சக்தி பரா சக்தி என பக்தர்கள் கரவோசை எழுப்பிய போது பூங்கரகத்துடன் தீ மிதித்தார். பின்னர் குழந்தைகள், பெண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X