search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புராணக் கதைகள்"

    • அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று.
    • அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் தனி சந்நிதியில் உள்ளது.

    அனுமனுக்கு புதுவால் கொடுத்த தியாகேசர்

    அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று.

    பல தலங்களை தரிசித்து திருவாரூரை அடைந்த ஆஞ்சநேயன் திருவாரூர் பராபரனை வழிபட்டான்.

    லிங்கப் பிரதிட்டை செய்து பூஜித்தான்.

    அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் வெளிப்பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ளது.

    ஈசன் திருவருளால் மீண்டும் பழையபடி அழகிய வால் பெற்ற ஆஞ்சநேயன் நோய் தீர்த்த வைத்திய லிங்கத்தைப் பூஜித்து மகிழ்ந்தான்.

    • ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் என்ற நான்கு புதல்வர்களுக்குத் தந்தையானான்.
    • இவர்கள் பூஜித்த லிங்கங்கள் உட்பிரகாரத்தில் உள்ளன.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-ராமர் வழிபட்ட தலம்

    பிள்ளைப்பேறு இல்லாத தசரதன் பல தலங்களையும் தரிசித்து வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான்.

    ஆவூர்ப் பசுபதீஸ்வரம் முதலிய தலங்களை வழிபட்ட பின்னர் திருவாரூரை அடைந்தான்.

    ஆரூர் நாயகனை வழிபட்ட பின் லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.

    தந்தையாகவும் தாயாகவும் சேயாகவும் திகழும் தியாகராஜப் பெருமானின் திருவருளால் திருமாலை மகனாக அடையும்பேறு பெற்றான்.

    ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் என்ற நான்கு புதல்வர்களுக்குத் தந்தையானான்.

    தசரதன் மட்டுமன்று அவன் தந்தையான அஜன், தசரதன் மகன் ராமன், அவனுடைய புதல்வர்கள் லவன் குசன் எனத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ரகு வம்சத்தினர் திருவாரூர் பெருமானை பூஜித்து லிங்க பிரதிட்டை செய்து வழிபட்டு நலம் அடைந்துள்ளனர்.

    இவர்கள் பூஜித்த லிங்கங்கள் உட்பிரகாரத்தில் உள்ளன.

    • இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.
    • இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-கோவில் அமைப்பு

    33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோவிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் அமைந்துள்ளன.

    இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

    இக்கோவில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோவிலாக கட்டப்பெற்றதாகும்.

    அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோவிலாக இருந்திருக்க வேண்டும்.

    சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது.

    சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோவிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

    இக்கோவிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளது.

    ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள் உள்ளன.

    இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது.

    இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது.

    அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார்.

    இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.

    இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர்.

    பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.

    தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

    பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம்.

    அறநெறி நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோவிலாகும்.

    • தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை.
    • பண் - பதினெண் வகைப்பண்

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-அங்க பொருட்கள்

    1. ஆடுதண்டு - மணித்தண்டு,

    2. கொடி - தியாகக்கொடி,

    3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம்,

    4. மாலை - செங்கழுநீர்மாலை,

    5. வாள் - வீரகண்டயம்,

    6. நடனம் - அஜபா நடனம்,

    7. யானை - ஐராவணம்,

    8. மலை - அரதன சிருங்கம்,

    9. முரசு - பஞ்சமுக வாத்தியம்,

    10. நாதஸ்வரம் - பாரி,

    11. மத்தளம் - சுத்தமத்தளம்,

    12. குதிரை - வேதம்,

    13. நாடு - சோழநாடு,

    14. ஊர் - திருவாரூர்,

    15. ஆறு - காவிரி,

    16. பண் - பதினெண் வகைப்பண்

    என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்க பொருள்களாகும்.

    தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை, அவருடன்

    1. அருளிப்பாடியார்,

    2. உரிமையில் தொழுவார்,

    3. உருத்திரப் பல்கணத்தார்,

    4. விரிசடை மாவிரதிகள்,

    5. அந்தணர்கள்,

    6. சைவர்கள்,

    7. பாசுபதர்கள்,

    8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருவார்கள்.

    • உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர்.
    • தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-சோமாஸ்கந்தர்

    உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர்.

    அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார்.

    அவரோடு இணைந்து காட்சி தரும் உமைக்கு கொண்டி எனப் பெயர்.

    தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.

    பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    • இக்கோவில் பெரிய கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.
    • ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-தல வரலாறு

    திருவாரூர் தியாகராஜர் கோவில், மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோவில் ஆகும். இக்கோவில் பெரிய கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.

    இக்கோவில் நாயன்மார்களால் பாடற்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.

    ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

    திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார்.

    திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார்.

    பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்;

    அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது.

    இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.

    இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

    • சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.
    • இங்குள்ள தல விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

    மந்த நிலையை நீக்கும் திருவலம் வில்வநாதீஸ்வரர்

    வேலூரில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்தில் வில்வநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.

    இதை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், மந்த புத்தி நீங்கும், தோல் சம்மந்தப்பட்ட நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

    சுவாமி, அம்மன் இருவருக்கும் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    குடும்பத்தில் மந்த நிலையில் இருப்பவர்களை இங்கு அழைத்து வந்து சுவாமியை தரிசனம் செய்ய வைத்து வில்வம் பிரசாதமாக தருகின்றனர்.

    இதனை சாப்பிட்டவர்கள் மந்த நிலையில் இருந்து மீளப்படுவதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள தல விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

    அதற்கு தகுந்தார் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    முருகனுக்கும், விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு.

    தேவாரப்பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் தொண்டை நாட்டுப்பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 10 வது தலமாக வைத்து போற்றப் பெறும் சிறப்புடையது திருவல்லம்.

    இந்த ஊருக்குள் நிலா நதி ஓடுகிறது. நதியின் கரையிலேயே கோவில் உள்ளது.

    திருமாலும், நான்முகனும், விண்ணுலகத்தார், மண்ணுலகத் தார் அனைவரும் இங்கு வந்து வணங்குவதாக கூறப்படுகிறது.

    எனவே இத்தலம் காசிக்கு நிகராகக் கருதப்படும் சிறப்பு வாய்ந்தது.

    சிவானந்த மௌனகுரு சுவாமி இங்குள்ள பலாமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார்.

    • இங்கு கணவன் மனைவியாக வந்து வழிபட்டால் இருவர் இடையே உறவு மேம்படும் என்பது ஐதீகம்.
    • உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது சான்றோர்கள் கடமை.

    கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் பாலாம்பிகா சமேத கார்கோடேஸ்வரர்

    இரு மனம் இணையும் திருமண நிகழ்வை யாராலும் மறக்க முடியாது.

    வாழ்கை துணையாக வாழ்வின் இறுதி வரை வரப்போகும் உறவை கைபிடிக்கும் உன்னதமான நாள் திருமண நாள்.

    கணவன் மனைவி என புது உறவுடன் வாழ்வை தொடங்கும் புது மணத் தம்பதியினரின் வாழ்வு வளம் பெற பல கோவில்களுக்கும் சென்று வழிபட வேண்டும் என பெரியவர்கள் கூறுகின்றனர்.

    தமிழகத்தில் அமைந்துள்ள பழமையான கோவில்கள் பல தனித்தன்மை வாய்ந்த சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன.

    வரலாற்று ஆதாரங்களுடன், புராண நிகழ்வுகளை செவி வழிச் செய்தியாக கொண்ட கோவில்கள் பல இன்றும் மக்கள் வாழ்வில் வளங்களை தந்து கொண்டிருக்கின்றன.

