search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்கள் முற்றுகை"

    • திருக்கண்டலம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
    • ஊராட்சியில் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு,ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லிங்கதுரை,ஒன்றிய கவுன்சிலர் ரவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஊராட்சியில் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும், பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

     பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி

    பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி

    இதனால் ஊராட்சிமன்ற தலைவர் கூட்டத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறி சென்று விட்டார். இதனால் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி இளைஞர்கள் ஊராட்சி செயலர் உமாநாத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக இளைஞர்களிடம் உறுதி அளித்தார். இதன் பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    ×