search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனிப்பு வழங்கினர்"

    • சீர்காழி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை வகித்தார்.

    சீர்காழி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் மரகதம், நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு முன்னிலை வகித்தார். சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் மகளிர் தின விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணியில் ஆரோக்கிய அன்னை பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது விழாவில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் கலந்து கொண்டனர் முடிவில் ஆரோக்கிய அன்னை பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் வினோதா நன்றி கூறினார்.

    ×