search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மெட்ரோ ரெயில்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு இளம் ஜோடி முத்த மழை பொழிவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • வைரலாக பரவும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் சிலர் அந்த ஜோடியை வெட்கமற்றவர்கள் என விமர்சித்துள்ளனர்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொது இடம் என்று கூட பாராமல் சில பயணிகள் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபட்டது, சில பெண்கள் படுகவர்ச்சிகரமாக உடை அணிந்து சென்றது போன்ற வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் தற்போது டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு இளம் ஜோடி முத்த மழை பொழிவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், மெட்ரோ ரெயிலுக்குள் தரையில் அமர்ந்திருக்கும் ஒரு வாலிபரின் மடியில் படுத்திருக்கும் இளம்பெண்ணை அந்த வாலிபர் முத்தமிட்டு கொண்டே இருக்கிறார். வைரலாக பரவும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் சிலர் அந்த ஜோடியை வெட்கமற்றவர்கள் என விமர்சித்துள்ளனர்.

    மேலும் இந்த ஜோடி மீது மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளனர். இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகமும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலிலும் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என கூறி உள்ளது.

    • டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் அரைகுறை ஆடையில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் அதன் பயணிகள் சமூக அந்தஸ்தை பேணும் வகையில் கண்ணியமான ஆடைகளை அணிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    டெல்லி:

    டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் அரைகுறை ஆடையில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த இளம்பெண் நீச்சல் உடை அணிந்து டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    அந்த வீடியோவில் இளம் பெண் ஒரு இருக்கையில் பெரிய கருப்பு நிற பையுடன் அமர்ந்திருந்தார். அவர் எழுந்து நிற்கும்போதுதான் அவர் அரைகுறை ஆடை அணிந்து இருப்பது தெரிய வந்தது. அருகில் இருந்தவர்கள் இதனை கண்டும் காணாமல் இருந்தனர். சிலர் முகம் சுளித்தனர். வழக்கம் போல இந்த செயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத ளங்களில் கருத்து மோதல் நடந்து வருகிறது.

    அதில் ஒருவர், 'அவர் அருகில் இருந்த பெண்ணின் நிலையையும், சுற்றி இருந்த ஆண்களின் மனநிலையையும் எண்ணிப்பார்க்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர் 'மெட்ரோ ரெயிலில் ஏ.சி. வேலை செய்யவில்லை போல' என்று கிண்டலடித்துள்ளார்.

    இப்படி பலரும் பல கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் அதன் பயணிகள் சமூக அந்தஸ்தை பேணும் வகையில் கண்ணியமான ஆடைகளை அணிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இதுபோன்ற ஆடைகள் அணிவதன் மூலம் சக பயணிகளின் உணர்வுகளை அவமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் சட்டத்தின்படி பிரிவு 59-ன் கீழ் அநாகரீகமான ஆடை அணிந்து பயணிப்பது குற்றமாகும் என்று எச்சரித்துள்ளது.

    மேலும் தான் விரும்பிய ஆடை அணிவது தனிப்பட்ட சுதந்திரம்தான். ஆனாலும் பொது போக்குவரத்தில் இதுபோன்ற அநாகரீகமான ஆடை அணிந்து வருவதை தவிர்க்குமாறு டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×