    அந்த வகையில் கணவன் மனைவி உறவு மேம்பட அருள் தரும் கோவிலாக விளங்குகிறது அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தில் உள்ள பாலாம்பிகா சமேத கார் கோடேஸ்வரர் திருக்கோவில்.

    இங்கு கணவன் மனைவியாக வந்து வழிபட்டால் இருவர் இடையே பாசம் அதிகரிக்கும், உறவு மேம்படும் என்பது ஐதீகம்.

    இதற்கு அடிப்படை ஆதராத்தை இந்த கோவிலின் தலவரலாறே நமக்கு கூறுகிறது.

    கிடைத்தற்கு அரிய பேரின்பத்தைப் பலரும் தேடி அலைந்த காலத்தில், சிற்றின்ப வேட்கையில் நாட்டம் கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடந்தவர்களும் இருந்தார்கள்.

    காமம் அவர்களைப் படாத பாடு படுத்தியது. இதன் காரணமாக நித்தமும் தாங்கள் அனுஷ்டிக்க வேண்டிய வழிபாடுகளையும், நியதிகளையும் பலர் மறந்து போயினர்.

    இத்தகைய காலத்தில் உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது சான்றோர்கள் கடமை அல்லவா?

    எனவே, தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று மக்களின் இந்த நிலையை மாற்றுமாறு வேண்டினார்.

    இதனால்தான் காமன் என்கிற மன்மதன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே.

    தன் கணவன் மன்மதனை மீண்டும் உயிர்பித்துத் தருமாறு ஈசனை நோக்கி தவம் இருந்தாள் அவனது துணைவியான ரதிதேவி.

    தன்னை வழிபட்ட ரதிக்கு மாங்கல்ய பிச்சை தருவதற்காகவும் அவள் பார்வைக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்பித்துத் தந்தார் ஈசன்.

    ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் ரதிவரபுரம் என்றும் காமனின் தேவியான ரதி தவம் இருந்த தலம் என்பதால், காமரதிவல்லி எனவும் அழைக்கப்படலானது.

    இதுவே பின்னாளில் காமரச வல்லி ஆகி விட்டது.

    ஊர்ப் பெயருக்கான இந்தக் கதை புராணத்தோடு நின்று போய்விடவில்லை.

    இதை மெய்ப்பிக்கும் வகையில் ரதிதேவியின் செப்புத் திருமேனி ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது.

    தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி, மாங்கல்ய பிச்சை கேட்கும் கோலத்தில் காணப்படுகிறது இந்தத் திரு மேனி.

    காமரசவல்லியில் ஒவ்வொரு மாசி மாதமும் பவுர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவின்போது இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை ஆலயத்தில் நட்டு வைப்பார்கள்.

    இறை பக்திக்கு உட்பட்டும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும் இந்தக் கிளை எட்டே நாட்களுக்குள் மீண்டும் உயிர் பெற்று வளர்கிறது.

    ரதிதேவியின் வாழ்க்கை இங்கே துளிர்த்தது போல், இங்கே நடப்படுகிறவை மீண்டும் துளிர்க்கும் என்பதற்கு உதாரணம் இது.

    குடும்பத்தில் தம்பத்திக்குள் பிரிவினை இருப்பவர்கள், கருத்து வேற்றுமை கொண்டவர்கள், விவாகரத்தைத் தடுக்க நினைப்பவர்கள், தம்பதியரின் அன்பு பெருக வேண்டுவோர் காமரசவல்லியை வந்து வணங்கினால் சிறப்பு.

    முறையாக இங்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் சென்றால், தம்பதியர்களின் வாழ்வில் புத்தொளி பரவும் என்பது ஐதீகம்.

    ரதிதேவிக்கே மாங்கல்ய பிச்சை அளித்த திருத்தலம் என்பதால், நிலைத்த மாங்கல்ய பேறு வேண்டுவோர், இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

    ஆதி காலத்தில் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் பெருமளவில் காமரசவல்லியில் வசித்து வந்தார்களாம் எனவே, சதுர்வேதி மங்கலம் என்கிற சிறப்புப் பெயருடன் இந்த ஊர் விளங்கி வந்துள்ளது.

