search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 மணி நேர வேலை நேரம் சட்டம்"

    • சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • 8 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை பறிக்கும் வகையில் 12 மணி நேர வேலை என ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அருணாபதியில் நடந்த ஆணவ படுகொலையை கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடக்கிற மாவட்டமாக உள்ளது. ஏற்கனவே சுவாதி-நந்திஸ் இருவரும் ஆணவக்கொலை செய்யப்பட்டார்கள். அண்மையில் கிருஷ்ணகிரி அருகே ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஜெகன்-சரண்யா இருவர் ஒரு சமூகத்திற்கு உள்ளே உச்சாதிக்குள் அடிப்படையில் ஜெகன் பட்டபகலில் படுகொலை செய்யப்பட்டார்.

    ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட சுபாஷ் ஆணவப்படுக்கொலை செய்யப்பட்டார். அதனை தடுக்க முயன்ற அவரது தாயார் கண்ணம்மாள் ஆகிய இருவரையும் சுபாஷின் தந்தை தண்டபாணி வெட்டி படுகொலை செய்தார். இதில் படுகாயம் அடைந்த அனுசியா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மூன்று சம்பவங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

    இந்திய அரசு ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை ஏற்ற வேண்டுமென தொடர்ந்து குரல் ஒலித்து வருகிறது.

    ஆனால் இந்திய அரசு சட்டம் இயற்றுவதில் தேக்கம், தயக்கம், இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் ஆணவக் கொலைகளை கொடூரமான கொலைகள் அதனை தடுக்க வேண்டும் என அதற்கான வழிகாட்டுதலை வழங்கி உள்ளது.

    ஆனால் ஆணவ கொலை தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை. தொடர்ந்து நடைபெறும் ஆணவக் கொலைகள் அதிர்ச்சி அளிக்கிறது.

    ஆணவப்படுக்கொலை தடுப்புச் சட்டம் வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது தி.மு.க. அரசு ஆணவ கொலை எதிரான தடுப்புச் சட்டத்தை கொண்டுவரவேண்டும் என தோழமைக் கட்சி என்கிற முறையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 8 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை பறிக்கும் வகையில் 12 மணி நேர வேலை என ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதாவிற்கு காங்கிரஸ் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற தோழமைக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இந்த நிலைப்பாடு தி.மு.க.வின் தொழிலாளர் நலனுக்கும், கொள்கைக்கு, எதிராக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 12 மணி நேரம் வேலை தொழிலாளர்கள் விரும்பினால் சூழல் அடிப்படையில் தொழிலாளர்களிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் பெறுவதற்கு ஏதுவாக ஒரு சட்ட மசோதா இருப்பது தொழிலாளர் சமூகத்திற்கு எதிரானது.

    இந்த சட்டம் திமுக மீதான நம்பகத் தன்மைக்கு எதிராக அமையும், நன்மதிப்பிற்கு ஊர் விளைவிக்கும், ஆகவே முதலமைச்சர் இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    தோழமைக் கட்சிகள் சார்பில் முதலமைச்சரை சந்தித்து இது குறித்து கருத்துக்கள் வலியுறுத்தி உள்ளோம். அனைத்து தோழமைக் கட்சிகளும் சேர்ந்து நேரில் சந்தித்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருவதால் வருகிற 24-ந்தேதி ஆலோசனை நடைபெறுகிறது.
    • தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்த சட்ட முன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்தில் இருந்து, தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்து இருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டு உள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்த திருத்தத்தால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருவதால் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மதியம் 3 மணிக்கு தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமை செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    ×