search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட் காாடு"

    • தெரு வியாபாரிகள் சட்டப்படி அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
    • தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே தெரு வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு இன்று ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.

    கண்ணன், சத்யா ,பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம் தொடங்கி வைத்தார். தேசிய நிர்வாக குழு சந்திரகுமார் முடித்து வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தெரு வியாபாரிகள் சட்டப்படி அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும் . சட்டம் 2015-ன் படி தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே தெரு வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    வியாபாரம் செய்யும் இடத்தை முடிவு செய்வதற்கு வணிகக் குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் வணிக குழு தேர்தல் நடத்தும் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்டத் தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், வங்கி ஊழியர் சங்கம் பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    இதில் மின்வாரியம் மண்டல செயலாளர் பொன்.தங்கவேல், ஓய்வு பெற்றோர் சங்கம் பொதுச்செயலாளர் அப்பாதுரை, டாஸ்மாக் சங்கம் மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், டி.என்.எஸ்.டி.சி பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்டத் தலைவர் சிவக்குமார், டி.என்.சி.எஸ்.சி மாவட்ட செயலாளர் தியாகராஜன், ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கட்டுமான சங்கம் மாவட்ட துணை தலைவர் செல்வம், உடலுழைப்பு தொழிலாளர் சங்கம் சுதா, கல்யாணி, மாநகரத் தலைவர் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×