search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலாஷேத்ரா விவகாரம்"

    • கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அளிக்கப்பட்டது.
    • இதையடுத்து பேராசிரியர் ராஜபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகாரை அடுத்து இது தொடர்பாக பேராசிரியர் ராஜபத்மன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், கலாஷேத்ரா நிறுவனத்தின் உட்புகார் விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் அஜிதா விலகியுள்ளார்.

    விசாரணைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கலாஷேத்ராவில் நடைபெறும் சமீபத்திய நிகழ்வுகள், எழுந்துள்ள பிரச்னைகளுக்கு நிர்வாகம் தந்த பதிலால் மிகவும் அதிருப்தி அளிப்பதாக அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

    தற்போதைய சூழலில் மாணவர்களின் அதிருப்தியால், விசாரணை குழு உறுப்பினர் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    வழக்கறிஞர் அஜிதா, கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளையில் கடந்த 4 ஆண்டுகளாக உட்புகார் விசாரணைக் குழுவின் உறுப்பினராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது பேச்சுக்கு கட்டுப்படாத மாணவிகளை பழி வாங்கும் வகையிலும் ஹரிபத்மன் நடந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
    • கேரள மாணவியிடம் ஹரிபத்மன் தகாத முறையில் பேசியது பற்றிய விவரங்களை 5 மாணவிகளும் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன், கேரள மாணவியின் பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பேராசிரியர் ஹரிபத்மன், தன்னிடம் அத்துமீறி பேசியதாகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய ஆதாரங்களை திரட்டினர். இதைத்தொடர்ந்தே ஹரி பத்மன் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது.

    கேரள முன்னாள் மாணவி அளித்த புகாரில் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்பதும், ஹரிபத்மன் காதல் மன்னனாக வலம் வந்ததும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

    முன்னாள் மாணவியின் தோழிகள் 5 பேரிடம் கேரளாவில் நடத்தப்பட்ட விசாரணையும், அவர்கள் அளித்துள்ள பரபரப்பு சாட்சியங்களுமே ஹரி பத்மனை வசமாக சிக்க வைத்துள்ளது.

    கேரள மாணவியிடம் ஹரிபத்மன் தகாத முறையில் பேசியது பற்றிய விவரங்களை 5 மாணவிகளும் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்கள். நான் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன். வீட்டுக்கு வருகிறாயா? என்று கேட்டு ஹரிபத்மன் சல்லாப முயற்சியில் ஈடுபட்டதும், கழிவறைக்கு சென்று விட்டு திரும்பியபோது யாருடன் இருந்துவிட்டு வருகிறாய்? என்று மாணவியிடம் ஹரிபத்மன் கேட்டதும் உண்மைதான் என்று மாணவியின் தோழிகள் தெரிவித்துள்ளனர். இது போன்று பல மாணவிகளிடம் ஹரிபத்மன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனனர். ஹரிபத்மன் மாணவிகளிடம் எப்படி நடந்து கொள்வார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தனது பேச்சுக்கு கட்டுப்படாத மாணவிகளை பழி வாங்கும் வகையிலும் ஹரிபத்மன் நடந்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

    வெளியில் நிகழ்ச்சிகளுக்காக அழைத்துச் செல்லும்போது தேவையில்லாமல் பேசி மனக்கஷ்டத்தை ஏற்படுத்துவதையும், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பேராசிரியர் ஹரிபத்மன் உடல் ரீதியாக தொல்லை கொடுக்கும் எண்ணத்திலேயே மாணவிகளுடன் ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுவும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து ஹரிபத்மனை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஹரிபத்மனை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாணவிகளின் புகார் அடிப்படையில் உதவிப்பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 200 பக்கங்களுக்கு மேல் கொண்ட விசாரணை அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் குமாரி கொடுத்தார்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத்தரப்படுகின்றன.

    இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாணவிகள் போராட்டம் நடத்தினர். போலீசிலும் புகார் அளித்தனர்.