    ஒரு காலத்தில் இந்தத் திருக் கோவிலை அந்தணர்கள் நிர்வகித்து வந்ததாகவும், அவர்களுக்காச் சில கிராமங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன என்றும் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

    வேத பாராயணங்களும், சத்சங்கக் கூட்டங்களும் இங்கு அதிகம் நடந்துள்ளன.

    • இது சிவனும் முருகனும் ஒருவரே என்பதற்கு ஆதரமாக திகழ்கிறது.
    • பின்னர் மகன் முருகனை குருவாக ஏற்று அவரிடம் பிரணவ பொருளை உபதேசமாக பெற்றார்.

    தந்தை மகன் உறவை மேம்படுத்தும் சுவாமிமலை சுவாமி நாதசுவாமி

    ஆறுபடை முருகன் கோவில்களில் 4 வது படை வீடாக திகழ்வது சுவாமிமலை.

    இக்கோவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் அமைந்துள்ளது.

    திருப்பரங்குன்றில் முருகன் ஒளிவடிவினன்.

    திருச்செந்தூரில் அருள் வடிவினன்.

    குன்றுகளில் எல்லாம் அவன் எளிமைக் கோலம் பூண்ட இறைவன்.

    பழமுதிர் ச்சோலையில் பரந்து தோன்றும் வியாழ பகவானின் உருவினன்,

    சுவாமி மலையில் வழிபடும் அன்பருக்கெல்லாம் வேண்டியது அருளும் வரகுணன்.

    சுவாமி நாதசுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்கத்தின் ஆவுடையாராகவும், அதன் மேல் எழுந்தருளி உள்ள சுவாமிநாதமூர்த்தி பாணலிங்கமாகவும் காட்சி தருவதை காணலாம்.

    இது சிவனும் முருகனும் ஒருவரே என்பதற்கு ஆதரமாக திகழ்கிறது.

    சிவபெருமான் கோவில்களில் திருவிழா காலங்களில் பஞ்சமூர்த்திகளாக எழுந்தருளுவார்.

    அதேபோல் சுவாமி மலையில் உற்சவ காலங்களில் கணபதி வள்ளி தெய்வானையோடு சண்முகர், வள்ளி தெய்வானையோடு சுப்பிரமணியர், பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரருடன் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

    படைக்கும் தொழில் செய்யும் பிரம்மன் பிரணவப் பொருளை அறியாமல் இருப்பதை கண்ட முருகப் பெருமான் அவரது தலையில் குட்டி சிறைப்படுத்தினார்.

    இதனை அறிந்த சிவபெருமான் முருகனிடம் கோபம் கொள்வது போல் நடித்து கண்டித்தார்.

    பின்னர் மகன் முருகனை குருவாக ஏற்று அவரிடம் பிரணவ பொருளை உபதேசமாக பெற்றார்.

    பின்னர் பிரம்மனுக்கும் முருகன் பிரவண பொருளை உபதேசித்ததாக சுவாமி மலை தலபுராணம் கூறுகிறது.

    சுவாமிமலையில் தந்தையும் மகனும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஒருவரை ஒருவர் உணர்ந்து இணக்கமாக நடந்து கொண்டதால் சுவாமிமலை சுவாமி நாதசுவாமியை தரிசனம் செய்தால் மனவேறுபாடு கொண்ட தந்தை மகன் உறவில் ஒற்றுமை ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

    அதனை பின்பற்றி வழிபாடு செய்து சென்றவர்கள் வாழ்வில் நல்ல பலனை கண்டு இந்த உண்மையை ஒப்பு கொண்டு உள்ளனர்.

    எனவே தந்தை மகன் உறவில் விரிசல் கண்டவர்கள் சுவாமிமலை முருகனை சேர்ந்து வந்து தரிசித்தும் தனியாக வந்து தரிசித்தும் நல்ல மாற்றத்தை காணலாம்.

