என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யூடியூபர் மணீஷ் காஷ்யப்"
- கடந்தாண்டு பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன
- இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலீசார் கைது செய்தனர்.
கடந்தாண்டு பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக பீகார் சட்டசபையில் பாஜகவினர் பிரச்சினை கிளப்பினர்.
இந்த பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழுக்களை அமைத்து கடும் நடவடிக்கையில் இறங்கின. இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலீசார் கைது செய்தனர். பீகாரை சேர்ந்த இவர் 4 ஆண்டுகளாக யூடியூப் சேனலில் அரசுகளுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.
பணம் சம்பாதிக்க தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ காட்சிகளை தயாரித்துள்ளார். மணீஷின் சேனலில் 30 போலி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
மணிஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள யூடியூபர் மனீஷ் டெல்லியில் பாஜக எம்,.பி மனோஜ் திவாரி முன்னிலையில் காஷ்யாப் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய மணீஷ் காஷ்யப், "பாஜகவுடன் இணைந்து பீகாரை வலுப்படுத்துவேன். என் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் பாட்னா நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது மட்டுமின்றி என்னை விடுதலையும் செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என் மீது போடப்பட்ட வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. சனாதனத்தை அவதூறு செய்பவர்களுக்கும், தேசியவாதத்திற்கு எதிரானவர்களுக்கும் எதிரான எனது போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.
- மணிஷ்காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
- தனக்கு எதிரான 19 வழக்குகளையும் பீகாருக்கு மாற்ற வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
புதுடெல்லி:
பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக பீகார் சட்டசபையில் பா.ஜனதாவினர் பிரச்சினை கிளப்பினர். தமிழகத்திலும் சர்ச்சை எழுந்தது.
இந்த பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழுக்களை அமைத்து கடும் நடவடிக்கையில் இறங்கின. இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் மணீஷ் காஷ்யப். பீகாரை சேர்ந்த இவர் 4 ஆண்டுகளாக யூடியூப் சேனலில் அரசுகளுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.
பணம் சம்பாதிக்க தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ காட்சிகளை தயாரித்துள்ளார். மணீஷின் சேனலில் 30 போலி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து மணீஷ் காஷ்யப் உள்ளிட்ட 11 பேர் மீது மார்ச் 7-ந் தேதி பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 6 பேர் கைதான நிலையில் மணீஷ் காஷ்யப் மேற்கு சாம்பரன் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இவர் மீது மதுரையிலும் வழக்குகள் உள்ளன. இதை தொடர்ந்து பீகார் போலீசார் அவரை தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மணிஷ்காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி யூடியூபர் மணீஷ் காஷ்யப் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதோடு தனக்கு எதிரான வழக்குகளை இணைத்து ஒரே வழக்காக பீகாரில் விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பார்டிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து மணீஷ் காஷ்யப் தொடர்ந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. தனக்கு எதிரான 19 வழக்குகளையும் பீகாருக்கு மாற்ற வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
அமைதியான தமிழகத்தில் பொது அமைதியை சீர் குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டை நாடவும் மணீஷ் காஷ்யப்பை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்