search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி பலாத்காரம்"

    • தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார்.
    • ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடாபூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.

    கிராமத்தில் மைனர் போல சுற்றித்திரிந்த இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியே அமர்திருந்தார்.

    அங்கு வந்த சிவக்குமார் மூதாட்டி தனிமையில் வசித்து வந்ததை தெரிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து திடீரென மூதாட்டியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அறை கதவை பூட்டினார்.

    மூதாட்டி என்று கூட பார்க்காமல் இரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்து மூதாட்டியை பலாத்காரம் செய்தார்.

    காலையில் தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராமத்தில் உள்ள 6 பெண்களை சிவக்குமார் ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது மூதாட்டி என்று கூட பார்க்காமல் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

    இப்படியே விட்டால் இன்னும் பல கொடுமைகளை செய்வார். அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மூதாட்டியின் உறவினர்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.
    • போலீசார் ராகேசை கைது செய்தனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி அருகே உள்ள ஹபீஸ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது35). அதே பகுதியில் கணவர், மகனை இழந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். அந்த மூதாட்டியின் உறவினர்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று மதியம் ராகேஷ் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் உறவுக்கார பெண் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் இதைப்பார்த்ததும் சத்தம் போட்டார். உடனே ராகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பாதிக்கப்பட்ட மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் இந்த சம்பவத்தில் அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராகேசை கைது செய்தனர்.

    • கைதான செல்வம் மது, சாராயம், போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்.
    • கொலையுண்ட பழனியம்மாள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வேலை பார்த்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி வண்ணாம்பாளையம் பகுதியில், கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி, கரும்பு காட்டுக்குள் பாவாயி (வயது 70) என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக கிடந்தார். இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி பள்ளிபாளையம் அருகே அண்ணாநகர் காட்டுப்பகுதியில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வந்த பழனியம்மாள் (64) என்பவர், கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். 2 மூதாட்டிகளும் தனியாக வசித்து வந்த நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 சம்பவமும் ஒரே மாதிரியாக இருந்ததால், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 மூதாட்டிகளையும் கொடூரமாக கொலை செய்தது சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (32) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கைதான செல்வம் மது, சாராயம், போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையம் அருகே அண்ணாநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். எப்போதும் போதையில் இருக்கும் செல்வம் சைக்கோ போல் சுற்றித்திரிந்துள்ளார். காட்டு வேலைக்கு மட்டும் செல்வார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஓடப்பள்ளி பகுதி பக்கமாக சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த பாவாயியை கொலை செய்துள்ளார். பின்னர், போலீசார் சந்தேகிக்காதபடி எப்போதும்போல் காட்டு வேலைக்கு சென்று வந்தார்.

    இதையடுத்து, கடந்த 12-ந் தேதி அண்ணாநகர் அருகே காட்டுப்பகுதியில் தனியாக இருந்த பழனியம்மாளை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது காதில் இருந்த தங்க தோட்டை திருடி சென்று விட்டார்.

    இது தொடர்பாக செல்வத்தை தேடி வந்தோம். அவனிடம் செல்போன் இல்லை, இதனால் கண்டுபிடிக்க சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று செல்வத்தை கைது செய்தோம்.

    கொலையுண்ட பழனியம்மாள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வேலை பார்த்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. கைதான செல்வத்தை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    ×