    மாணவிகளின் புகார் அடிப்படையில் உதவிப்பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி, அந்தக் கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் குமாரி நேற்று மாலை தலைமைச் செயலகத்திற்கு வந்து தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து பேசினார். அப்போது 200 பக்கங்களுக்கு மேல் கொண்ட விசாரணை அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் குமாரி கொடுத்தார்.

    இதுபற்றி குமாரியிடம் கேட்டபோது, பாலியல் புகார்கள் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையை அறிக்கையாக தயாரித்து தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

    • கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.
    • கலாஷேத்ரா நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு புகார்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஹரிபத்மன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேரள மாணவியின் தோழிகள் 5 பேரிடம் விசாரணை நடத்தி போலீசார் பல்வேறு தகவல்களை திரட்டினர். அப்போது 5 மாணவிகளும் ஹரிபத்மனின் பாலியல் லீலைகள் தொடர்பாக சாட்சியம் அளித்தனர். இதனை வாக்குமூலமாக பதிவு செய்த பிறகே ஹரிபத்மன் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சென்னை மாதவரம் பகுதியில் தோழி வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மன் நேற்று காலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. கலாஷேத்ரா அறக்கட்டளை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    கலாஷேத்ரா வளாகத்தில் நடந்த சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதற்கு ஆலோசனை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண், டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகி யோர் விசாரணை குழுவில் இடம் பெற்று உள்ளனர். பேராசிரியர் ஹரிபத்மன் இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு உள்ளார்.

    கலாஷேத்ரா நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு புகார்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை குழுவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் கலாஷேத்ரா, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழு ஈடுபாட்டுடன் உள்ளது.

    இவ்வாறு கலாஷேத்ரா அறக்கட்டளை அறிவித்து உள்ளது.

    இதை தொடர்ந்து இந்த குழுவினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

    • மாணவிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
    • பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது பரபரப்பு புகார்களை சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று மாணவிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாதவரத்தில் உள்ள நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரி பத்மன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் ஹரி பத்மன் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    4 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் வாய்மொழியாக தகவல் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து மாணவிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

    • பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் இன்று கைது செய்யப்பட்டார்.
    • கலாஷேத்ரா கல்லூரிக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது பரபரப்பு புகார்களை சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று மாணவிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் இன்று கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக கல்லூரிக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கல்லூரிக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜர் ஆனார்கள்.
    • மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையை அறிக்கையாக இன்று அல்லது நாளை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளேன்.

    சென்னை:

    கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகளிடம் அவர் எழுத்துப் பூர்வமாக பல்வேறு தகவல்களை திரட்டினார். மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாக கலாஷேத்ரா இயக்குனரான ரேவதி ராமச்சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

    இதனை ஏற்று ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜர் ஆனார்கள். அப்போது கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் தெரிவித்துள்ள புகார்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை மகளிர் ஆணைய தலைவி குமரி கேட்டு உள்ளார். இருவரும் ஆஜராகிவிட்டு சென்ற பிகு மகளிர் ஆணைய தலைவி குமரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலாஷேத்ராவில் தங்களிடம் பாலியல் புகார் எதுவும் வரவில்லை என்று இயக்குனர் தெரிவித்தார். கல்லூரியில் மாணவிகள் நலனுக்காக அமைக்கப்பட்டு உள்ள கமிட்டியின் பணி என்ன? அது செயல்படுத்தப்படுவது எப்படி? என்பது தொடர்பாக ஆவணங்களை கேட்டு உள்ளேன். நாளை மறுநாள் யாரிடமாவது கொடுத்து அனுப்பினால் போதும் என்றும், நீங்கள் நேரில் வர தேவையில்லை என்றும் கூறியுள்ளேன். மாணவிகளுக்கு ஆன்லைன் தேர்வு பிடிக்கவில்லை. நேரடி தேர்வையே விரும்புகிறார்கள் என்று கலாஷேத்ரா இயக்குனரிடம் தெரிவித்தேன். அவர் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து மாணவிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்.

