search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு"

    • டிஎன்பிஎஸ்சியின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.
    • வருகிற 30-ந்தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

    தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

    இதில், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

    இந்நிலையில், இந்த நிலையில், குரூப்-2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிட்டது.

    இது குறித்து டி.என்.பி.எஸ்.சி தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

    குரூப் 2, 2ஏ தேர்வுக்கான வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப் பட்ட விடைகள் சரியான விடை 'டிக்' குறியீடு மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

    தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.

    உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை 7 நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும். தபால் வழியாகவோ, இ-மெயில் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

    வருகிற 30-ந்தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது. இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

    பொது ஆங்கிலத்தில் வினா எண்கள் 177 முதல் 181 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள், வினா எண் 177-க்கு மேல கொடுக்கப்பட்ட பத்தியில் இருந்து தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் மத்திய அரசு சார்பில் (என்எம்எம்எஸ்) செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    சேலம்:

    நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் மத்திய அரசு சார்பில் (என்எம்எம்எஸ்) செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    6,695 பேர் தேர்வு செய்யப்படுவர்

    இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

    அதன்படி நடப்பு ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் 25-ந்தேதி (சனிக்கிழமை) நடை பெற்றது. மாநிலம் முழுவதும் 847 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 2 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்.

    சேலம் மாவட்டத்தில் 11,602 மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 42 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடந்தது. தேர்வில் மொத்தம் 11,407 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.

    இந்த நிலையில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதை மாணவர்கள் அரசு தேர்வுகள் இயக்க இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன் விபரங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 14-ந்தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    ×