search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்"

    • மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
    • மின் நுகர்வோர்கள் கேட்கிற கேள்விகளுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், பிற அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

    முகாமில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசுகையில், கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள், நெல்லை , தென்காசி மாவட்டங்களில் கடும் இடி, மின்னலுடன் மழை பொழிவு, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது. இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கிற கேள்விகளுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

    ×