search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பன் யானையை"

    • 4-வது முறையாக கும்கி யானைகளை வரவழைத்து உள்ளனர்.
    • வழித்தடங்களை வனத்துறையினர் என்று ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு கருப்பன் என்ற யானை வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    தோட்ட காவலுக்கு இருந்த 2 விவசாயிகளை மிதித்து கொன்றுள்ளது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி இருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்ன த்தம்பி, ராஜவர்தன் என 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.

    கும்கி யானைகள் கருப்பன் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தன. ஆனால் கருப்பன் யானை மீண்டும் காட்டுக்குள் இருந்து வெளியேறி தோட்டத்தை நோக்கி படை எடுக்க தொடங்கியது.

    இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து மீண்டும் அரிசி ராஜா, சலீம், கபில்தேவ் என 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

    அப்போது கும்கி யானைகள் கருப்பன் யானையை சுற்றி வளைக்க மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் 4 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை மயங்கவில்லை. தப்பித்து விட்டது.

    இதனால் கும்கி யானைகள் மீண்டும் அழைத்துச்செ ல்லப்பட்டன.

    அதன் பின்னர் கருப்பன் யானை காட்டில் இருந்து வெளியேறி விவசாயி தோட்டங்களை சேதம் செய்யத் தொடங்கியது. இதனால் தாளவாடி விவசாயிகள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் தெப்ப காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என 2 கும்கி யானைகள் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி தாளவாடிக்கு அழைத்து வரப்பட்டன.

    அதை த்தொடர்ந்து 25-ந் தேதி கருப்பன் யானைக்கு 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டன. ஆனால் அப்போ தும் யானை தப்பித்து சென்று விட்டது.

    தொடர்ந்து கருப்பன் யானை அட்டகாசம் அதிகரித்து வருவதால் 4-வது முறையாக கும்கி யானைகளை கொண்டு கருப்பன் யாணையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

    இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து மாரியப்பன், சின்னத்தம்பி என்ற கும்கி யானைகள் லாரி மூலம் தாளவாடிக்கு கொண்டுவரப்பட்டன.

    தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கருப்பன் யானையை பிடிக்க 4-வது முறையாக வனத்துறை யினர் கும்கி யானைகளை வரவழைத்து உள்ளனர்.

    ஒரு வருடமாக வனத்துறையினருக்கு போக்கு கட்டி வரும் கருப்பன் யானையை இந்த முறை கண்டிப்பாக பிடித்தே ஆக வேண்டும் என வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள னர்.

    இதற்காக கருப்பன் யானை சொல்லும் வழித்த டங்களை வனத்துறையினர் என்று ஆய்வு செய்தனர். எந்தெந்த வழித்தடங்களில் கருப்பன் யானை வந்து செல்கிறது என்பதை வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனையடுத்து இன்று இரவு கருப்பு யானையை பிடிக்கும் பணி தொடங்க ப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்காக வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஒரு வருடமாக போக்கு காட்டி வரும் கருப்பன் யானை பிடிபடுமா? என தாளவாடி மக்கள் விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    ×