search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்னிசை நிகழ்ச்சி"

    • 22-ந் தேதி நடக்கிறது
    • மஞ்சள்நீர் விடையாற்று உற்சவம் திருவீதி உலா நடைபெறும்

    வேலுார்,

    வேலுார் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் திருத்தேர் திருவிழா, இன்று தொடங்கி, வரும் 24-ந்் தேதி வரை நடக்கிறது.

    இதை முன்னிட்டு, இன்று காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், 10 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல், மதியம் 2 மணிக்கு சப்தகன்னிகள் செவிட்டாத்தம்மன் முனீஸ்வரர் ஆகிய பரிவாரங்களோடு ஜமாதிமலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் வயிரநாதருக்கு, பால் பொங்கல் வைத்தல், இரவு11 மணிக்கு திருக்காப்பு அணிவித்தல் நடந்தது.

    தொடர்ந்து, 16 மற்றும் 17-ந் தேதிகளில் சிறப்பு அபிஷேகமும், 18-ந் தேதி மாலை 6 மணிக்கு மறு காப்பு அணிவித்தல் மற்றும் இரவு 7 மணிக்கு ஸ்ரீ துர்கையம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து, 19, 20,21 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு முறை யே ஆதிபராசக்தி, தனலட் சுமி, சிவலிங்க பூஜை திருவீதி உலா நடக்கிறது.22-ந் தேதி காலை 7 மணிக்கு ஸ்ரீ சாலை கெங் கையம்மனுக்கு சீர்வரிசை' செலுத்துதல், காலை 9 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் ஸ்ரீ சாலை கெங்கையம்மன் திருத்தேர் திருவீதி உலா, மாலை 6 மணிக்கு அந்திமழை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து, 23-ந் தேதி காலை 9 மணிக்கு சிரசு ஏற்றம், விஸ்வரூப காட்சி, மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர், 24-ந் தேதி மதியம் 2 மணிக்கு மஞ்சள்நீர் விடையாற்று உற்சவம் ஸ்ரீ சாலை கெங்கையம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராமநவமி விழா நடந்தது.
    • இதில் ஏராளமான பெண்கள் உள்பட உபநிஷர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் 57-வது ஆண்டு ராம நவமி விழா நடந்தது.

    முதல் நாள் ராமஜனம் லட்சார்ச்சனையுடன் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆழ்வார்கள், தாசர்கள் உபன்யாசம் நடத்தப்பட்டது. 9-ம் நாளில் சீதா கல்யாணம் நடந்தது. சென்னை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினர் சீதா கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர்.

    மாலையில் காயத்ரி ரகுராம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நாளை ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. தினமும் இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பெண்கள் உள்பட உபநிஷர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    ×