search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.ஐ. விசாரணை"

    • கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது.
    • சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    திண்டுக்கல்:

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை செல்லவில்லை.

    அந்த மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது. இதில் தி.மு.க.வினரின் தலையீடு இருப்பதால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது சம்பவ இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுத்து நிறுத்தினேன். ஆனால் தி.மு.க. அரசில் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளது. அதனால்தான் இப்பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பிய போது சுகாதாரத்துறை அமைச்சர் அதனை திசைதிருப்ப முயற்சிக்கிறார். சட்ட பேரவையில் இதுகுறித்து பேச அ.தி.மு.க.விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அரசை கண்டிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    மக்களுக்கு பயன்தராத கொடுமையான ஆட்சி நடந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து மக்களை அடைத்து வைத்துள்ளனர். இதுபோல் நடக்கும் என்பதால்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட வில்லை. பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்து 40 எம்.பி.களை விலைகொடுத்து வாங்கியதுபோல சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அது நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசுகையில், `இது திராவிட மாடல் ஆட்சி அல்ல. சாராய மாடல் ஆட்சி. தகுதியில்லாதவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. ஆட்சி, நிர்வாகத்தில் தி.மு.க.வினரின் குடும்ப தலையீடு அதிக அளவில் உள்ளது. விலைமதிப்பற்ற 60 உயிர்கள் பலியான போதும் தி.மு.க. அரசு அதுபற்றி கவலைப்படாமல் அலட்சியமாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் வருகிற சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.
    • சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது.
    • வரும் ஜூலை 30 ந் தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் இந்து முன்னணி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் மாநில செயலாளர் தாமு வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாள ர்களிடம் கூறியதாவது :- தி.மு.க. இந்து விரோத கட்சியாக செயல்படுகிறது. இந்து கோயில்களை இடிக்க முயல்கிறது. புண்ணிய தலமாக அவிநாசி விளங்குகிறது. அங்குள்ள சிவன் ஆலயத்தில் கடந்த 1990ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றது. யாரோ பீடி பிடித்து வீசி தான் தீவிபத்து நிகழ்ந்தது என்றனர். அதன் பின்னர் 2000ம் ஆண்டில் தற்கொலை நடைபெற்ற போது அங்கு ஒரு பைபிள் கிடந்தது. அவர் மனநோயாளி என்று சொல்லி முடித்து விட்டனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று ள்ளது. இதனையும் பைத்தியக்காரன் என்று சொல்லி முடிக்கின்றனர். தொடர்ந்து அவிநாசி கோயிலில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் ஜூலை 30 ந்தேதி இந்து முன்னணி சார்பில் அவிநாசியில் மாநாடு நடத்தப்படவுள்ளது. பட்டினபிரவேசம் என்பது பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வைபவம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. மதம் சார்ந்த நம்பிக்கைகளில் மதசார்பின்மை கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் தலையிடுவது கூடாது. இந்து மதத்திற்கு என்று பல நூற்றாண்டு வழிபாட்டு மரபு , நடைமுறைகள் உள்ளன. இந்து கோயில்களில் அரசியல்வாதிகள் தலையீடு கூடாது.

    கடவுள் பக்தி நம்பிக்கையுடையவர்களை தான் கோயில்களுக்கும் செயல்அலுவல ர்களாகவும், அறங்காவலர்க ளாகவும் நியமனம் செய்ய வேண்டும். இந்து கோயில் வருமானம் அனைத்தும் இந்து கோயில்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர்கள் லோகநாதன், சர்வேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சிவக்குமார்,விஜயகுமார், ராகுல் பாலாஜி, உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
    • வழக்கில் தொடர்புடைய வங்கி மேலாளர், உள்ளிட்ட 4 பேரை சிபிஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

    பல்லடம்:

    பல்லடத்தைச் சேர்ந்த சிவகுமார் அவரது அண்ணன் விஜயகுமார், விஜயகுமார் மகன் ராகுல் பாலாஜி,மற்றும் தமிழரசன், பிரவினா ஆகியோர் கூட்டாக சேர்ந்து திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடம் சொத்துப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாக சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், பிரவீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழரசன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    சிவக்குமார்,விஜயகுமார், ராகுல் பாலாஜி, உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக புகார் தாரர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-ரூ.100 கோடி மோசடி குறித்து பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க பல்லடம் போலீசார் தாமதப்படுத்தியதால், இந்த வழக்கை சிபிஐ.க்கு மாற்றக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்து வந்தோம்.இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ. க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய வங்கி மேலாளர், உள்ளிட்ட 4 பேரை சிபிஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×