search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரியில் கருத்தரங்கம்"

    • மாநில அளவிலான பாடத்திட்டம் எழுதுதல் பற்றிய கருத்தரங்கம் பி.எட். முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு நடைபெற்றது.
    • சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணன் பயிற்சி அளித்தார்.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான பாடத்திட்டம் எழுதுதல் பற்றிய கருத்தரங்கம் பி.எட். முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் பியூலாராஜினி வரவேற்புரையாற்றினார். சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணன் பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் யோகா அஞ்சுஸ்ரீ, செயலாளர் குணசேகரன், இணைச் செயலாளர் மணிமாறன், உதவி பேராசிரியர் அபர்ணாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழனி மாலை நேர கல்லூரியில் பொருளாதார சுதந்திரமே பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு நான் முதல்வன் திட்டத்தில் மாணவ-மாணவிகளின் கேள்வி களுக்கு பதில் அளித்தார்.

    திண்டுக்கல்:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பழனி மாலை நேர கல்லூரியில் பொருளாதாரசுதந்திரமே பாலினசமத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.தொலை தூரகல்வி இயக்ககம் கூடுதல் தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி சலீமாராபியத் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு நான் முதல்வன் திட்டத்தில் மாணவ-மாணவிகளின் கேள்வி களுக்கு பதில் அளித்தார்.

    தொலை தூரகல்வி இயக்கத்தை சேர்ந்த திருவேணி காட்சிதொடர்பி யல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழா விற்கான ஏற்பாடுகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரி இயக்குனர் தயாளகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் , மாணவ-மாணவிகள் செய்திருந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×