search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா ஆசிரியர்கள்"

    • யோகா ஆசிரியர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழரத வீதி பதஞ்சலி யோகா மையத்தில் நடைபெற்றது.
    • சுகாரார நிலையத்தில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.

    கடலூர்:

    தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரி யர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழரத வீதி பதஞ்சலி யோகா மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயாளர் காசிநாத துரை தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர வடிவேல், சுந்தரராஜன், கென்னடி, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ராதா, ஹெலன், மயிலாடு துறை மாவட்ட பொறுப் பாளர்கள் திருமுருகன், மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பின்னர் மாநில பொதுச் செயலாளர் காசிநாததுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரி. அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆகியவற்றில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சி யாளர்களை இந்த கல்வி ஆண்டிலேயே நியமிக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாரார நிலையத்தில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றி தர வலியுறுத்தி வருகின்ற ஜூன் 20-ந்தேதி சென்னை யில் மாபெரும் பேரணி நடந்த திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

    ×