search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய் சுதர்சன்"

    • இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.
    • சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தை கண்டு மகிழ்ந்த சச்சின்.

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

    குஜராத் பேட்டிங்கில், சுப்மான் கில்தான் அதிகமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார் சாய் சுதர்சன்.

    இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தை இந்திய முன்னாள் நட்சத்திர வீரரும், லெஜண்ட்டுமான சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், "இன்றிரவு என் கண்களுக்கு விருந்து படைத்தார் சாய் சுதர்சன்.. நன்றாக விளையாடினாய் சாய்" என்று பதிவிட்டுள்ளார்.

    • அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
    • அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும்.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்தது.

    குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சகா 14 (7), சுப்மன் கில் 14 (13), கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே தடுமாறியது.

    அந்த நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடனும் நிதானமாகவும் ரன்களை குவித்து சரிவை சரி செய்தார். 

    மேலும் அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 62* (48) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் சாய் சுதர்சன் இன்னும் ஓரிரு வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க முடியும் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும். கடந்த 15 நாட்களில் அவர் செய்து வரும் நல்ல பேட்டிங் அனைத்தும் அவருடைய கடின உழைப்பை உங்களுக்கு காட்டுகிறது.

    இதே போல செயல்படும் பட்சத்தில் இன்னும் 2 வருடங்களில் அவர் தன்னுடைய ஐபிஎல் அணிக்கு இன்னும் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய கிரிக்கெட்டுகாக முக்கிய பங்காற்றுவார் என்று கணிக்கிறேன்.

    என பாண்ட்யா கூறினார்.

    அவர் கூறுவது போல தற்போது இளம் வீரராக அனுபவமின்றி இருக்கும் சாய் சுதர்சன் இன்னும் நாட்கள் செல்ல செல்ல நல்ல அனுபவத்தை கற்று தன்னைத் தானே மெருகேற்றி இந்தியாவுக்கு விளையாடுவார் என்று உறுதியாக நம்பலாம். முன்னதாக சமீப காலங்களாகவே பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காத சென்னை அணி நிர்வாகம் இந்த போட்டியில் குஜராத்துக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த சாய் சுதர்சன் – விஜய் சங்கர் போன்ற தமிழக வீரர்களின் திறமையை உணர வேண்டும் என தமிழக ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை அணியில் இம்பேக்ட் பிரேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார்.
    • குஜராத் அணியில் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார்.

    ஐபிஎல் 16-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் ஏதாவது புதிய விதிமுறை அறிமுகத்திற்கு வரும். அந்த வகையில் இந்த முறை 'இம்பேக்ட் பிளேயர்' என்கிற முறையை அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த புதிய விதியின் படி, டாஸ் போடும் போது வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன், மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். அந்த 5 பேரில் இருந்து ஒருவரை, ஆட்டத்தின் நடுவில் களமிறக்கலாம்.

    அது பந்து வீச்சாக இருந்தாலும் சரி, பேட்டிங் வரிசையாக இருந்தாலும் சரி, அது அந்த அணியின் விருப்பம். அதே நேரத்தில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே, கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரை களத்தில் இறக்க முடியும். ஒருவேளை 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால், ஐந்தாவதாக மற்றொரு வெளிநாட்டு வீரரை 'இம்பேக்ட் ப்ளேயராக' களத்தில் இறக்க முடியாது.

    இந்த புதிய விதியை தன்னுடைய முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயன்படுத்தியது. குஜராத்திற்கு எதிராக களமிறங்கிய சென்னை அணியின் அம்பாதி ராயுடு பேட்டிங் செய்த நிலையில், சென்னை அணி பீல்டிங் செய்யும் போது, அவருக்கு பதிலாக 'இம்பேக்ட் பிரேயர்' முறையில் துஷார் தேஷ்பாண்டே மாற்றப்பட்டார்.

    3.2 ஓவர்களை வீசிய அவர், 51 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். 15.30 எக்கானமியை பெற்றார். இவ்வாறு களம் கண்டதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் 'இம்பேக்ட் ப்ளையர்' என்கிற பெருமையை பெற்றார் தேஷ்பாண்டே.

    இதேபோல குஜராத் அணியிலும் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். குஜராத் அணி பீல்டிங் செய்யும் போது சிக்சரை தடுக்க சென்ற வில்லியம்சனுக்கு காலில் அடிப்பட்டதால் அவர் பாதிலேயே வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் பேட்டிங் செய்தார்.

    அவர் 17 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருவரும் சொல்லி கொள்ளும் அளவுக்கு எந்த இம்பேக்ட்டும் கொடுக்கவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

    ×