    • இந்த கோவிலை வழிபட்டால மனதில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
    • இதுபோல சுந்தரர், சேக்கிழார் ஆகியோரும் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளனர்.

    மனக்குறைகளை தீர்க்கும் இரும்பை மாகாளீஸ்வரர்

    புதுவையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது இரும்பை மாகாளீஸ்வரர் கோவில்.

    புதுவை திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    தேவார மூவர்களால் பாடல் பெற்ற 276 சிவ திருத்தலங்களில் 32வது திருத்தலமாக இரும்பை மாகாளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலை வழிபட்டால மனதில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    குடும்ப விருத்திக்கும், ஒற்றுமைக்கும் புகழ்பெற்ற தலமாகவும் இந்த கோவில் அமைந்துள்ளது.

    1300 ஆண்டுகளுக்கு முன்பு மாகாள மகரிஷியால் கோவில் ஸ்தாபிக்கப்பட்டு அவர் பூஜித்து அருள்பெற்ற ஸ்தலமாகவும் இது உள்ளது.

    இதனாலேயே இங்குள்ள இறைவன் மாகாளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    மாகாள மகரிஷி இதுபோல உஜ்ஜயினி மாகாளம், அம்பர் மாகாளம் ஆகிய கோவில்களையும் ஸ்தாபித்துள்ளார்.

    திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க கோவிலாகவும் இது அமைந்துள்ளது.

    இதுபோல சுந்தரர், சேக்கிழார் ஆகியோரும் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளனர்.

    கோவிலை சுற்றி இலுப்பை மரங்கள் அதிகம் இருந்ததால் அந்த பகுதி இலுப்பை என அழைக்கப்பட்டு பின்னர் அது மருவி இரும்பை என மாறியிருப்பதாக கூறுகிறார்கள்.

    கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கம் இரண்டாக பிளந்து பின்னர் ஒன்றாக சேர்ந்ததாக கூறப்படுகிறது.

    எனவே அந்த சிலை பிளந்ததற்கான அடையாளங்களுடன் இப்போதும் கருவறை சிலை உள்ளது.

    • பிரபாசபட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோவில் அமைந்துள்ளது.
    • துவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி “புருஷோத்தமன்” என்ற உயர்ந்த பதவியை அடைந்தார்.

    சோமநாதபுரம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், மேற்கே அரேபியன் கடலும், வடக்கே கச்சு வளைகுடாவும், தெற்கே காம்பே வளைகுடா எல்லைகளாக, அமைந்துள்ள சௌராட்டிர தேசத்தில், 'வேராவல்' எனும் நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013 அன்று ஜீனகாட் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை பிரித்து, 15-08-2013இல் புதிதாக அமைக்கப்பட்ட கிர்சோம்நாத் மாவட்டம் எனும் மாவட்டத்தில், பிரபாசபட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோவில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.

    புராணக் கதைகள்: பிரபாசப்பட்டின கடற்கரையில் சோமநாதர் கோவில்

    சந்திரன் தனது 27 மனைவியரில் உரோகிணியிடம் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு சீற்றங்கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு காச நோயினால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் இறுதியில் சௌராட்டிரத்தின் கடற்கரையில் உள்ள பிரபாச தீர்த்தத்தில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை சரணடைந்து நோய் நீங்கி சுகமடைந்தான். அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது. துவாரகாபுரியை ஆண்ட கிருஷ்ணர் சோமநாதரை வணங்கி போற்றி "புருஷோத்தமன்" என்ற உயர்ந்த பதவியை அடைந்தார். பாண்டவர்கள் இங்கு வந்து பிதுர் கடன்கள் செய்து சோமநாதரை வழிபட்டனர் என்று மகாபாரதம் கூறுகிறது.

