search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி ஏழுமலையான் கோவில்"

    • நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும்.
    • வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்னால் தொடங்கும்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடக்கின்றன. அதில் 25 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் மிக நீண்ட விழாவான ஆத்யாயன உற்சவம் நேற்று மாலை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் தொடங்கியது. இந்த காலத்தில் திருமலை ஜீயங்கார்களால் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும்.

    இந்த பாராயணம் வழக்கமாக தனுர் மாசத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்னால் தொடங்கும். அதில் முதல் 11 நாட்கள் `பகல்பத்து' என்றும் மீதமுள்ள 10 நாட்கள் `இரவு பத்து' என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 22-ந்தேதி கண்ணிநுண் சிறுதாம்பு, 23-ந்தேதி ராமானுஜ நூற்றந்தாதி, 24-ந்தேதி வராகசாமி சாத்துமுறை, 25-ந்தேதி ஆத்யாயன உற்சவத்துடன் நிறைவடைகிறது.

    • சனாதன தர்மத்தில் பசு மிகவும் முக்கியமானது.
    • கோபூஜை முப்பெரும் தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும்.

    திருப்பதி:

    கார்த்திகை மாதத்தில் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் விஷ்ணு பூஜைகளின் ஒரு பகுதியாக திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று கோபூஜை சாஸ்திர பூர்வமாக நடந்தது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து 10 மணி வரை நடந்த கோபூஜையை உலக பக்தர்களின் நலனுக்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பினர்.

    முன்னதாக ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்களான வேணுகோபாலசாமி, ருக்மணி மற்றும் சத்யபாமாவை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர். அங்கு, வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றுகையில், சனாதன தர்மத்தில் பசு மிகவும் முக்கியமானது. கோபூஜை முப்பெரும் தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும் என்றார்.

    முன்னதாக கார்த்திகை விஷ்ணு பூஜை சங்கல்பம், பிரார்த்தனை சூக்தம், விஷ்ணு பூஜை மந்திர பாராயணம் நடந்தது. அப்போது உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு பசு மற்றும் கன்றுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து பிரசாதம் மற்றும் ஆரத்தி காண்பிக்கப்பட்டு, கோபிரதட்சணை செய்யப்பட்டது. நிறைவாக பிரார்த்தனை மற்றும் மங்களம் வேண்டி கோபூஜை முடிந்தது. அதில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்கள் 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்களுக்கு உணவு பால் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்கள் 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். இது தவிர நேரடி இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 4 ½ மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

    காத்திருப்பு அறைகளில் இருந்த பக்தர்களுக்கு உணவு பால் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பதியில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் அலிபிரி ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    டோக்கன் பெரும் பக்தர்கள் அன்றே தரிசனம் செய்துவிட்டு வரும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். சனி ஞாயிறு திங்கள் புதன் ஆகிய நாட்களில் 25 ஆயிரம் டோக்கன்கள், செவ்வாய் வியாழன் வெள்ளி ஆகிய நாட்களில் 15 ஆயிரம் டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    அலிப்பிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபாதை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஆனால் அவர்களுக்கு தரிசன டோக்கன் வழங்கப்படுவதில்லை.நடந்து செல்லும் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் 24 மணிநேரம் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்கின்றனர் .

    ஏற்கனவே வழங்கப்பட்டது போல நடைபாதையில் செல்பவர்களுக்கான திவ்ய தரிசனம் டோக்கன்களை மீண்டும் வழங்க வேண்டும் என நடைபாதை பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 63 ஆயிரத்து 443 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26,741 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.8 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×