    பாலியல் புகாருக்கு உள்ளான 3 நபர்களையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளேன்.

    இதுவரை மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையை அறிக்கையாக இன்று அல்லது நாளை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு குமரி தெரிவித்தார்.

    • கேரளாவில் 5 முன்னாள் மாணவிகள், சென்னையில் 2 மாணவிகள் என இதுவரை 7 மாணவிகள் ஹரிபத்மனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    • மேலும் 4 மாணவிகள் ஹரிபத்மன் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன் வந்துள்ளனர்.

    சென்னை:

    கலாசேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக கேரள முன்னாள் மாணவிகள் 5 பேர் அளித்துள்ள சாட்சியமே அவருக்கு எதிராக திரும்பி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹரிபத்மன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உண்மைதான் என்று முன்னாள் மாணவிகள் வாக்குமூலம் அளித்திருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

    கேரளாவில் 5 முன்னாள் மாணவிகள், சென்னையில் 2 மாணவிகள் என இதுவரை 7 மாணவிகள் ஹரிபத்மனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இன்று மேலும் 4 மாணவிகள் ஹரிபத்மன் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன் வந்துள்ளனர் என்றும் அதிகாரி கூறினார்.

    • கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும்.
    • கலாஷேத்ராவில் புகார் பிரிவு இயங்கியது குறித்து எந்த ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.

    சென்னை:

    கலாஷேத்ரா இயக்குனரிடம் விசாரணை நடத்தியபின் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும்.

    மாணவிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். நான் நேரிலும் சந்திப்பேன்.

    பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புகார்கள் ஆன்லைன் மூலமும் வந்துள்ளன. புகார்கள் மற்றும் ஆய்வு அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்படும். ஆதாரத்தின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    ஐசிசி கமிட்டியின் ஆவணங்களை கேட்டுள்ளேன்.

    கலாஷேத்ராவில் புகார் பிரிவு இயங்கியது குறித்து எந்த ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலாசேத்ரா முன்னாள் மாணவிகள் 5 பேரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • மாதவரத்தில் உள்ள அந்த நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை கற்று வருகிறார்கள்.

    இந்த கல்லூரியில் பணி புரிந்து வரும் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் 3 நடன உதவியாளர்கள் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அடையாறு மகளிர் போலீசில் அவர் அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன், உதவி கமிஷனர்கள் நெல்சன், சுதர்சன் மற்றும் தனிப்படை போலீசார் கேரள முன்னாள் மாணவி அளித்த புகாரின் உண்மை தன்மை குறித்து விரிவாக விசாரணை நடத்தினர். கேரள மாணவி அளித்திருந்த புகாரில் ஹரிபத்மனின் பாலியல் லீலைகள் பற்றி தன்னுடன் படித்த தோழிகள் 5 பேருக்கு தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து கேரள மாணவிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டவும், அது தொடர்பான உண்மை தன்மையை கண்டறியவும் முடிவு செய்த தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கலாசேத்ரா முன்னாள் மாணவிகள் 5 பேரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேராசிரியர் ஹரி பத்மனின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்பது தொடர்பாக சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மாணவிகள் பேராசிரியர் ஹரிபத்மன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்.

    இதனை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் சென்னையில் முன்னாள் மாணவிகள் சிலரிடம் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

    இப்படி போலீஸ் விசாரணையில் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் போலீசுக்கு கிடைத்தன. இதையடுத்து பேராசிரியர் ஹரி பத்மன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த ஹரிபத்மன் 2 நாட்களுக்கு முன்பே சென்னை திரும்பினார்.

    மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்திய பிறகே ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதன்படி வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்கள் போலீசுக்கு முழுமையாக கிடைத்தன.

    இதையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் மீதான பிடி இறுகியது. அவரை கைது செய்ய போலீசார் தேடினர். அப்போது ஹரிபத்மன் ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய பிறகு வடசென்னை பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மாதவரத்தில் உள்ள அந்த நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். நண்பரின் வீட்டில் இருந்து அடையாறு தனிப்படை போலீசார் ஹரி பத்மனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    ரகசிய இடத்தில் வைத்து ஹரிபத்மனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது ஹரிபத்மன் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இதனை போலீசார் வழக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து பேராசிரியர் ஹரிபத்மன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதன் பிறகு கூடுதல் விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் பேராசிரியர் ஹரிபத்மனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் கலாசேத்ராவில் நடைபெற்ற பாலியல் விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை தொடர்ந்து நேற்று மாலையிலேயே ஹரி பத்மன் விசாரணைக்காக போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
    • ஹரி பத்மனின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறியவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கவின்கலை கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி, பேராசிரியர் ஹரி பத்மன் மீது எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் வழக்கு விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மாணவி அளித்திருக்கும் புகாரின் பேரில் 2019-ம் ஆண்டு பாலியல் சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் பேராசிரியர் உடனடியாக கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேவையான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். அதன்பின்னரே கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்' என்றும் தெரிவித்தனர்.

    கேரள மாணவி அளித்த புகாரில் தன்னுடன் படித்த 5 மாணவிகள் பற்றியும், அவர்களிடம் விசாரித்தால் பேராசிரியர் பற்றி பல்வேறு தகவல்கள் தெரியவரும் என்றும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். கேரளாவை சேர்ந்த 5 முன்னாள் மாணவிகளிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    நேற்று மாலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற தனிப்படை போலீசார் கேரள மாணவிகள் 5 பேரிடமும் இன்று விசாரணை நடத்தினர். அப்போது கலாஷேத்ராவில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மாணவிகள் பரபரப்பான தகவல்களை தெரிவித்து உள்ளனர்.

    இதனை சென்னை தனிப்படை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். கேரள மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பேராசிரியர் ஹரி பத்மன் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை திரட்டி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் விரைவில் சென்னை திரும்பும் போலீசார் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கலாஷேத்ரா விவகாரத்தில் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்கள்.

    இதற்கிடையே பேராரியர் ஹரிபத்மன் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை தொடர்ந்து நேற்று மாலையிலேயே அவர் விசாரணைக்காக போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் பேராசிரியர் ஹரி பத்மன் இன்று காலை வரையில் சென்னைக்கு வரவில்லை. ஐதராபாத்திலேயே அவர் தலைமறைவாக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    ஹரி பத்மனின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறியவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து பேராசிரியர் ஹரி பத்மன் மீதான பிடி இறுகி உள்ளது.

    இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

    • பாலியல் தொல்லை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஹரி பத்மன் தலைமறைவாகியுள்ளார்.
    • கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஹரி பத்மன் ஐதராபாத் சென்றிருந்தார்.

    சென்னை:

    மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியது. அதன்பின்னர் இந்த விவகாரம் அடங்கியது. இந்த நிலையில் இந்த கல்லூரியில் மீண்டும் பாலியல் தொல்லை பிரச்சினை எழுந்தது.

    பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி விஜயகுமாரி நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் கலாஷேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் சென்னை அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு அளித்தார்.

    அதில், 'கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்தார்' என்று கூறி இருந்தார்.

    அவரது புகார் மனு தொடர்பாக அடையார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது 509 இந்திய தண்டனை சட்டம் (வார்த்தை ரீதியாக பாலியல் துன்புறுத்தல்), 354 ஏ (உடையை வைத்து வர்ணிப்பது) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    இந்த 3 பிரிவுகளும் கடுமையான சட்டப்பிரிவுகள் ஆகும். இந்த வழக்குகளின் கீழ் பேராசிரியரை ஹரிபத்மனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். அவர், ஐதாராபாத்தில் இருப்பதாக கூறப்பட்டது. எனவே தனிப்படை அமைத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் முனைப்பு காட்டினர்.

    இந்நிலையில், பாலியல் தொல்லை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஹரி பத்மன் தலைமறைவாகியுள்ளார்.

    கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த அவர் சென்னை திரும்பிய நிலையில், தலைமறைவாகியுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

    ×