search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிங்கு சிங்"

    • டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள்.
    • ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும்.

    மும்பை:

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் 15 பேர் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது.

    இந்த அணியில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. அது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இந்திய அணியின் நடு வரிசையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட் செய்யலாம். நிச்சயம் திலக் வர்மாவை மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாட வைக்கும் யோசனை அணிக்கு இருக்காது. அவர் ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு பேட் செய்ய வருகிறார் என்றால் அதற்கு ரிங்கு சிங் தான் சிறந்த தேர்வாக நிச்சயம் இருப்பார்.

    டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள். அது தான் அவர்கள் பேட் செய்ய ஏற்ற இடமும் கூட. சூர்யகுமார் யாதவ் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளையாடுவார்.

    ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும். அந்த இடத்திற்கு திலக் வர்மா, சரி வருவாரா என்பது தான் எனது கேள்வி. அவர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர். இதை கடந்த ஐபிஎல் சீசனில் நாம் பார்த்திருந்தோம். அதே சீசனில் கேமரூன் கிரீன் டாப் ஆர்டரில் ஆடி இருந்தார். அதனால் திலக் பின்வரிசையில் ஆடினார். ஆனால், இந்திய அணியில் அவர் பின்வரிசையில் ஆடுவதற்காக தேர்வாகி இருந்தால் நிச்சயம் அதற்கு ரிங்கு தான் சரியான நபர்.

    என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார்.
    • முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் கடைசி லீக் ஆட்டமாகும். இதனால் போட்டி முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

    இதனையடுத்து, டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார். பிறகு டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மீது வீசினார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் டோனியை பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.

    டோனி மைதானத்தில் தன் அணியினருடன் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

    இவரையடுத்து, கொல்கத்தா வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் தன் அணி சட்டையை கொண்டு வந்து டோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றனர்.

    சமீபத்தில் டோனி இந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் விடை பெற்றுவிடுவாரோ என்று சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்களுக்கு, திடீரென்று லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என்று வர்ணனையாளரிடம் தெரிவித்து ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

    • இன்று அவர் இருக்கும் இடத்தை அடைய மிகத்தீவிரமாக உழைத்திருக்கிறார்.
    • இளம் வீரர்களுக்கும் சிறுவர்களுக்கும் அவர் வாழ்க்கை மிகச்சிறந்த பாடம்.

    ஐபிஎல் 16-வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் டாப் 2 இடங்களில் வலுவாக இருப்பதால் அவை இரண்டும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். எஞ்சிய 2 இடங்களுக்கு டெல்லி கேப்பிட்டள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த சீசனில் சில இளம் வீரர்கள் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளனர். திலக் வர்மா, ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா ஆகிய வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடிவருகின்றனர். இவர்களில் அபிஷேக்கை தவிர மற்ற மூவரும் இந்திய அணியில் ஆடுமளவிற்கு வளர்ந்துவிட்டனர். இவர்கள் மூவரும் விரைவில் இந்திய அணியில் ஆடுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

    இந்நிலையில் கேகேஆர் வீரர் ரிங்கு சிங் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

     

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது:-

    ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் மிக விரைவில் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு இன்னும் ரொம்ப தூரம் இல்லை. இன்று அவர் இருக்கும் இடத்தை அடைய மிகத்தீவிரமாக உழைத்திருக்கிறார்.

    அவர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்குத்தான் முழு கிரெடிட். இளம் வீரர்களுக்கும் சிறுவர்களுக்கும் ரிங்கு சிங்கின் வாழ்க்கை மிகச்சிறந்த பாடம்.

    என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    • கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
    • அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டி செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

    பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆண்ட்ரே ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அதிரடி காரணமாக அந்த அணி திரில்லிங்கான வெற்றியை பெற்றது.

    அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு புதிய பினிஷர் கிடைத்து விட்டார் என ரசல் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியில் பனியின் தாக்கம் இருந்ததால் பவுலர்கள் கிரிப் செய்வது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் பவுலர்கள் லென்த்தை தவறவிட்டதால் எங்களால் சிக்சர்கள் அடிக்க முடிந்தது. அதோடு கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்றால் கூட அடிக்க முடியும் என்று உறுதியாக இருந்தோம். நான் அடித்த சில சிக்ஸர்கள் இங்கு மிகவும் எளிதாகவே இருந்தது. அதனால் போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

    ஆனால் கடைசியில் நான் ரன் அவுட்டாகி வெளியேறி விட்டேன். இருந்தாலும் இந்த வருடம் எங்களுக்கு புதிய பினிஷராக ரிங்கு சிங் கிடைத்துள்ளார். நான் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட போது பந்தை ஒருவேளை தவறவிட்டால் ஒரு ரன் ஓடி வாருங்கள் என்று ரிங்கு சிங் என்னிடம் சொன்னார். நானும் பந்தை அடிக்க நினைத்து தவறவிட்டதால் ஓடிவந்து ரன் அவுட் ஆகி விட்டேன்.

