search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயர்மேன் பலி"

    • மின்வயரை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார்.
    • படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் கர்ணம் பழனிவேல்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் கேசவன்(45). இவர் சுருளிபட்டி மின்வாரியத்தில் வயர்மேனாக வேலைபார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த மூக்கம்மாள் என்பவரது வீட்டிற்கு மின்சப்ளை வரவில்லை.

    இதனை சரிபார்க்க கேசவன் சென்றார். மின்வயரை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால் வழியிலேயே கேசவன் இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிரான்ஸ்பார்மரில் ஏறியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் ரவி (வயது 32).

    இவர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அபய மண்டபம் அருகில் உள்ள ஒரு வீட்டில் மின் இணைப்பு பழுது ஏற்பட்டு உள்ளதாக அலுவலகத்திற்கு போன் வந்தது.

    பின்னர் அந்த வீட்டின் மின் இணைப்பை சரி செய்ய ரவி அந்த பகுதிக்கு சென்று அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி யுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×