    பெயர்க் காரணம்: சோமநாதர் கோவில், நுழைவாயில்

    சந்திரனே முதன்முதலில் இங்கு சிவலிங்கத்திற்கு பொற்கோவில் கட்டி வருடம் முழுவதும் அமிர்தத்தை பொழிந்து திருமுழுக்கு வழிபாடு செய்த காரணத்தால் இந்த ஜோதிர்லிங்கத்திற்கு 'சோமநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. எனவே இவ்விடத்தை சோமநாதபுரம் என்றும் அழைப்பர். பின்னர் இராவணன் அதை வெள்ளியிலும், கிருஷ்ணர் அதனைச் சந்தன மரத்திலும், குஜராத்தின் சோலங்கி அரசனான பீமதேவன் கல்லாலும் கட்டினார்கள் என்று கூறப்படுகின்றது.

    சோமநாதபுர ஆலயத்தை இடித்தவர்கள் விவரம்

    உருவ வழிபாட்டினை முழுவதுமாக எதிர்க்கும் இசுலாமிய மன்னர்கள் பல முறை சௌராஷ்ட்டிர பகுதி மீது படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை ஆறு முறை அடியோடு இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றனர். சோமநாதரின் ஆலயத்தை இடித்த இசுலாமிய மன்னர்கள் பெயர்கள் பின்வருமாறு.

    முதல் முறையாக கி.பி. 725ல் சிந்து மாநில இசுலாமிய அரபு ஆளுனரின் கட்டளைப்படி சோமநாதபுரம் கோயிலை, உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமியப் படைகள், சௌராட்டிர தேசத்தை ஆண்டு கொண்டிருந்த, பிரதிஹர குல மன்னன், இரண்டாம் நாகபாதர் காலத்தில் சோமநாதபுரம் கோவில் இடிக்கப்பட்டது.

    கி.பி. 1025, டிசம்பர் மாதம், கஜினி முகமது என்றழைக்கப்படும், ஆப்கானிஸ்தானில் கஜினி என்ற குறுநிலத்தை ஆண்ட முகமது என்ற குறுநில மன்னர், இசுலாமியர்களின் தலைமை மதத்தலைவரான கலீபாவின் அனுமதியுடன், இசுலாமிய கொள்கைக்கு எதிராக உள்ள உருவ வழிபாட்டு இடங்களை அழிக்கு பொருட்டு சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். நாட்டில் இந்துக்கள் உயிருடன் வாழ வேண்டுமானால் கட்டாய வரி செலுத்த ஆணையிட்டார். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றார்.

    24.02.1296ல் குஜராத்தை ஆண்ட இராசாகரன் என்ற மன்னர் காலத்தில், அலாவுதீன் கில்ஜி என்ற தில்லி சுல்தான், குஜராத் பகுதி மீது படையெடுத்து சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார். பின்னர் 'காம்பத்' அரசை ஆண்ட இரண்டாம் கர்ணதேவ வகேலா மன்னரை கொன்று, அவரின் மனைவி கமலாதேவியை மதமாற்றம் செய்வித்து மணந்து கொண்டு அவரை பட்டத்து அரசியாக்கினார். கமலாதேவியின் அந்தரங்க பணிப்பெண்னையும் (திருநங்கை) தன்னுடன் தில்லிக்கு கொண்டு சென்றார் கில்ஜி. அந்த திருநங்கைக்கு, மாலிக் கபூர் என்று பெயர் சூட்டி தன் ஆருயிர் நண்பனாக்கி, படைத்தலைவர் தகுதி வழங்கினார் அலாவுதின் கில்ஜி. கில்ஜி, 50,000 ஆயிரம் பேரைக் கொன்று, 20,000 பேரை அடிமைகளாக பிடித்துச் சென்றதுடன் அப்பகுதியில் இருந்த கால்நடைகளையும் கவர்ந்து சென்றார். இந்த செய்தியை ஹாசன் நிஜாமைச் சேர்ந்த தாஜ்-உல்-மாசிர் என்ற வரலாற்று அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    கி.பி. 1375ல் ஜினாகாட் சுல்தான், முதலாம் முசாபர்ஷா, உருவ வழிபாட்டினை அவமதிக்கும் பொருட்டு, சோமநாதபுரம் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.

