search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷச்சாராயம்"

    • ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழப்பு காரணமாக கள்ளக்குறிச்சி முழுக்க கண்ணீர் வெள்ளம் பூண்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இதே போன்று கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     


    "இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.பி. உள்பட பத்து காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவவரும் கைது செய்யப்பட்டு தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது," என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

     


    ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய மரணங்கள் மாநிலத்தை துயரத்தில் ஆழ்த்தும் நிலையில், ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை மாற்றுவது, நிவாரணம் அறிவிப்பது உள்ளிட்டவைகளை நடவடிக்கைகளாக எடுப்பதையே ஆளும் அரசுகள் வாடிக்கையாக கொண்டுள்ளன.

    ஏற்கனவே கள்ளச்சாராயம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதோடு, யூடியூபர் சங்கர் இந்த விவகாரம் குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றம்சாட்டி இருந்த நிலையில், அதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

    தொடர் குற்றச்சாட்டுகளுக்கு அரசு முறையாக செவி சாய்க்காமல் இருந்ததே, இத்தனை உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக எதிர்க்ட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், உயிரிழப்புகளை கவனத்தில் கொண்டேனும், தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே எழுந்துள்ளது.

    ஆளும் அரசு மீது விழுந்துள்ள கறையை முதலமைச்சர் எவ்வாறு துடைத்தெறிய போகிறார். கள்ளச்சாராயமோ, விஷ சாராயமோ... எப்படி பெயர் வைத்து அழைத்தாலும் அது ஒரு உயிர் கொல்லியே. இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு யார் காரணம் என்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்....இதுவும் கடந்து போகும் என மக்கள் விடமாட்டார்கள்..காரணம், இது தொடர்கதையாகும் என்பதால். என்ன செய்ய காத்திருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....

    • பலர் அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி.
    • உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்துள்ளன. சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும், தமிழகத்தில் கள்ளச்சாராய சந்தைக்கு மவுசு குறையவில்லை என்பதை கள்ளக்குறிச்சி சம்பவம் வெளிச்சம் போட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

    கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரத்தை சேர்ந்தவர்களில் சிலர் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த மேலும் பலர் உடல்நல பாதிப்பு காரணமாக அருகாமையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

     


    ஒருபுறம் நோயாளிகள் அனுமதியும், மறுபுறம் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் அதிகமாகும் சம்பவங்கள் இன்னும் முற்றுபெறவில்லை. இதுவரை கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கள்ளச்சாராய சம்பவம் பூதாகாரமாகி உள்ள நிலையில், அருகாமையில் உள்ள மருத்துவனைகளில் இருந்து மருத்துவர்கள் அடங்கிய குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    உறவினர்களை கள்ளச்சாராயத்துக்கு பறிகொடுத்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், கள்ளச்சாராய விற்பனை குறித்து பலமுறை புகார் அளித்திருக்கிறோம். ஆனால், ஒருமுறை கூட நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை என்று கண்ணீர்மல்க குற்றம்சாட்டினர்.

    கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை குறித்த புகார்கள் எழுந்தன. இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியின் வீடியோ தற்போது அதிகம் பகிரப்படுகிறது.

    வீடியோவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக யூடியூபர் சவுக்கு சங்கரும் குற்றம்சாட்டி இருந்தார். தற்போது இதே பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து யூடியூபர் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    அந்த வீடியோவில், "தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கள்ளசாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக உள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன். இவரது தொகுதியில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் 50 வீடுகளை சேர்ந்த கிராமங்கள் உள்ளன. அங்கு சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆதரவு தருபவர் உதயசூரியன். கல்வராயன் மலைப்பகுதியின் மற்றொரு பகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன். இவர்கள் ஆதரவோடு, காவல்துறை ஆதரவுடன் இந்த சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த கள்ளச்சாராய சாவுக்கு காரணம் செந்தில் பாலாஜி என்று தான் கூறுவேன்," என்று தெரிவித்துள்ளார்.

    கள்ளச்சாராய விவகாரம் குறித்து ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறுவது தொடர் கதையாகி வருகிறது. இவை தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியின் நிர்வாக தோல்வியை எடுத்துரைக்கும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

    • விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
    • அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.

    இந்நிலையில், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

    நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
    • சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான  அறிக்கை கேட்டுள்ளார்.

    ×