search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள"

    • பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் கிடைக்கும்.
    • மேயரின் செயலால் சிறுமி நன்றாக படித்து தலைமை பண்பு உயரும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி 43-வது வார்டு சோழன் நகரில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 15-வது நிதிக்குழு சார்பில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

    இன்று அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    திறப்பு விழாவிற்கு வந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தான் ஆள்துளை கிணறை தொடங்கி வைக்காமல் அந்தப் பகுதியை சேர்ந்த பள்ளி சிறுமி ஐஸ்வர்யா என்பவரை ஆழ்துளை கிணறை தொடங்கி வைக்க செய்தார்.

    தொடர்ந்து அந்த சிறுமியை ஊக்கப்படுத்தி நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேயர் சண். ராமநாதனின் இந்த செயலை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வரவேற்று பாராட்டினர்.

    மேலும் மேயரின் செயலால் சிறுமி நன்றாக படித்து தலைமை பண்பு உயரும் என்றனர்.

    தொடர்ந்து சிறுமிக்கு ஐஸ்வர்யா என்று தமிழில் பெயர் வைத்ததற்காக அவரது பெற்றோரை மேயர் சண் ராமநாதன் பாராட்டினார்.

    இந்த புதிய ஆழ்துளை கிணறு மூலம் சோழன் நகர், பாலாஜி நகர் பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் கிடைக்கும்.

    இதையடுத்து அந்தப் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்து உடனே நிறைவேற்றுவதாக மேயர் சண். ராமநாதன் உறுதியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், கவுன்சிலர் ஹைஜாகனி, ஒப்பந்ததாரர் பாரி, குழாய் பொருத்துனர் பிரபாகர், 43- வது வார்டு செயலாளர் ராஜரத்தினம் என்ற ஜித்து, பகுதி பிரதிநிதி வாசிம்ராஜா, 45-வது வார்டு செயலாளர் சுரேஷ் ரோச் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×