    கி.பி. 1451ல் ஜினாகாட் சுல்தானாக இருந்த முகமது பேக்டா என்பவர் சோமநாதரின் ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார்.

    கி.பி. 1701ல் மொகலாயர் மன்னர்கள் காலத்தில், இசுலாமிய நெறிப்படி வாழ்ந்த மற்றும் உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்த்த, மொகலாய மாமன்னர் அவுரங்கசீப் சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றார்.

    சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி சீரமைத்தல்

    முதல் முறையாக கி.பி. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீ புர யாதவகுல மன்னர், சோமநாதபுர ஆலயத்தை அதே இடத்தில் இரண்டாம் முறையாக சோமநாதரின் ஆலயத்தை சீரமைத்து கட்டினார்.

    மூன்றாம் முறையாக கி.பி. 815 -இல், கூர்சர பிரதிஹர வம்சத்தின், இரண்டாம் நாக பாதர் மன்னர், சோமநாதபுர ஆலயத்தை மறுபடியும் சீரமைத்து கட்டினார்.

    நான்காம் முறையாக மாளவ நாட்டு போஜராஜனும், பட்டான் (ஜீனாகாட்டு) நாட்டு சோலங்கி மன்னரும் 1042 -இல் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்கள்.

    ஐந்தாம் முறையாக கி.பி 1308 -இல் சூதசமாவம்ச அரசன் மகிபாலன் என்பவர் சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டினார். அவர் மகன் கேன்கர் என்பவர் 1326-1351 -க்குள் கோயிலில் லிங்கத்தை பிரதிட்டை செய்தார்.

    ஆறாம் முறையாக 1783 -இல் இந்தூர் நாட்டு அரசி அகல்யாபாய் ஹோல்கர், நாக்பூர் மன்னர் இராஜா போன்ஸ்லே, கோலாப்பூர் மன்னர் சத்ரபதி போன்ஸ்லே மற்றும் குவாலியர் மன்னர் ஸ்ரீமந் பாடில்புவா ஷிண்டே ஆகியோர் ஒன்று சேர்ந்து, சிதைந்த போன பழைய சோமநாதபுரம் கோவில் அருகே புதிய சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பினார்.

    ஏழாம் முறையாகவும், இறுதியாகவும், விடுதலை பெற்ற இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும் உணவு அமைச்சராக இருந்த கே. எம். முன்ஷியும் இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்ட துவங்கினர். முதலில் சோமநாதபுரம் கோவில் இடிபாடுகளை அக்டோபர் மாதம்,1950 -இல் அகற்றினர். சோமநாதபுரம் கோயிலை இடித்துக் கட்டிய இடத்தில் இருந்த மசூதியை சில மைல் தூரத்திற்கு அப்பால் இடம் மாற்றி அமைத்தனர். சோமநாதபுர கோயிலைப் புனரமைக்க தொடங்கும் விழாவை (பூமி பூஜை விழா) நடத்தி, மே மாதம், 1951ல், இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர். இராசேந்திரப் பிரசாத் தலைமையில், கோவில் அத்திவாரக்கல் நடப்படும் விழா நடைப்பெற்றது. புதிதாக கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயத்தை இந்தியக் குடியரசுத் தலைவர், சங்கர் தயாள் சர்மா தலைமையில் ஜனவரித் திங்கள் 1ஆம் நாள், 1995ஆம் ஆண்டு (01-01-1995) பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    கோவிலின் கட்டிடக் கலை அம்சங்கள்

    சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் இறுதியாக கட்டப்பட்ட சோமநாதர் கோவில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது.

    ×