    இருந்தாலும் நிச்சயம் கடைசி பந்தில் ரிங்கு சிங் போட்டியை முடித்து விடுவார் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஏனெனில் இந்த சீசன் முழுவதுமே அவர் விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த சீசனில் அவர் எங்கள் அணியின் சிறந்த பினிஷராக இருந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் படைத்துள்ளது.
    • கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த டோனியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.

    பின்னர் கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணி கடைசி 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் தனி ஒருவராக போராடி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். ஜோஸ்வா வீசிய 19-வது ஓவரில் ரிங்கு சிங் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்டார். கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் பந்து வீசினார். உமேஷ் யாதவ் முதல் பந்தில் 1 ரன் எடுத்தார். அதன் பிறகு 5 பந்துகளில் 5 சிக்சர்களை பறக்க விட்டு சாதனை படைத்தார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் படைத்துள்ளது. 20-வது ஓவரில் 30 ரன்கள் அடித்ததன் மூலமாக உலக டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரிங்கு சிங் படைத்துள்ளார். கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த டோனியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

    ரிங்கு சிங் - 30 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்)

    எம் எஸ் தோனி - 24 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

    நிக்கோலஸ் பூரன் - 23 (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ரோகித் சர்மா - 22 (டெக்கான் சார்ஜஸ்)

    எம் எஸ் தோனி - 22 (பஞ்சாப்)

    ஒரே ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:

    கிறிஸ் கெயில் - ராகுல் சர்மா ஒவர் - 2012

    ராகுல் திவேதியா - ஷெல்டான் காட்ரெல் ஒவர் - 2020

    ரவீந்திர ஜடேஜா - ஹர்ஷல் படேல் ஓவர் - 2021

    மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் - ஷிவம் மவி ஓவர் - 2022

    ரிங்கு சிங் - யாஷ் தயாள் ஓவர்- 2023

    • கடைசி வரை நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தேன்.
    • கடந்த ஆண்டு லக்னோவுக்கு எதிராக இதுபோன்ற இன்னிங்ஸ் விளையாடியதால் என்னால் அதிரடியாக ஆட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார்.

    அகமதாபாத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது.

    205 ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணிக்கு ஆட்டத்தின் கடைசி ஓவரில் 29 ரன் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட் இருந்தது. ரிங்கு சிங், உமேஷ் யாதவ் களத்தில் இருந்தனர்.

    யாஷ்தயாள் கடைசி ஓவரை வீசினார். உமேஷ் யாதவ் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். 5 பந்தில் 28 ரன் என்ற நிலை இருந்தது. இதை எடுக்க முடியாமல் கொல்கத்தா அணி தோற்று விடும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை நிகழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார். மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற ரிங்கு சிங் கூறியதாவது:-

    நான் 5 சிக்சர்களை அடிப்பேன் என்று நினைக்கவில்லை. தொடர்ந்து அடித்தேன். எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. நாங்கள் வெற்றி பெற்றோம். இதற்காக நான் அதிகம் யோசிக்கவில்லை. கடைசி வரை நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தேன்.

    கடந்த ஆண்டு லக்னோவுக்கு எதிராக இதுபோன்ற இன்னிங்ஸ் விளையாடியதால் என்னால் அதிரடியாக ஆட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. கேப்டனும் என்னை ஊக்குவித்தார். நான் அடித்த ஒவ்வொரு பந்தும் மைதானத்துக்கு வெளியே அர்பணிக்கப்பட்டது.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    ரிங்கு சிங் இந்த ஆட்டத்தில் 21 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் அடித்து 48 ரன் எடுத்தார்.

    25 வயதான அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கிரிக்கெட்டுக்குள் நுழைந்தவர் ஆவார். சிறு வயதிலேயே துப்புரவு பணியாளராக வேலை செய்து இருந்தார்.

    16 வயதில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி முதல் ஆட்டத்திலேயே 83 ரன்களை எடுத்தார். 2017-ம் ஆண்டு ஐ.பி.எல்.லில் பஞ்சாப் அணிக்காக அறிமுகம் ஆனார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இடம் பெற்றார். அதில் அவர் திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அணி லெவனில் தொடர்ந்து இடம் பெற்றார்.

    தற்போது தனது அதிரடியான ஆட்டத்தால் நம்ப முடியாத வெற்றியை ரிங்கு சிங் பெற்றுக் கொடுத்து அனைவரது உள்ளங்களிலும் இடம் பெற்று உள்ளார்.

    ×